search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surprise"

    • பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    • அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது. சாம்சங் நிறுவனம் பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது ஸ்மாட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம். கேலக்சி மாடல் ஃபோன்கள் மற்றும் நோட் மாடல் ஃபோன்களில் திரையில் பச்சை நிற கோடுகள் வருவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.



    இந்நிலையில் இந்த புகார்களுக்கு தீர்வு காணும் விதமாக சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    கேலக்சி மாடல் ஃபோன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


    இதன்படி கேலக்ஸி S20, S20+,S20 அல்ட்ரா, நோட் 20, நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி S21, S21+,S21 அல்ட்ரா, கேலக்ஸி 21 அல்ட்ரா மாடல் ஃபோன்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் S21 FE, S20 FE, S22, S22+ போன்ற ஃபோன் மாடல்களில் இந்த அறிவிப்பு பொருந்தாது என்பதால் வாடிக்கையாளர்கள் இடையே ஏமாற்றமும் நிலவிவருகிறது.

    • தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து புதிய நகராட்சி அலுவலக கட்டிடம். எரிவாயு தகனமேடை.உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது மண்டல இயக்குனர் பூங்கொடி அருமைக்கன்.மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன்.தாரமங்கலம் நகராட்சி ஆணையாளர் சேம் கிங்ஸ்டன். பொறியாளர் பிரேமா.மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்யா.நகராட்சி பொறியாளர் ஹரிகரன். குமாரபாளையம் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன். எடப்பாடி நகராட்சி பொறியாளர் முருகேசன். ராசிபுரம் பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    • மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படை கமிஷனர் பிஜுராம் தலைமையில் 35 பேர் அடங்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
    • அதிநவீன துப்பாக்கிக ளுடன் மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேட்டூர்:

    மேட்டூர் போலீஸ் நிலைய உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர், மேட்டூர், கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் நிலை யங்களில் இந்திய துணை ராணுவமான கோவையில் உள்ள மத்திய அதிவிரைவு பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படை கமிஷனர் பிஜுராம் தலைமையில் 35 பேர் அடங்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    மேட்டூர் அணை ஆய்வு

    தமிழக -கர்நாடக எல்லையில் உள்ள இந்த போலீஸ் நிலைய எல்லைக ளில் மத கலவரங்கள் ஏற்பட்டுள்ளனவா? ஏற்ப டக்கூடிய சூழ்நிலை உள்ள னவா? என்றும், மதங்களின் அடிப்படையில் உள்ள மக்களின் எண்ணிக்கை குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் இயற்கை பேரி டர் காலங்க ளில் விரைந்து சென்று மீட்புப் பணி மேற்கொள்வது குறித்து காவிர கரை பகுதியி லும், மேட்டூர் அணை பகுதி யிலும் ஆய்வு செய்தனர். அப்போது அதிநவீன துப் பாக்கிகள், மீட்பு உபகர ணங்கள் ஆகியவற்றுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    பரபரப்பு

    அதிநவீன துப்பாக்கிக ளுடன் மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூடலூர்

    கேத்தி, மசினகுடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் திடீரென ஆய்வு செய்தனர். பின்னர் ஆதிவாசி மக்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கினர். ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு  தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிலையில் கேழ்வரகு வழங்கும் திட்டம் ரேஷன் கடைகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். கேத்தி, உல்லாடா, அதிகரட்டி, வாழைத்தோட்டம், மசினகுடி ஆகிய ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கூறியதாவது:- மத்திய அரசு தமிழகத்துக்கு மண் எண்ணை அளவை குறைத்து வழங்கி உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடிய மண் என்ணை அளவு குறைந்துள்ளது. 2007-ம்ஆண்டு முன்னாள் முதல் - அமைச்சர் மு. கருணாநிதியால் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையிலும் தரமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மத்திய அரசு மண்எண்ணை வழங்குகிறது. அதை தமிழக அரசு மானிய விலையில் மக்களுக்கு வழங்குகிறது. கூடலூர் பகுதியில் மின்சார விநியோகப் பிரச்சினை உள்ளதால் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ திராவிட மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் லோகநாதன், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மிர்ஹாசன் முசாபர் இம்தியாஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா‌ என‌‌ வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.

    கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்–படும் ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவை கடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்ப–டையில் அவ்வழியாக வந்த லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்–களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை எதுவும் பிடிபட–வில்லை எனவும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

    வழியாக வந்தால் அனைத்து வாகனங்க–ளையும் நிறுத்தி சோதனை செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×