search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
    X

    நாகர்கோவிலில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

    • அரசு ஆயுர்வேத கல்லூரியின் லேப்-டெக்னீசியன் சிறையில் அடைப்பு
    • தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டா ரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவ படிப்பு முடித்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக அங்கேயே பணியாற்றி வருகின்றனர். இதுபோக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏராளமான டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 35 வயதான பெண் டாக்டர் ஒருவருக்கு, ஆஸ்பத்திரியின் உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) ஆன்டனி சுரேஷ்சிங் (வயது 52) என்பவா் தொல்லை கொடுத்தார். மேலும் அவர், தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார். அதுபற்றி சம்பந்தப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்டனி சுரேஷ்சிங்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படிக்கும் மேலும் 2 மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. அதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேரும் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனத்துக்கு ஆன்லைன் மூலமாக தனித் தனியாக 2 புகார் மனு அனுப்பியுள்ளனர்.

    அந்த மனுக்களில், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் சுசீந்திரம் காக்கமூர் பகுதியை சேர்ந்த வைரவன் (வயது 35) என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் புகார் மனு மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தர விட்டார். அதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர்.

    இதுபற்றி போலீசார் கூறுகையில், "கைதான வைரவன் மீது 2 மருத்துவ மாணவிகள் புகார் அளித்துள்ளனர். தங்களை பாலியல் ரீதியாக உரசியதாக புகாரில் கூறியி ருக்கிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் வைரவன் 2 மாணவிகளுக்கும் பாலி யல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. எனவே அவர் கைது செய்யப்பட் டுள்ளார்" என்றனர்.

    இதனையடுத்து கைதான வைரவனை போலீசார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நாகர்கோவில் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைரவன் நாகர்கோவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வைரவனுக்கு நாளை மறுநாள் (27-ந்தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஒரு நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள் ளையை போலீசார் கைது செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×