search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொல்லை"

    • அரசு ஆயுர்வேத கல்லூரியின் லேப்-டெக்னீசியன் சிறையில் அடைப்பு
    • தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டா ரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவ படிப்பு முடித்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக அங்கேயே பணியாற்றி வருகின்றனர். இதுபோக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏராளமான டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 35 வயதான பெண் டாக்டர் ஒருவருக்கு, ஆஸ்பத்திரியின் உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) ஆன்டனி சுரேஷ்சிங் (வயது 52) என்பவா் தொல்லை கொடுத்தார். மேலும் அவர், தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார். அதுபற்றி சம்பந்தப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்டனி சுரேஷ்சிங்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படிக்கும் மேலும் 2 மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. அதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேரும் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனத்துக்கு ஆன்லைன் மூலமாக தனித் தனியாக 2 புகார் மனு அனுப்பியுள்ளனர்.

    அந்த மனுக்களில், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் சுசீந்திரம் காக்கமூர் பகுதியை சேர்ந்த வைரவன் (வயது 35) என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் புகார் மனு மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தர விட்டார். அதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர்.

    இதுபற்றி போலீசார் கூறுகையில், "கைதான வைரவன் மீது 2 மருத்துவ மாணவிகள் புகார் அளித்துள்ளனர். தங்களை பாலியல் ரீதியாக உரசியதாக புகாரில் கூறியி ருக்கிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் வைரவன் 2 மாணவிகளுக்கும் பாலி யல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. எனவே அவர் கைது செய்யப்பட் டுள்ளார்" என்றனர்.

    இதனையடுத்து கைதான வைரவனை போலீசார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நாகர்கோவில் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைரவன் நாகர்கோவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வைரவனுக்கு நாளை மறுநாள் (27-ந்தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஒரு நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள் ளையை போலீசார் கைது செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து வக்கிரம்
    • கூலித்தொழிலாளி மீது போக்சோ வழக்கு

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுவன் கடந்த 7-ந் தேதி தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வீட்டிற்கு வெளியே சிறுவன் விளையாடி கொண்டருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ராமராஜ் என்பவர் சிறுவனிடம் வந்து நைசாக பேச்சு கொடுத்தார். அவர் சிறுவனிடம் வா நாம் விளையாட போகலாம் என அழைத்தார்.

    சிறுவனும் விளையாட தானே என நினைத்து அவருடன் சென்றார். ராமராஜ் அந்த பகுதியில் உள்ள பள்ளியின் பின்புறம் ஆட்கள் நடமாட்டம் இல் லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து சிறுவ னுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்தார். மேலும் இதனை வெளியில் கூறி னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன சிறுவன் யாரிடமும் இதனை கூறாாமல் இருந்து வந்தான். இந்த நிலையில் சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே அவரது தாயார் விசாரித்தார்.

    அப்போது சிறுவன் தனக்கு நடந்த சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ராமராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும் அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தினமும் பின் தொடர்ந்து சென்று தாலலை கொடுத்தப்படி இருந்துள்ளார். நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். பின்பு டியூசன் முடிந்ததும் இரவில் பீச் ராடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மாணவிக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அங்கு வந்தார்.

    அவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை செய் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார்.இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிப ரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க விரும்பவில்லை.

    இதனால் அந்த வாலிபர் மீது போலீசாரால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுபோன்ற செயலில் ஈடுப டக்கூடாது என்று அந்த வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். டியூசனுக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி பருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பீச் ரோடு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    • சுமார் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியை சேர்ந்த சுமார் 70 வயது மூதாட்டி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் பிரபாகரன் (38), என்பவர் கடந்த 9ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பிரபாகரனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது.
    • வாலிபர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 22 வயது பட்டதாரி இளம்பெண். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த திருமணமான பிரதீப் (வயது 28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    பிரதீப் இளம்பெண்ணுடன் திருமணமானதை மறைத்து அவருடன் பழகி வந்தார். 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது. இது குறித்து இளம்பெண் கேட்ட போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.

    ஆனால் வாலிபர் இளம்பெண்ணை தினசரி பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். தொல்லை தாங்க முடியாத இளம்பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரதீப்பை அழைத்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க கூடாது என எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர்.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிரதீப் மீண்டும் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்தார். அவர் இளம்பெண்ணிடம் நீ எனக்கு மட்டும் தான். நான் உன்னை காதலித்து கொண்டே தான் இருப்பேன் என கூறி தகராறு செய்தார். பின்னர் அவர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து இளம்பெண் மீண்டும் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த பிரதீப் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கூலித்தொழிலாளி.
    • இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (55). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தொழிலாளி சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

    • தெரு நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது.
    • இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் அதிகரித் துள்ளது. பகல், இரவில் நாய்கள் கூட்டமாக குடியி ருப்புகளில் வலம் வந்து அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    தற்போது நாய்களுக்கு இனப்பெருக்கத்திற்கான காலம் என்பதால் இணைகளை தேடி வெளியிடங்களில் இருந்து நகருக்குள் அதிகம் சுற்றித் திரிகிறது.

    இறைச்சி கடைகளை சுற்றியும் கூட்டமாக திரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் வலம் வரும் தெரு நாய்கள் குழந்தைகள், வயதானவர்களுக்கு அதிக பாதிப்பை தருகிறது. மெயின் ரோட்டில் திடீரென்று குறுக்காக வரும் தெரு நாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுத்துகிறது.

    தெரு நாய்கள் தொல்லை தருவதாக இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தினர், தன்னார் வலர்கள் யாரும் முன் வருவதில்லை. தற்போது நாய் கள் எண்ணிக்கை பெருகி விட்டது. தெரு நாய்களுக்கான கருத்தடை ஆபரேஷன்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வா கங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது.

    காங்கயம்,:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கியிருந்து மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்தனர். அந்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதாக உறுதிப்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி மக்கள் சிறுத்தையின் தொடர் வேட்டையை கண்காணிக்க தாங்களாகவே முன்வந்து அவர்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தினசரி கூண்டு இருக்கும் பகுதிக்கு வரும் சிறுத்தை உள்ளே ஆடுகளை பாதுகாப்பான முறையில் அடைத்து வைத்து இருப்பதை பார்த்து விட்டு செல்கிறது. இதனால் சிறுத்தையை பிடிக்க விடாமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் மலையடிவார பகுதியில் வைக்கப்பட்ட கூண்டு ஒன்றை சுற்றிலும் சிறுத்தையின் கால்தடம் பதிந்திருந்தது. இந்த கால்தடம் சிறுத்தை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கூண்டை சுற்றிலும் உள்ள கால்தடத்தை பார்க்கும் போது, சிறுத்தை கூண்டை சுற்றிலும் வட்டமிட்டபடி வந்துள்ளது. ஆனால் கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது வனத்துறையினருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவரை இழந்து வாழ்ந்தவர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சங்கீதா(வயது23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கீதா தனது பெற்றோ ருடன் வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆறுமுகம் (வயது24). இவருக்கு திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று சங்கீதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆறுமுகம், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா சத்தம் போட்டுள் ளார்.

    அவரது சத்தத்தை கேட்டு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதையடுத்து ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் சங்கீதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    • இணையதளங்களில் ஆபாசமாக வெளியிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    மதுரை,

    மதுரை வில்லாபுரம் முத்துநகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணை வடிவேல் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    ஜாமீனில் வெளியே வந்த வடிவேல் தனக்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணை பழி தீர்க்க நினைத்தார். அதன்படி அந்த பெண்ணிடம் எனக்கு ேதவைப்படும்போது பணம் தரவேண்டும். இல்லையென்றால் உனது படத்தை ஆபாசமாக சித்திரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி வடிவேல் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான முட்டை கோழிப் பண்ணை உள்ளது.
    • வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

    தாராபுரம்:

    தாராபுரம் புளியமரத்துபாளையம் கிராமத்தைச் சுற்றி சின்னப்புத்தூா், கெத்தல்ரேவ், கோவிந்தாபுரம், தும்பநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூா், நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

    இந்நிலையில், நஞ்சுண்டாபுரத்தில் இருந்து புளியமரத்துப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    சின்னபுத்தூா் கிராமத்துக்குட்பட்ட நஞ்சுண்டபுரத்தில் இருந்து புளியமரத்துபாளையம் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான முட்டை கோழிப் பண்ணை உள்ளது.இந்த கோழிப் பண்ணையில் உற்பத்தியாகும் ஈக்கள் அருகில் உள்ள கிராமங்களில் பரவி வருகிறது. இது தொடா்பாக மாவட்ட கலெக்டர்மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஈ தொல்லையால் வீடுகளில் உணவு அருந்தவும், தூங்கவும் முடிவதில்லை.

    மேலும், ஈ தொல்லையால் குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    மதுரையில் திருமணமான பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரை நரிமேடு பகுதியில் திருமணமான பெண்ணை வாலிபர் நடுரோட்டில் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 

    இதன் அடிப்படையில் மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில், மதுரை ஐகோர்ட்டு உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் (பொறுப்பு) ஆலோசனை பேரில், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட பெண் நரிமேடு பல் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்ப்பது தெரியவந்தது. 

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரை கல்வீசி தாக்கியது, மதுரை டி.ஆர்.ஓ காலனி, திருவள்ளுவர் நகர், ஜின்னா (வயது26) என்பது தெரியவந்தது. இவர் அந்தப்பகுதியில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக உள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    நரிமேடு பகுதியை சேர்ந்த அந்த பெண்ணை ஜின்னா 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. ஜின்னாவால் அந்த பெண்ணை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் ஜின்னா அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுத்துள்ளார். 

    அந்தப்பெண் ஜின்னா வின் போன் அழைப்பை எடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த ஜின்னா சம்பவத்தன்று மதியம் ஆஸ்பத்திரிக்கு வந்தார். வாசலில் நின்று கொண்டு இருந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த ஜின்னா, அந்த பெண்ணை அடித்து உதைத்தது மட்டுமின்றி, கல்வீசித் தாக்குதலிலும் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். 
    ×