search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலகவுண்டம்பட்டி அருகே தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து
    X

    தீ விபத்து ஏற்பட்ட தொழிலாளி வீட்டை படத்தில் காணலாம். 

    வேலகவுண்டம்பட்டி அருகே தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியார் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தகரக் கொட்டகை, வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியார் கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், அல்லிமுத்து வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான தகரக் கொட்டகை, வீட்டில் இருந்த பாத்திரங்கள், உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

    மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×