search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி"

    • சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இக்கரை நெகமம் கெஞ்சனூர் பகுதியில் ஓடும் பவானி ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதந்து கொண்டிருப்பதாக வி.ஏ.ஓ. ராஜசேகரன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபருக்கு சுமார் 55 வயது இருக்கும் எனவும், இறந்த நபர் வெள்ளை நிற கட்டம் போட்ட சட்டை, சிமெண்ட் நிற அரைக்கால் டிராயர் அணிந்துள்ளார்.

    ஆனால், இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது.
    • பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.

    பவானி:

    பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) காலை சங்கமேஸ்வரர் சன்னதியில் கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது. இதை தொடர்ந்து நாளை மாலை பஞ்சமூர்த்தி கேடயம் புறப்பாடு நடக்கிறது.

    இதை தொடர்ந்து வரும் 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து அபிஷேக ஆராதனையும், அன்று இரவு சேஷ வாகனம் மற்றும் பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதி காலை அபிஷேக ஆராதனை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடக்கிறது.

    விழாவையொட்டி வரும் 30-ந் தேதி காலை அபிஷேக ஆராதனையும், மாலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு மற்றும் 63 நாயன்மார்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி அபிஷேக ஆராதனை மற்றும் சாமி புறப்பாடும் நடக்கிறது.

    இதை தொடர்ந்து வரும் 3-ந் தேதி காலை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் விழாவும், அன்று மாலை சங்கமேஸ்வரர் புறப்பாடும், 4-ந் தேதி காலை வேத நாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் விழாவும், அன்று மாலை மகா அபிஷேகமும் நடக்கிறது.

    வரும் 5-ந் தேதி காலை அபிஷேக ஆராதனையும் அன்று மாலை பரி வேட்டை சாமி புறப்பாடு, 6-ந் தேதி காலை தீர்த்தவாரியும், அன்று மாலை பிஷாண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதைதொடர்ந்து வரும் 7-ந் தேதி காலை நடராஜர் அபிஷேக ஆராதனை புறப்பாடும், அன்று மாலை மஞ்சள் நீர் விழாவும், சாமி புறப்பாடும், அவரோஹணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வந்து பொங்கல் விழா தொடங்கியது.
    • செல்லியாண்டியம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்து வந்து பொங்கல் விழா தொடங்கியது.

    தொடர்ந்து இன்று காலை மூலவர் மற்றும் உற்சவர் செல்லியாண்டி அம்மனுக்கு சிவா சிவாச்சாரியார் குழுவினர் மூலம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    பின்னர் செல்லியாண்டியம்மன் உற்சவர் தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் ஓம் சக்தி, ஓம் சக்தி என கோஷங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. நகரில் முக்கிய வீதி வழியாக சென்று தேர் நிலை அடைந்தது.

    • ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் ஒரு ஓட்டு வீடு சேதம் ஏற்பட்டு வீட்டை வெள்ளம் சூழ்ந்து திடீரென இடிந்து விழுந்தது.
    • இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் மற்றும் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    பவானி:

    மேட்டூர் அணை நிரம்பி யதை யொட்டி அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.

    இதேபோல் அம்மா பேட்டை, பவானி பகுதி களில் உள்ள காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

    இதையொட்டி பவானி மற்றும் அம்மா பேட்டை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் அருகே உள்ள பள்ளி மற்றும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த ஒரு சில வீடுகள் பாதிப்பு அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் பவானி பாலக்கரை பகுதியை சேவர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி முனிரத்தினம். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் வீடு பாலக்கரை பகுதியில் காவிரி கரை யோரம் அமைந்துள்ளது.

    ஆற்றில் அதிகளவவு தண்ணீர் செல்வதால் இவர் களது வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. இதையொட்டி அவர்கள் ௪ பேரும் அருகே உள்ள ஒரு முகாமில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் அவர்களது வீடு ஓட்டு வீடு என்பதால் சேதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவர்களது வீடு வெள்ளம் சூழ்ந்து திடீரென இடிந்து விழுந்தது. அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்ட தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன் மற்றும் பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சேதமான பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    • மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.

    ஈரோடு:

    மேட்டூர் அணையிலிருந்தும், பவானிசாகர் அணையில் இருந்தும் காவிரி ஆறு மற்றும் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் ஈரோடு மாவட்ட கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒரே நேரத்தில் காவிரி ஆறு, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, நெருஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற கரையோரப் பகுதியில் வசித்த 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் 14 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அதேபோல் பவானிசாகர் அணையில் இருந்தும் 25 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. பவானி ஆறு, காவிரி ஆற்றில் ஒரே நேரத்தில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால் பவானி கூடுத்துறையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி பகுதியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதேப்போல் கொடுமுடியிலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.

    இதேப்போல் பவானிசாகர் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் உபரி நீர் திறப்பு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது.

    இன்று மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இதேபோல் பவானிசாகர் அணைக்கு 5 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    இதனால் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

    வீடுகளில் சூழ்ந்த வெல்லம் வடியத் தொடங்கிவிட்டது. எனினும் வீடுகளில் சேரும் சகுதியுமாக காட்சியளிக்கிறது. இதனை பொதுமக்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை, பவானி, ஈரோடு, கருங்கல்பாளையம், கொடுமுடி போன்ற அனைத்து காவிரி ஆற்றிலும் இயல்பு நிலை திரும்பியது. தற்போது முகாமில் ஒரு சில மக்களே தங்கியுள்ளனர். அவர்களும் நாளைக்குள் வீடு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பரிசல் பயணம் தொடக்கம்
    • பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் பரிசல் மூலம் சென்று வருகின்றனர்.

    சிறுமுகை:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கேரளம் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 5 நாள்களுக்கு மேலாக பவானி ஆற்றில் 10ஆயிரம் கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் சென்று கொண்டு உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் பில்லூர் அணையில் இருந்து 6,500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.

    இருப்பினும் பவானி ஆறு வழியாகவும், நீலகிரி மாவட்டம் மாயாறு வழியாகவும் பவானிசாகர் அணைக்கு செல்லும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான சிறுமுகை, லிங்காபுரம், காந்தவயல் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது.

    இதனால், லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல், காந்தையூர், மேலூர், ஆலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை பாலம் மூழ்கியதால் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட 4 கிராம மக்கள் சென்றுவர பரிசல் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மேற்கண்டகிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் பரிசல் மூலம் சென்று வருகின்றனர். இதனிடையே, இந்த பகுதி மக்களுக்கு விரையில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்து நடந்து வருகிறது.

    இதையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின்போது வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் கயிறு கள் பயன்படுத்தி எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், நீரில் மூழ்கி மயக்க நிலை அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பவானிசாகர் அண்ணா நகர் மீனவர் காலனி பகுதியில் உள்ள பவானி ஆறு வட்டபாறை பகுதியில் முடுக்கன் துறை கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி மற்றும் கிராம உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பவானி ஆற்றில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி முதியவர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×