search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vetri Maran"

    • சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
    • சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை. வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் இன்னும் முடியாமல் இருப்பதனால் வாடிவாசல் தொடங்க இன்னும் காலாவகாசம் தேவைப்படுகிறது.

    சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வாடிவாசல் அதிக கால அவகாசம் எடுப்பதனால் சூர்யா அதற்குள் வேறொரு திரைப்படத்தில் நடிக்கலாம் என எண்ணியுள்ளார். இதனால் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தனது 45- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் ரிலீசுக்குப் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

    ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை. வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் இன்னும் முடியாமல் இருப்பதனால் வாடிவாசல் தொடங்க இன்னும் காலாவகாசம் தேவைப்படுகிறது.

    சூரியாவின் 45 படமாக வாடிவாசல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வாடிவாசல் அதிக கால அவகாசம் எடுப்பதனால் சூர்யா அதற்குள் வேறொரு திரைப்படத்தில் நடிக்கலாம் என எண்ணியுள்ளார். இதனால் இயக்குனர் அட்லியுடன் இணைந்து தனது 45- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
    • கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

    சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக்க அறிமுகமாகினார்.

    தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலைமை நிலவி வருகிறது. கீழ்த்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் டீசர் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட்.
    • முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.

    தற்பொழுது விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

    இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணியளவில் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கடந்த மே 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன் , மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன்.
    • படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மே 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன் , மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருடன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார் சூரி. அதைத் தொடர்ந்து கதாநாயகனாக கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படம் கிராமப்புற உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று படத்தின் இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாலருக்கும் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தற்பொழுது மக்களுக்கு நன்றி தெரிவித்து சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.
    • வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள கருடன் படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது.

    நடிகர் சூரி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

    அந்த படத்தில் இருந்து நடிகர் சூரி, பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பெயர் பெற்றார். ஆனால் காமெடி கதாப்பாத்திரத்தில் மட்டும் நடித்துக் கொண்டு இருந்த சூரி கதாநாயகனாக ஆக நேரம் வந்தது.

    சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

    அந்த வகையில் விடுதலை 2, கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சூரி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சூரியுடன் இணைந்து சசிகுமார் , சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் தயாரிப்பிலும் கதையிலும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த மே 31ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. நகர்புறங்களை விட கிராம் புறத்தில் உள்ள ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நாளுக்கு நாள் படத்தின் திரையரங்குகளில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    மேலும் இந்த படத்தில் நடிகர் சூரி முதன்முறையாக ஆக்சன் ஹீரோவாக களமிறங்கி பல்வேறு தரப்பினரடையே பாராட்டுகளை பெற்று வருகிறார்.

    இந்த படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவையும், அதிக வசூலையும் பெற்று வருகிறது. தற்போது கிடைத்த தகவலின் படி கருடன் திரைப்படமானது உலகம் முழுவதும் 26 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டதட்ட 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து கருடன் திரைப்படமும் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் சூரி அடுத்து நடித்து வெளிவர இருக்கும் கொட்டுகாளி மற்றும் விடுதலை2 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • . இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார் சூரி. அதைத் தொடர்ந்து வெளியாகும் கருடன் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதி இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சூரி மிகவும் கோவத்துடனும், வெறியுடனும் காணப்படுகிறார். சூரி எப்பேற்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு சூரி கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    சசிகுமார் மற்றும் உன்னிமுகுந்தன் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். உன்னி முகுந்தனுக்கு கீழ் வேலை செய்யும் விசுவாசியாக இருக்கிறார் சூரி. உன்னி முகுந்தனுக்காக எந்த எல்லைக்கும் சென்று எந்த வேலையயும் செய்பவராக காட்சிகள் அமைக்க பட்டிருக்கிறது. டிரைலர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது, சூரி மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் படஹ்ட்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    டிரைலர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    சூரி பல திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ஆனால் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் சூரி திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. சூரிக்கு மாபெரும் அங்கீகாரத்தை கொடுத்தது.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை- 2 பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.

    இந்த படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுத சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னிமுகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

    சிவகார்த்திகேயன் விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து பிரபலங்களுக்கும் கை கொடுத்தார். விஜய் சேதுபதியை கை கொடுத்து கட்டிப்பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை.
    • எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. விடுதலை பாகம் 1 சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது.

    விடுதலை பாகம் 2 சில காட்சிகள் படமாக்க பட்ட நிலையில், விஜய் சேதுபதியை வைத்து இன்னும் 20 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகள் உள்ளது. விஜய் சேதுபதி பல்வேறு படங்கள் பல்வேறு மொழியில் நடித்து வருவதால் அவரால் 20 நாட்கள் கால் ஷீட் கொடுக்க இயலவில்லை. அதனால் படப்பிடிப்புகள் தாமதம் ஆகின்றன என தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

     

    இந்நிலையில் படத்தை குறித்து மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளார். இது குறித்து விடுதலை 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகிய புகைப்படம் அதை உறுதி படுத்தியுள்ளது. எஸ்.ஜே சூர்யா எம்மாதிரி கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு தான் நடிக்க போவதில்லை என்றும் முழு நேர அரசியல் ஈடுபடவுள்ளதாகவும் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.

    விஜய் அரசியலுக்கு வந்தது தொண்டர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருப்பக்கம் இருந்தாலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    இந்நிலையில், விஜய்யின் 69-வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் விஜய்யிடம் கதை சொல்லியிருந்த நிலையில் இருவருக்கும் இருந்த அடுத்தடுத்த பட வேலைகளால் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

    • சூரி நடிப்பில் உருவான திரைப்படம் ‘விடுதலை 1’ மற்றும் ‘விடுதலை 2’.
    • இப்படங்கள் நெதர்லாந்தில் திரையிடப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கொட்டுக்காளி', 'கருடன்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் உருவான 'விடுதலை 1', 'விடுதலை 2', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்கள் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.


    இதில், 'விடுதலை' முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் ஐந்து நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டல் கொடுத்து படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    ×