search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாத்திரை"

    • பெண்கள் ஒருபோதும் ஹேண்ட் பேக் எடுத்துச் செல்ல மறப்பதில்லை.
    • நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம்.

    பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும் தங்களது ஹேண்ட்பேக்கை எடுத்துச் செல்வார்கள். இதை அவர்கள் ஒருபோதும் எடுத்துச்செல்ல மறப்பதில்லை. இதனால் நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம்.

    மேலும் பெண்கள் தங்கள் ஹேண்ட் பேக்கில் ஸ்நாக்ஸ், சாக்லேட், மேக்கப் கிட் போன்றவை தான் அதிகமாகவே இருக்கும். ஆனால், இவற்றை தவிர உங்களது பாதுகாப்பிற்காகவும், அவசர தேவைக்காகவும் சில பொருட்களை கண்டிப்பாக ஹேண்ட் பேக்கில் வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பணிபுரியும் பெண்கள் இதனை வைத்திருப்பதால் அவை நிச்சயம் உங்களுக்கு உதவும். அவை எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்....

     ஹேண்ட் சானிடைஷர்:

    பைக், ஸ்கூட்டி, பஸ், ரெயில் என பல வழிகளில் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்கிறார்கள். பயணத்தின் போது பல வகையான கிருமிகள் கைகளில் ஒட்டிக்கொள்வது மட்டுமின்றி, கைகளும் அழுக்காகிவிடும். மேலும் கைகளை உடனே, தண்ணீரில் கழுவுவது சாத்தியமில்லை. அச்சமயத்தில், சானிடைசர் நிச்சயமாக உங்களுக்கு உதவும். இதனால் பிரச்சனை ஏதும் இல்லை.

     வாய் ஃப்ரெஷ்னர்:

    அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை சமாளிக்க வாய் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துங்கள். இது உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கும். எனவே, இதை எப்போதும் கைப்பையில் வைத்திருக்க வேண்டும்.

     தண்ணீர் பாட்டில்:

    தண்ணீர் தான் உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. மேலும் நாம் சராசரியாக ஒரு நாளைக்கு 8 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே, உங்கள் கைப் பையில் தண்ணீர் பாட்டில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

     மாத்திரை:

    எப்போதுமே, காய்ச்சல் தலைவலியை குறைக்கும் மாத்திரைகளை உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படும் போது பயன்படுத்தலாம் அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கலாம்.

     சானிடரி நாப்கின்:

    ஒவ்வொரு பெண்களின் கைப்பையில் சானிட்டரி நாப்கின் அவசியம் இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டும் சமயத்தில் உபயோகித்துக் கொள்ளலாம் இல்லையெனில், மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம்.

     பெப்பர் ஸ்பிரே:

    ஒவ்வொரு பெண்களும் தங்களது கைப்பையில் பெப்பர் ஸ்ப்ரே வைத்திருப்பது நல்லது. அது உங்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். இது ஒரு தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்.

     சேஃப்டி பின்கள்:

    உங்கள் டிரஸ்சில் திடீரென்று ஊக்கு இல்லையென்று உணரும் போது இது நிச்சயமாக உங்களுக்கு உதவும். எனவே சேஃப்டி பெண்களை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும்.
    • ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலத்திற்கு அருகாமையில் கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. ஆகும்.

    ஏற்காட்டில் அண்ணா பூங்கா, தோட்டக்கலைதுறை பண்ணை, தாவரவியல் பூங்கா, மணிப்பாறை, கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, லேடீஸ் சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட், சேர்வராயன் கோவில், பட்டு பண்ணை, ரோஜா தோட்டம், மான்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இந்த சுற்றுலா தலங்களை குடும்பத்துடன் கண்டுகளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏற்காடு மலைப்பாதை, வனப்பகுதியில் நேற்று இரவு காலாவதியான மாத்திரை, மருந்து உள்ளிட்ட கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து வனத்துறை பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து வன விலங்குகள், கால்நடைகள் சாப்பிடும் முன் காலாவதியான மருத்துவ கழிவுகளை சேகரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்கள். மேலும் காலாவதியான மருந்து, மாத்திரைகளின் நிறுவனம் தயாரிப்பு தேதியை ஆய்வு செய்தனர்.

    இந்த மருத்துவ கழிவுகள் எந்த வண்டியில் எடுத்து வரப்பட்டது? கழிவுகளை வனப்பகுதியில் கொட்டிய மர்ம நபர்கள் யார்? என பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே இளையனார்குப்பம் உள்ளது. இங்கு செல்லக்கோட்டி (வயது 45) என்பவர் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். அங்குள்ள நோயாளிகளுக்கு, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருத்து கொடுப்பது, ஊசி போடுவது என அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வந்துள்ளார்.

    மேலும், ஒரு சில நோயாளிகளுக்கு அவரே மாத்திரை தயாரித்தும் வழங்கி வந்துள்ளார். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு தாசில்தார் குமரன் விரைந்து சென்றார்.அங்கிருந்த மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். மேலும், மாத்திரை, மருந்து தயாரித்த மெடிக்கல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (85), பெங்களூரு விமான நிலையத்தில் அதிக ாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி வசந்தா (60) என்பவருடன் வசித்து வந்தார்.

    சாப்ட் வேர் என்ஜினீயர்

    இவர்களது மகன் திலக் (38), சாப்ட்வேர் என்ஜினீ யரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனாவுக்கு பின்னர் வீட்டில் இருந்த படியே பணிபுரிந்து வந்தார். மேலும்

    ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.இவரது மனைவி மகேஷ்வரி (33), இவர்களது மகன் சாய் கிரிஷாந்த் (6), இந்த சிறுவனுக்கு வாய்பேச முடியாது. இந்த நிலையில் பெங்க

    ளூருவில் உள்ள சகோதரர்

    சந்துருவுக்கு வாட்ஸ் அப் மூலம் குழந்தையை குணப்படுத்த முடியாததா லும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக திலக் தகவல் அனுப்பி இருந்தார். இதையடுத்து நேற்று காலை போலீசார் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    4 பேர் சாவு

    அப் போது திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். வசந்தா மட்டும் உயிருக்கு போராடிய படி கிடந்தார்.

    தொடர் சிகிச்சை

    இதனை பார்த்த போலீசார் வசந்தாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை மற்றும் தொழில் நஷ்டத்தால் திலக் 4 பேருக்கும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திைர கொடுத்து கொலை செய்து

    விட்டு தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர்.
    • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, நாகூரில் ஆயுர்வேத மருத்துவ முகாம்ம னசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் டாக்டர் ஆர் வெங்கடசுப்பிரமணியன் ஆயுர்வேத மருத்துவர் இணைந்து இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம், நாகூர் - தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.

    மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறு வனத் தலைவர் சம்பத்கு மார் வரவேற்றார். இந்நிக ழ்ச்சியில்,தலைமை சட்ட ஆலோசகர் வைரவநாதன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் நாகை மாலி எம்.எல்.ஏ. மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நிஜாமுதீன், நாகப்பட்டினம் நகராட்சி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி . செய்யது முகமது காஜி ஹீசைன் சாகிப் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். வெங்கட சுப்பி ரமணியன் தலைமையில்,10 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ரூபாய் 2 லட்சத்துக்கான மெடிசின்கள் (டானிக், மாத்திரைகள்) இம்மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    இதில்,அறங்காவலர்கள் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால், ரத்த சோகை ஏற்பட்டு எடை குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது
    • குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:- வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால், ரத்த சோகை ஏற்பட்டு எடை குறையுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. ரத்தசோகையில் உடல் சோர்வு ஏற்பட்டு செயல்திறன் குறைவாகும்.

    மேற்கண்ட குறைபாடுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கைகழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.

    நாளை (17-ந்தேதி) 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயதிலுள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை முழுமையாக நல்ல முறையில் செயல்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித்துறை ஊட்டச்சத்துதுறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாற்று திறனாளிகள்துறை, சமூக பாதுகாப்புத்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம், மற்றும் ஊரகவளர்ச்சித்துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியில் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி செல்லா குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது உள்ள கல்லூரி செல்லா பெண்களுக்கு, ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டார்கள் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிடவேண்டும். நமது மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட 5,58,766 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 75,043 பேரும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இம்மாத்திரைகள் உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மாத்திரை வழங்கப்படும் அன்று உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு வருகிற 24-ந்தேதி மாத்திரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த கர்மன்ப்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரமேஷுக்கு திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் நஷ்டத்தை சரிகட்ட தனது மைத்துனர். பூனச்சந்திரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து ரமேஷ், பூர்ண சந்திரனுடன் சேர்ந்து கலப்படம் செய்யப்பட்ட அல்ட்ரா சோல்ம் என்ற ஆபத்தான போதை மாத்திரைகளை உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள பல மருந்து நிறுவனங்களில் இருந்து வரவழைத்தனர்.

    இதற்கு அம்பர்பேட்டை சேர்ந்த ராகவ ரெட்டி (வயது 55) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தார்.

    மருந்து கடைகளில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகளை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனர்.

    மேலும் இவர்களுக்கு மருந்து நிறுவனங்களில் இருந்து சட்ட விரோதமாக மருந்துகளை கடத்தி வருவதற்கு ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமணன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நதீம், டெல்லியை சேர்ந்த அருள் சவுத்ரி ஆகியோர் உதவி செய்து வந்தனர்.

    இதன் மூலம் ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார்.

    இவர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆபத்தான போதை மருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் அடிமையாகினர். போதை மருந்து விற்பனை குறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து விற்பனை குறித்து துல்லியமான தகவலை பெற்றனர். ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் எங்கு எங்கு போதை மருந்து விற்பனை செய்கிறார்கள் என கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மலாக் பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த ரமேஷ், ராகவா ரெட்டி ஆகியோரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    • உரிமம் பெறாமல், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, மளிகை கடை, பெட்டிக்கடை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் உரிமம் பெறாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அவ்வாறு முறையான உரிமம் பெறாமல், மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிடிபட்டால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதோடு, நிறுவனத்தின் மீது வழக்கும் பதிவு செய்யப்படும்.

    அதனால், வணிகர்கள், உரிமம் பெறாமல் மருந்து பொருட்களைவிற்பனை செய்ய வேண்டாம். அதேபோல், எலிகளை கொல்லும் எலி கேக், எலி பேஸ்ட் போன்ற அனைத்து எலி மருந்துகளும், கடைகளில் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றை மளிகை கடை உள்ளிட்ட எந்த ஒரு கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    புதுடெல்லி:

    எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர்.

    95 ஓவல் வடிவ காப்ஸ்யூல்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்குள் போதை பொருள் இருப்பது தெரிந்தது. 511 கிராம் எடையுள்ள போதை பொருள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    இதையடுத்து நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அயன் பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி அப்பெண் கடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாத்திரை உட்கொள்ளும் நேரத்தை கவரில் குறிப்பிட்டு வினியோகம் செய்யப்பட்டது.
    • நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் எப்போது, எப்படிஉட்கொள்வது? என்ற விபரம் தெரிவிக்கப்படாமல் வெறுமனே வழங்கப்படுகிறது.

    இதனால் நோயாளிகள் அதனை உட்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே தனியார் மருத்துவ மனைகளில் வழங்கப்படு வதைபோல தனித்தனி கவர்களில் எந்தெந்த வேளைகளில் உட்கொள்ள வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டு வழங்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை தெளிவான விபரங்களுடன் வழங்குவதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாத்திரைகளை தனி கவரில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தனித்தனி கவர்களில் உட்கொள்ளும் வேளைகுறித்து எழுதி வழங்கப்படுகிறது. இதனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    • பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
    • மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த மருத்துவ சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வண்ணம் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் வீதம் 12 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன.

    அதன்படி முதல்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் அண்ணாநகர் 14-வது தெரு, சின்னையாபிள்ளை தெரு, ஏ.ஒய்.ஏ.நாடார் தெரு, பூமால் ராவுத்தன்கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, நாலுகால்மண்டபம் ஆகிய 6 இடங்களிலும், கும்பகோணம் மாநகராட்சியில் திருநாராயணபுரம், மேலமேடு, காசிராமன்தெரு, பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நரியம்பாளையம் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டன.

    பள்ளியக்ரகாரம், டவுன்கரம்பை பகுதியில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதையடுத்து தஞ்சையில் அண்ணாநகர் 14-வது தெரு திறக்கப்பட்ட மையத்தில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

    இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டலக்குழு தலைவர்கள் ரம்யாசரவணன், மேத்தா, கலையரசன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த மையத்தில் டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், சுகாதார பணியாளர் என 4 பேர் பணியில் இருப்பார்கள்.

    காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும்.

    இந்த மையங்களில் அதிநவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு வெளிநோயாளிகள் சிகிச்சை, தாய்சேய் நலம், தொற்றா நோய் சிகிச்சைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

    • மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

    தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×