search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK"

    • திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
    • இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?

    தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் அ.தி.மு.க. ஆட்சி காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஏழை எளிய மாணவர்கள் பயனுற்று வந்தனர்.

    இந்த நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது."

    "இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது."

    "மு.க. ஸ்டாலின்அவர்களே- லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.
    • விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வலுவாக இருந்தது. தொகுதிகள் பங்கீடு தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே உடன்பாடானது.

    இந்தநிலையில் தேர்தலுக்காகத்தான் கூட்டணி. முதலில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த பாருங்கள் என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார்.

    இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட வாரியாக சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த நிலையில்தான், கொடுக்கும் நிலையில் இருந்த காங்கிரஸ் இடங்களை கெஞ்சி கேட்டு வாங்கும் நிலையில் உள்ளது. 57 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் என்று செல்வப் பெருந்தகை கூறினார்

    இதுபற்றி தி.மு.க. தரப்பில் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, "காங்கிரசுக்கு புதிய தலைவர்கள் வரும் போது இந்த மாதிரி தங்கள் கருத்துக்களை பேசுவது வழக்கமானதுதான் என்று குறிப்பிட்டார்.

    இந்த சூழலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. நல்லாட்சி நடத்துகிறது. அதுவும் காமராஜர் ஆட்சிதான் என்றார்.

    தலைவர்கள் வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்கள் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.

    இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தலைவர்கள் மட்டத்தில் இந்த கூட்டணி வலிமையான கூட்டணி. இப்படியே தொடர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதேநேரம் கீழ் மட்டத்தில் தங்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என்ற ஆதங்கமும் நிலவி வருகிறது.

    எனவே விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.

    • கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.
    • முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

    சென்னை:

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாவி இருக்கிறது என்ற உடனேயே தமிழர்களை திருடர்கள் என்று கூறினார்கள் என்று பொய் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்களே....

    இன்று கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.... இன்று நம் விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் ஒரு அணையை உங்கள் கூட்டணியைச் சார்ந்த கேரளா அரசு முழுவதுமாக களவாட நினைக்கிறது உங்களிடமிருந்து பதில் என்ன?

    முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இப்போது மவுனமாக இருப்பது ஏன்?

    இதுதான் உங்களின் தமிழ்ப்பற்றா?

    தமிழர்கள் மீதான பற்றா?

    தமிழ்நாட்டு உரிமையை பாதுகாக்கும் நிலைமையா?

    உங்கள் மவுனம் கலையுமா?

    வழக்கம்போல் கடிதம் மட்டும் தான் எழுதுவீர்களா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
    • முதலமைச்சரின் மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் நடத்துனரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இதையடுத்து போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 2021-2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

    முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
    • அமைச்சர்களை சேர்ப்பதும், நீக்குவதும் இலாக்காக்களை மாற்றி அமைப்பதும் முதலமைச்சர் முடிவு என்பதால் அவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகி புதிய அரசு அமையும் போது தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    தேர்தல் தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தான் பதில் சொல்ல வேண்டும். யாராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார்.

    இப்போது தி.முக. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும் தேர்தல் வேலைகளில் சரிவர செயல்படாதவர்கள் பற்றியும் புகார்கள் சென்றுள்ளன.

    அந்த வகையில் 10 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் சொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இதனால் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஒருவித கலக்கத்துடனேயே உள்ளனர். யார் யாருக்கு இலாகா மாறுமோ என்ற அச்சத்தில் சந்தோஷமின்றி மன இறுக்கத்திலேயே உள்ளனர்.

    இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.


    இது பற்றி தி.மு.க. வட்டாரத்தில் பேசும் பொருளாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வசம் உள்ள மணல் குவாரி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையை வேறு ஒரு அமைச்சருக்கு பிரித்துக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    மணல் குவாரி மற்றும் கனிமவளத்துறையில் நடந்த புகார்கள் காரணமாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாகி வரும் நிலையில் இந்த மாற்றங்களை செய்ய முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாவும் தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    ஆனால் அமைச்சர் துரைமுருகன் கனிம வளத்துறையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. அதற்கு பதிலாக நீர்வளத்துறையை வேண்டுமானால் அவர் விட்டுக் கொடுப்பார் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இதற்கு முன்பு நிதித்துறையை கவனித்து வந்த தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு மத்திய நிதியமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான சேலத்தை சேர்ந்த பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சரவையில் சேர்க்க வாய்ப்புளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    அமைச்சர்களை சேர்ப்பதும், நீக்குவதும் இலாக்காக்களை மாற்றி அமைப்பதும் முதலமைச்சர் முடிவு என்பதால் அவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    • மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது.
    • பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

    சென்னை:

    ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடியின் கருத்துக்கு, "தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்" என்றும் "வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவிற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழகத்திற்குள்ளும், வெளியிலும் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதுவுமே அறியாமல், நிலைய வித்வான்கள் சூழ்ந்த குழிக்குள்ளே வசிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசாவில் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.

    மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது என்பதையும், அந்தப் பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதையும், மு.க.ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


    • கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை.
    • கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது.

    கோவை சிந்தாமணிபுதூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தை வலிமைப்படுத்துவது என்பது வேறு. தமிழக அளவில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் சின்ன, சின்ன கட்சிகள் கூட நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகின்றன.

    காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று கூறுவதில் எவ்வித தவறும் இல்லை. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது, கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. 57 ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறோம். தற்போது மீண்டும் அந்த முயற்சியை எடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

    நாங்கள் தி.மு.க.வுடன் தோழமையோடு இருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்துவது வேறு, தோழமை என்பது வேறு. இந்த இரண்டையும் நீங்கள் ஒன்றாக பார்க்க கூடாது. நாங்கள் தி.மு.க.வோடு இணக்கமாக இருக்கிறோம். எனவே கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான்.
    • மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து பேசி வருகிறார்.

    அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 57 ஆண்டுகளாக நாம் ஏமாந்தது போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்துக் கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்" என்று பேசி இருந்தார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும். எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என்று கையேந்தி நிற்பது?

    ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்து வந்தோம். அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்று பேசி இருந்தார். ஆனாலும் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

    செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சு பற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடக்கிறது. காமராஜர் எண்ணங்களை இந்த ஆட்சி நிறைவேற்றி வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில்தான் அவரது பெயரால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது. அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை செய்து முடிக்கிற ஆட்சிதான் இப்போது நடக்கிறது.

    அவர் கல்விக்கு வித்திட்டார். அந்த கல்வியை ஆலமரமாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் எல்லா நடவடிக்கையையும் எடுத்துள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவ செல்வங்கள் 100-க்கு 100 வாங்கும் நிலை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உருவாகி இருக்கிறது.

    எவ்வளவு காலம்தான் இன்னொரு கட்சியிடம் தொகுதி கேட்டு கையேந்துவது. அந்த நிலை மாற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை பேசி இருக்கிறார். அது அவரது ஆசை. அது நிறைவேறுமா? என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான். ஆகவே செல்வப்பெருந்தகை அதே ஆசையில் கூறி இருக்கிறார். அவரது ஆசையை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது மக்கள் விருப்பம்தான். எனவே காங்கிரஸ் செல்வாக்கை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் இன்று பேசும்போது கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும் கூட, மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது.

    தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது. பேசவும் கூடாது. நல்ல வேளை தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும் அது காமராஜர் ஆட்சிதான்.

    மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.

    காமராஜர் ஆட்சி என பெயர் வைக்கலாம். திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒரு போதும் பலிக்காது.
    • பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை என புதுப்புரளி கிளப்பி இருக்கிறார் பிரதமர்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய நேர்காணலில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சிகள் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்து விடுகிறது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    இதற்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை-பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும்-அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.

    பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றோம். இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

    உத்தரபிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுகுறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா? அல்லது ஏதாவது கேரண்டி கொடுத்திருக்கிறாரா? இல்லையே! ஆனால், வெறுப்புப் பரப்புரையை மட்டும் முந்திக்கொண்டு செய்கிறார்.

    மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை-பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.

    உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலிச் செய்திகளை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் பா.ஜ.க.தான்.

    பயனற்றுப்போன வெறுப்புப் பரப்புரைகளால் விரக்தியடைந்துள்ள பிரதமர் மோடி, சொல்லிக் கொள்ள பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

    கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்துவரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது. பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரெயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார்.

    பிரதமர் பேசுவதைக் கவனித்தால் "உண்மை கிலோ என்ன விலை?" என்று கேட்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், 2019-ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

    சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக் கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார் என்ற ஐயம் தோன்றுகிறது.

    பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
    • குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

    கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது.

    காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள்.

    அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் இந்த தி.மு.க. ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய தி.மு.க. அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன்.

    உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
    • அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் வரவேற்றனர்.

    அறிவாலயத்தில் சுமார் 1மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். கழக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் வடமாநில தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

    இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு 'சீட்' கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் ஆலோசித்தார். சுமார் 1 மணி நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    அறிவாலயத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அறை, முரசொலி மாறன் வளாகம் உள்ளிட்ட பல அறைகள் இடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    • வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்.
    • பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரெயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரெயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர் பிரித்தாள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

    பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரெயில் வர உள்ளது.

    நடைபெற்று முடிந்த 4 கட்ட தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது.

    எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார்.

    தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்க்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்.

    டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் தி.மு.க.வின் சாதனை. தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

    கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை தி.மு.க. அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதல் ஆக்க வேண்டும்.

    கருணாநிதி பற்றிய பாடம் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது.தற்போது 8-ம் வகுப்பிலும் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

    பா.ஜ.க. கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது.

    ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும்.

    எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும். குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்.

    57 வருடமாக காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க தவறிவிட்டதாக இப்போது செல்வ பெருந்தகை கூறுகிறார். தி.மு.க.வின் தோளில் அமர்ந்து கொண்டு காங்கிரசை எப்படி வளர்க்க முடியும்.

    நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனித்து நிற்கிறோம். தி.மு.க.வை விட்டு ஒருபோதும் காங்கிரசால் வெளியே வர முடியாது.

    அரசியலுக்காக தற்போது செல்வ பெருந்தகை இப்படி பேசியுள்ளார். இது ஒரு புறமிருக்க தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என ஈ . வி. கே. எஸ். இளங்கோவன் சொல்கிறார்.

    இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×