search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 3 lakh"

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பலியான 13 பேர் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. தலா ரூ.3 லட்சம் வழங்கினார். #SterliteProtest #TTVDhinakaran
    சென்னை:

    தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட மக்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த 3 நாட்களாக நேரில் சந்தித்து துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் வீடுகளுக்கும் நேரில் சென்று அவர் தலா ரூ.3 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கினார்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொருவரையும் சந்தித்து தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கினார்.

    சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணி செல்வராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர் நிருபர்களிடம் டி.டி.வி.தினரகன் கூறியதாவது:-


    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பது அரசியல் கட்சித்தலைவர்களின் கடமை. ஆனால் அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி அரசு வழக்கு போடுவது தவறான அணுகு முறையாகும்.

    நான் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது மனம் குமுறி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். என்பது தான் அவர்களது ஒரே கோரிக்கையாக உள்ளது. கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை நான் சந்தித்தது அரசியலுக்காக அல்ல. நான் ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர். தூத்துக்குடியில் உள்ளவர்கள் அனைவரும் உன் உறவினர் மாதிரி தான்.

    இது உண்மையா? மக்களுக்கு இது மாதிரி பிரச்சினை இருக்கிறபோது என்னவென்று போய் பார்க்கப்போகிறோம். 3 நாட்களாக நான் இங்கு சுற்றி வருகிறேன்.

    போலீசாரால் பிடித்து செல்லப்படும் நபர்களை சட்டத்துக்கு புறம்பாக நடத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தினேன். அதற்கு அவர் ஒத்துழைப்பதாக கூறினார். தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்புவது தான் எங்கள் நோக்கம் என்றார்.

    இங்குள்ள மக்களின் இன்னொரு கோரிக்கை 13 பேரை சுட்டு கொன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest #TTVDhinakaran
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #sterliteprotest #TTVDhinakaran
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். வார்டு வாரியாக சென்று அவர் காயமடைந்தவர்களை பார்த்து விபரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    தூத்துக்குடியில் இருந்து காவல்துறை வெளியேறவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தினார்.



    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். திமுக சார்பில் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #sterliteprotest #TTVDhinakaran

    ×