search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison pill"

    • போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லியாக உபயோகப்படுத்தும் விஷ மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து கிடந்தவர் காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்கோடம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் கணேசன்(வயது 55) என்பதும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது கால் சட்டை பையில் தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லியாக உபயோகப்படுத்தும் விஷ மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவரது மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர்ரோடு பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் (35). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவிலலை.

    இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்தவர்களிடம் நான் கடையில் வைத்திருந்த விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் எனபது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முதியவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனி 6-வது வீதியை சேர்ந்தவர் பொன்னரசு (60). இவா் கடந்த 10 ஆண்டுகளாக மன சோர்வு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் குணமாகததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பொன்னரசு சம்பவத்தன்று சல்பாஸ் மாத்திரையை (விஷ மாத்திரையை) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பொன்னரசை மீட்டு சிகிச்சைக்காக கருங்கல்பா–ளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை–யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×