search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாம் நடந்தது.

    வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
    • 21 பேர் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

    வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். சித்தா, ஓமியோபதி மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமில் பொதுமக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் மேல்சிகிச்சைக்காக 21 பேர் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×