search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டு"

    • இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'
    • இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

    இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது.
    • எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் சிங்கமுத்து பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு இடையே சிங்கமுத்துவிடம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் குறித்து கேட்ட போது அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் ஆட்சி கொடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து?

    பதில்:-அவர் ஆசை அப்படி இருக்கிறது. தமிழ்நாட்டை முதலில் சீர் திருத்தட்டும். தமிழக மக்கள் கண்ணீரும், கவலையுமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழ் மக்கள் வாடி வதங்கி இருக்கிறார்கள். முதலில் தமிழகத்தை சரி பண்ணட்டும். பிறகு எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.

    கேள்வி:-தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க. வுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் செய்வது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறதே?

    பதில்:- கமல்ஹாசன் மக்களின் மனங்களை அறியாதவர். மக்களோடு மக்களாக இருக்காதவர். திடீரென ஒரு கட்சி தொடங்கி புரட்சி தலைவர் போலவும், புரட்சி தலைவி போலவும் நாட்டை பிடித்து விடலாம் என்று அவர் கற்பனையில் இருக்கிறார். அது நடக்காது. கமல்ஹாசன் எப்போதும் ஒரு ஓட்டுக் குதிரையில் பயணம் செய்வார் அவ்வளவுதான்.

    கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் பெண்களுக்கு வழங்கப் படும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதே?

    பதில்:- எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. இது எதையுமே அவர்களால் செய்ய முடியாது.

    கேள்வி:- இந்த தேர்தலில் நடிகர் வடிவேலு மவுனம் காத்து வருகிறாரே?

    பதில்:-வடிவேலு மவுனம் காத்து வருவதை என்னை விட பொருத்தமாக யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஒரே திரைத்துறையில் பயணம் செய்தவர்கள். அரசியல் எனக்கு ராசியில்லை என்று அவரே சொல்லிவிட்டாரே? பிறகு ஏன் அவரை அழைக்கிறார்கள்?

    கேள்வி:-பிரதமர் மோடி தான் என்னை ராமநாதபுரத்தில் போட்டியிட சொன்னார் என ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்து வருகிறாரே?

    பதில்:-அவர் சொல்வது அவருக்கு மட்டும் தானே தெரியும். நாம் எல்லாம் கேட்டோமா? பொய் கூட சொல்லலாம் அல்லவா?

    கேள்வி:-பிரசார களத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

    பதில்:-அமோகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம். நான் மற்றும் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன், அருள்மணி உள்ளிட்ட பலர் பல இடங்களுக்கு பிரசாரத்துக்காக சென்று இருக்கிறோம். முன்பு இருந்ததை விட இரட்டை இலைக்கு புது மவுசு வந்துள்ளது. காரணம் 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட அவஸ்தைகள் போதாதா? அ.தி.மு.க. ஆட்சி மலராதா? என்று மக்கள் ஏங்கி தவிப்பதை நாங்கள் காண்கிறோம்.

    கேள்வி:-இந்தியா கூட்டணி பற்றி உங்கள் பார்வையில்?

    பதில்:-இந்தியா கூட்டணி இல்லை அவர்கள் இந்திய கூட்டு களவாணிகள் என்று மக்கள் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.
    • வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 100 சதவீத வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் 100 வயது மூதாட்டி தனது வாக்கை தபால் மூலம் பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை (வயது100). இவரது கணவர் ராயப்பன். அவர் இறந்துவிட்டார்.

    மூதாட்டி அஞ்சலை பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது வாக்கை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்தார். அவரது வீட்டுக்கு தபால் ஓட்டு பெட்டியுடன் அதிகாரிகள் சென்றனர். அங்குள்ள பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.

    அவர் 2-வது முறையாக தபால் ஓட்டு போட்டுள்ளார். 2021-ம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளார்.

    இதையொட்டி அவருக்கு வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    நிகழ்ச்சியின் போது தேர்தல் சிறப்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் தபால் வாக்கு பதிவு அதிகாரி பாரதிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது அவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது
    • நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள்

    தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில், "நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தால் நமக்கென்ன, இல்லை யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம். ஒட்டு போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இது போன்ற மனநிலையை தூக்கி ஓரமா வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லையென்றாலும் நமது குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நமது அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.

    காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது. உங்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்களால் நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்கள். அதில் நம்முடைய சுயநலமும் இருக்கிறது. நாம் எல்லாரும் சேர்ந்தது தானே நாடு.

    நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள். இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லை என்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டுப் போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்கள். தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்கள்" என்று பேசியுள்ளார்.

    • தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்.
    • ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன்

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேட்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.

    ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.

    இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு 'பலாப்பழம்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த தேர்தலில் தி.மு.க. 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் ஆட்களை நியமித்து பணியாற்றி யார்-யார் எந்த கட்சியை சார்ந்தவர் என பட்டியல் எடுத்து அதற்கேற்ப வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு தெருவிலும் யார் யார் உள்ளூர்காரர் யார் வெளியூர்காரர் என எங்கு ஓட்டு போடுவார்கள் என்பதை அறிந்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொருவரும் சொந்த பணத்தை செலவு செய்து கலக்கத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு மாவட்ட பொறுப்பு அமைச்சர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் சேரும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி இருந்ததுடன், அனைத்து தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதன் காரணமாக உள்ளாட்சி பொறுப்பில் உள்ள பகுதி கழக, ஒன்றிய, நகர பேரூர் சட்டமன்ற கழக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் சக்திக்கேற்ப சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர். முக்கியமான பணிகளுக்கு மட்டுமே வேட்பாளர் பணம் கொடுப்பதால் மற்ற தேர்தல் செலவுகளுக்கு அந்தந்த உள்ளூர் நிர்வாகிகளே பணம் செலவு செய்வதை காண முடிகிறது.

    • அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது.
    • வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தோ்தலில் வாக்களிக்க வரையறுக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்கள் எவை எவை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    கடந்த தோ்தல்களைப் போலவே, வரும் பாராளுமன்ற தோ்தலிலும் புகைப்பட வாக்காளா் அடையாள அட்டையுடன் சோ்த்து, மொத்தம் 13 வகையான ஆவணங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன.

    அதன்படி, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் அட்டை), தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப் பட்ட தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்கினைச் செலுத்த லாம்.

    அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது. வாக்காளா் பட்டியலில் பெயா் இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளா் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக வாக்காளா் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளா் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம்பெற்றிருக்கும். மாவட்ட தோ்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் தகவல் சீட்டு வினியோகிக்கப்படும்.

    வாக்குச் சாவடியில் வாக்காளா் தகவல் சீட்டைக் காண்பித்து வாக்களிக்க முடியாது. அது அடையாள ஆவணம் இல்லை. ஒரு வாக்காளா் வேறொரு சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளா் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்கலாம். அந்த அடையாள அட்டையையும் இந்திய தோ்தல் ஆணையத்தின் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால், அந்த வாக்காளருடைய பெயா் வாக்களிக்கச் செல்லும் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை
    • தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன்

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அவர் இன்று வேலூரில் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "எத்தனையோ கட்சிகள் எத்தனையோ இடங்களில் போட்டியிடட்டும். நான் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுகிறேன். ஏனெனில் எனக்கு வேலூரை விட்டால் வேறு வழியில்லை. வேலூர் மக்களுக்கும் என்னை விட்டால் வேறு வழியில்லை. நான் நல்ல வேலைக்காரனாக உழைப்பேன். உங்களுக்காக கழுதை போல பொதி சுமப்பேன்.

    இந்திய ஜனநாயக புலிகள்தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும். தற்போது சுயேச்சையாகதான் நிற்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை.

    ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வச்சிட்டு ஓட்டு கேட்கப் போறேன் என்று நகைச்சுவையாக பேசினார் மன்சூர் அலிகான்.

    • நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர்.
    • பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் நோக்கில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., வினர் பல்வேறு தேர்தல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர். அதன்படி தினமும் மண்டலம், சக்தி கேந்திரம், பூத் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

    தொழில் நகரமான திருப்பூரில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் என பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி பல்வேறு பனியன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள், தொழில் துறையினரின் ஓட்டுக்களை வளைக்கும் நோக்கில், பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சில நாட்களுக்கு முன் திருப்பூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

    அதில், ராஜஸ்தான் மாநில எம்.பி., ராஜேந்திரகுமார் கெலாட் பங்கேற்று கலந்துரையாடினார். இரண்டாம் கட்டமாக, மற்றொரு கூட்டத்தை பா.ஜ.க.,வினர் வரும் 12-ந் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., நிர்வாகிகள் கூறியதாவது:-திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி வருகின்றோம். இப்பணி பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் நடத்தி வருகின்றனர். தற்போது, இரண்டாம் கட்டமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூருக்காக நீங்கள், உங்களுக்காக திருப்பூர், எங்களுடன் நீங்கள், உங்களுடன் நாங்கள் என பல தலைப்புகளில் அவர்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×