search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Line"

    • பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
    • அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது. சாம்சங் நிறுவனம் பல்வேறு புது வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது ஸ்மாட்போன் சந்தையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம். கேலக்சி மாடல் ஃபோன்கள் மற்றும் நோட் மாடல் ஃபோன்களில் திரையில் பச்சை நிற கோடுகள் வருவதாக தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.



    இந்நிலையில் இந்த புகார்களுக்கு தீர்வு காணும் விதமாக சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    கேலக்சி மாடல் ஃபோன்களின் திரையில் பச்சை நிறக்கோடுகள் தெரிந்தால் டிஸ்ப்ளேவை மாற்றிக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


    இதன்படி கேலக்ஸி S20, S20+,S20 அல்ட்ரா, நோட் 20, நோட் 20 அல்ட்ரா, கேலக்ஸி S21, S21+,S21 அல்ட்ரா, கேலக்ஸி 21 அல்ட்ரா மாடல் ஃபோன்களுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் S21 FE, S20 FE, S22, S22+ போன்ற ஃபோன் மாடல்களில் இந்த அறிவிப்பு பொருந்தாது என்பதால் வாடிக்கையாளர்கள் இடையே ஏமாற்றமும் நிலவிவருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோவின் 3-வது கட்ட பச்சை வழித்தட ரெயில் சேவையை காணொளி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்தார். #PMModi #DelhiMetro #GreenLine

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து குருகிராம், ஃபரீதாபாத் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் ஏற்கனவே மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், டெல்லியின் முந்கா பகுதியில் இருந்து அரியானாவின் பகதூர்கர் பகுதி வரை புதிய மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தர்லோக் - முண்ட்கா வரையிலான பச்சை வழித்தடம் இப்போது முண்ட்கா முதல் பகதூர்கர் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

    சுமார் 11 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த பச்சை வழித்தட மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொளிகாட்சி வழியே பிரதமர் மோடி அத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.



    இந்நிகழ்ச்சியில், மத்திய மந்திரி ஹர்தீப் பூரி மற்றும் அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இன்று மாலை 4 மணியில் இருந்து பொதுமக்களுக்காக இந்த புதிய மெட்ரோ ரெயில் சேவை செயல்பட தொடங்கியது.

    இந்த திட்டத்தினை தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, பகதூர்கர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. அங்கு பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து மாணவர்கள் டெல்லிக்கு கூட சென்று பயில்கின்றனர். அரியானாவிற்கு நுழைவு வாயிலாக உள்ள இந்த பகுதியில் தொடங்கவுள்ள மெட்ரோ சேவை மிக பயனுள்ள வகையில் இருக்கும் என கூறினார்.  #PMModi #DelhiMetro #GreenLine
    ×