என் மலர்
நீங்கள் தேடியது "killed"
உப்பிலியபுரம்
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மங்கப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பெட்ரோல் பங்க் அருகே இன்று காலை தம்மம்பட்டியில் இருந்து கொப்பம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென வலது பக்கம் திரும்பியதால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனிடையே விபத்துக்குள்ளான கார் எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கால் எலும்பு முறிவடைந்தது. தகவலின் பேரில் உப்பிலியபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் விபத்து பற்றி உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
- இரு சக்கர வாகனம் மோதி பெண் இறந்தார்.
- சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை விராலிமலை தாலுகா பகவான் பெட்டியை சேர்ந்தவர் குழந்தை மனைவி அழகம்மாள் (வயது 55). இவர், பகவான்பட்டி அருகே புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வா கனம் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
- மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது56). தனியார் மில் தொழிலாளியான இவர், கடந்த 4-ந் தேதி, சொந்த வேலை காரணமாக, காரைக்கால் நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பு ம்போது, பிள்ளைத்தெ ருவசல் மின் நிலையம் அருகே சாலையில் ஆடு குறுக்கே போனதால், ஆட்டின் மீது மோதி, தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார். காரை க்கால் அரசு ஆஸ்பத்ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட சிவக்குமார், மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார். அங்கு 10 நாள் சிகிச்சையில் இருந்த சிவக்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அவரது உறவினர் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- ரூ.2½ லட்சம் மோசடி ெசய்து
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கீரனூர் அருகே முதுகுளத்தூரை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவர், மூளிப்பட்டி கிராமத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை மேய்த்து வருவதற்கு கீரனூர் அருகே உள்ள வாலியம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான செல்லையா என்பவரை அணுகினார்.
அப்போது அவரிடம் குடும்பத்தோடு ஆடு மேய்ப்பதற்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை அன்பரசு கொடுத்துள்ளார். ஆனால் 3 மாதம் மட்டுமே வேலைக்கு சென்று விட்டு பின்னர் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை செல்லையாவிடம் திருப்பி கேட்ட போது அவர் தகாத வார்த்தையால் அன்பரசுவை திட்டியுள்ளார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் அன்பரசு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த முதியவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார்
- கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 80). அதே ஊரை சேர்ந்தவர் காமராஜ் மகன் ராமமூர்த்தி (23). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இருவரது வயல்காடும் அருகே அருகே உள்ளது. இருவரும் வரப்பில் மாடு மேய்க்கும் பொழுது இரு தரப்பினருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை நாராயணன் வரப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராமமூர்த்தி எனது வயலில் எதற்கு மாடு மேய்கிறாய் எனக் கேட்டதால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். அப்போது நாராயணனின் கழுத்தை பிடித்து ராமமூர்த்தி நெறித்துள்ளார். அதனை தூரத்தில் இருந்து பார்த்த நாராயணன் மனைவி அழகம்மாள் விடுடா என கூறிக் கொண்டே ஓடிவந்துள்ளார். இதற்குள் நாராயணன் மயக்கம் போடவே கீழே விட்டுவிட்டு ராமமூர்த்தி ஓடிவிட்டார். அழகம்மாள் வந்து பார்த்தபோது நாராயணன் இறந்துகிடந்தது தெரியவந்தது.இது பற்றி தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன நாராயணணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரன்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து நாராயணண்னை கொலை செய்த ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
- அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
- ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
சேலம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவரது மகன் பிரதீப் கண்ணா (வயது 27),
இவர் சேலம் குகையில் உள்ள பர்பிகுயின் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பிரதீப் கண்ணா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அவர் கிடந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் ப ரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைந்து வந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரதீப்கண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்துக்கு காரணமான வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் இருந்ததும், இரவு நேரத்தில் பிரதீப் கண்ணா மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபி அருகே வாகன விபத்திலி 2 கட்டிட தொழிலாளிகள் பலியானார்
- காயம் அடைந்த தம்பதிக்கு தீவிர சிகிச்சை
கோபி,
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த இ புது கொத்துக்காடு பகுதி சேர்ந்தவர் விக்னேஷ் (20). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (47). கட்டிட தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்னேஷ், ராமன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வருவதால் இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் விக்னேஷ், ராமன் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று கொண்டு இருந்தனர். வண்டியை விக்னேஷ் ஒட்டி வர பின்னால் ராமன் அமர்ந்து வந்துள்ளார்.
கோபி-சக்தி மெயின் ரோடு, புதுக்கொத்துக்காடு பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்த போது தனக்கு முன்னால் சென்ற ஆம்னி வேனை முந்தி செல்ல முயன்று ள்ளனர். அப்போது எதிர்தி சையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தி லேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இருந்தார். ராமன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டி ருந்தார்.
விபத்து பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவத்துக்கு விரைந்து வந்து ராமனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் நீல நிற டிசர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷம் கலந்த ஜூஸ் குடித்த சிறுவன் பலியானார்
- தாய்- மற்றொரு மகனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது
ஈரோடு,
ஈரோடு அருகே ரகுபதி நாயக்கன்பாளையம் வாய்க்கால்மேடு ஜீவா னந்தம் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழி லாளி. இவருடைய மனைவி காவிரி. இவர்களுக்கு விஷ்ணு (9), விஸ்வா (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.இவர்கள் காவிரியின் தந்தை சுப்பிரமணியின் வீட்டில் வசித்து வருகி ன்றனர். விஷ்ணுவுக்கு பிறந்ததில் இருந்தே பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தான். விஸ்வா 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.கடந்த 30-ந் தேதி இரவு சக்திவேல் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாப்பாட்டுக்கு பொறியல் இல்லையென்று காவிரி யிடம் சக்திவேல் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவிரி கோபித்து கொண்டு தனது குழந்தை களுடன் அருகில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை யில் சக்திவேல் வேலைக்கு சென்ற பிறகு காவிரி மீண்டும் வீட்டுக்கு திரும்பி னார்.இந்தநிலையில் காவிரி திடீரென வீட்டுக்கு வெளியில் நின்று வாந்தி எடுத்தார். அப்போது அங்கு வந்த காவிரியின் சகோதரன் மணிகண்டன், உடலுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டு உள்ளார். அதற்கு காவிரி, 3 பாட்டிலில் மாங்காய் ஜூஸ் வாங்கி வந்து விஷத்தை கலந்ததா கவும், அதில் ஒரு பாட்டில் ஜூசை குடித்து விட்டதாக வும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் உடனடியாக வீட்டு க்குள் சென்று பார்த்தார்.
அப்போது மீதமுள்ள 2 பாட்டில்களில் இருந்த ஜூசையும் விஷ்ணுவும், விஸ்வாவும் குடித்து கொண்டு இருந்ததை பார்த்த மணிகண்டன், விரைந்து சென்று பாட்டில்க ளை பிடிங்கி வெளியில் வீசினார். இதைத்தொடர்ந்து காவிரி மற்றும் 2 குழந்தை களையும் மணிகண்டன் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு அவருக்கு டாக்ட ர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் விஷ்ணு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாப மாக உயிரிழந்தான். காவிரிக்கும், விஸ்வாவுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.