search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அதிவிரைவுப்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    மத்திய அதிவிரைவுப்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு

    • மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படை கமிஷனர் பிஜுராம் தலைமையில் 35 பேர் அடங்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
    • அதிநவீன துப்பாக்கிக ளுடன் மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேட்டூர்:

    மேட்டூர் போலீஸ் நிலைய உட்கோட்டத்தில் உள்ள கொளத்தூர், மேட்டூர், கருமலைக்கூடல், மேச்சேரி போலீஸ் நிலை யங்களில் இந்திய துணை ராணுவமான கோவையில் உள்ள மத்திய அதிவிரைவு பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படை கமிஷனர் பிஜுராம் தலைமையில் 35 பேர் அடங்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    மேட்டூர் அணை ஆய்வு

    தமிழக -கர்நாடக எல்லையில் உள்ள இந்த போலீஸ் நிலைய எல்லைக ளில் மத கலவரங்கள் ஏற்பட்டுள்ளனவா? ஏற்ப டக்கூடிய சூழ்நிலை உள்ள னவா? என்றும், மதங்களின் அடிப்படையில் உள்ள மக்களின் எண்ணிக்கை குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தனர். பின்னர் இயற்கை பேரி டர் காலங்க ளில் விரைந்து சென்று மீட்புப் பணி மேற்கொள்வது குறித்து காவிர கரை பகுதியி லும், மேட்டூர் அணை பகுதி யிலும் ஆய்வு செய்தனர். அப்போது அதிநவீன துப் பாக்கிகள், மீட்பு உபகர ணங்கள் ஆகியவற்றுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    பரபரப்பு

    அதிநவீன துப்பாக்கிக ளுடன் மத்திய அதிவிரைவு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×