search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condemned"

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடத்துவதா? என்று ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
    • 2 கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்துவது அது உங்களுக்கே திரும்பிவிடும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கின்ற தி.மு.க. அரசை எதிர்த்து அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடியார் தினந்தோறும், அறிக்கை வாயிலாகவும், சட்டமன்றத்திலும் உரிமை குரலை எழுப்பி வருகிறார்.

    ஆனால் தி.மு.க.வை இன்றைக்கு சிலர் துதி பாடுகிற ஒரு நிலையை பார்க்கிறபோது நமக்கு வேதனையாக இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் திருநாமத்தை சொல்லி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சொல்லி வளர்ந்தவர்கள், அம்மாவின் அடையாளம் என்று வாழ்ந்தவர்கள், இன்றைக்கு அம்மாவின் மரணத்திற்கு காரணமாக அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை, கொடுக்கப்பட்டிருக்கிற அந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துதி பாடும் நிலையில் உள்ளனர் இதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும், தமிழக மக்களும் இன்றைக்கு எள்ளி நகையாடுகிறார்கள்.

    இன்றைக்கு மக்களால் கைவிடப்பட்டவர்கள், தொண்டர்களால் கைவிடப்பட்டவர்கள், கழக நிர்வாகிகளின் நம்பிக்கை இழந்தவர்கள், இந்த இயக்கத்திற்கு தொடர்ந்து இடையூறாக இருப்பவர்கள் ஏன் இன்னும் ஒரு படி மேலே, புரட்சித் தலைவர் மாளிகையை தன் காலால் எட்டி உதைத்த கயவர்கள், அம்மாவே தெய்வம் கழகமே கோயில் என்று வாழ்ந்து வருகிற தொண்டர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு குண்டர்களும் இருந்து நமக்கு வேதனை அளிக்கிறது.

    அரசியலிலே நிலை நிறுத்திக் கொள்வதற்காக எதிரிகளிடம் உண்மை தொண்டர்களை, விசுவாசத்தொண்டர்களை அடமானம் வைத்து, தங்கள் வாழ்வை உயர்த்தி கொள்வதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து, இன்றைக்கு கடைசி முயற்சியாக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்லுகிறார்கள்.

    எதற்காக இந்த போராட்டத்தை இன்றைக்கு நீங்கள் நடத்துகிறீர்கள் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? இந்த சம்பவத்தில் வழக்குகளை பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அதனு டைய குற்றவாளிகளை நீதிமன்றத்திலே அங்கே சமர்ப்பித்து அந்த சட்ட நடவடிக்கை எல்லாம் உங்களுக்கு தெரியாதா? அப்போதெல்லாம் நீங்கள் எங்கே அமெரிக்கா ஐக்கிய நாட்டுல இருந்தீர்களா? ஜப்பானில் இருந்தீர்களா? இன்றைக்கு போராட் டத்திற்கு தலைமை தாங்குகிற நீங்கள் (ஓ.பன்னீர் செல்வம்) தானே அன்றைக்கு இருந்த இத்தனை நடவடிக்கை களுக்கும் முக்கிய பொறுப் பாளராக இருந்து அன்றைக்கு நீங்கள் இதை வழிநடத்துவதையும் நீங்கள் வரலாற்றை மறைத்து விட முடியாது.

    எடப்பாடியாருக்கு எதிராக போராட தொண்டர்களை நீங்கள் பங்கேற்க செய்வதற்கு எடுக்கிற முயற்சி எல்லாம் தோல்வில்தான் முடியும்.

    8 கோடி தமிழர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கின்ற எடப்பாடியாரை நீங்கள் அவதூறு செய்யலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகும்.

    தி.மு.க.வின் ஊது குழலாக மாறி நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2 கோடி தொண்டர்கள் நேசிக்கும் எடப்பாடியாரை பழி சுமத்துவது அது உங்களுக்கே திரும்பிவிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை கண்டித்து கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைப்படி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். ஆனால் விதிகளை மீறி திருமங்கலம் நகராட்சி எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டதோடு திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருமங்கலம், கல்லுப்பட்டி ,பேரையூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாகன ஓட்டிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் கடந்த 1-ந்தேதி முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க போவதாக கூறி மாதாந்திர கட்டணமாக 331 உள்ளூர் வாகனங்கள் செலுத்த வேண்டும் என அறிக்கை விடுத்து கட்டண வசூலில் இறங்கியது இதற்கு திருமங்கலம் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுெதாடர்பாக கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் அல்லது திருமங்கலம் சர்வீஸ் சாலையை திருமங்கலம் வாகன ஓட்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக உள்ளதை கண்டித்தும், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை கண்டித்தும் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் அன்றைய தினம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் முன் சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப் போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதற்கும் மேலாக சுங்கச்சாவடி தரப்பில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூல் செய்ய முற்பட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு முன்வருமேயானால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். #StellaMariscollege #RahulGandhi #KSAlagiri
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றது எந்த அடிப்படையில் என்று விளக்கம் கோரி அறிக்கை அனுப்பும்படி கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் தாக்கீது அனுப்பியுள்ளார்.



    பொதுவாக, கல்லூரியில் நடைபெறுகிற விழாக்களில் அரசியல் தலைவர்கள் எந்த அடிப்படையில் பங்கேற்று உரை நிகழ்த்துவார்களோ, அதைப்போலத் தான் ராகுல்காந்தியும் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அழைக்கப்பட்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஆட்சேபனை செய்வதற்கு தமிழக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?. இத்தகைய தேவையற்ற நடவடிக்கையின் மூலம் ராகுல்காந்தியின் செயல்பாட்டில் குந்தகம் விளைவித்துவிட முடியும் என்று மத்திய - மாநில அரசுகள் கருதுமேயானால் அது பகல் கனவாகத்தான் முடியும்.

    ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு முன்வருமேயானால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எச்சரிக்க விரும்புகிறேன். எனவே, பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிற நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #StellaMariscollege #RahulGandhi #KSAlagiri
    ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #Rajinikanth
    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போதும்... நடந்தவரை போதும்... இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்காக என் இதயம் கலங்குகிறது. உலகை விட்டுப்பிரிந்த தைரியமான அந்த இதயங்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய தலைவர் எம்.கே.பைஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  #PulwamaAttack #Rajinikanth
    உங்கள் சான்றிதழ் எனக்கு தேவை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி நிதின்கட்காரி கண்டனம் தெரிவித்துள்ளார். #NitinGadkari #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின்கட்காரியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழ்ந்து நேற்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர், “பா.ஜனதா தலைவர்களில் துணிச்சல் மிக்க தலைவர் நிதின்கட்காரிதான்” என்று கூறியிருந்தார்.

    அந்த பதிவில் ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “நாக்பூரில் கட்சி தொண்டர்களை முதலில் குடும்பத்தை கவனிக்க கூறிய மத்திய மந்திரி நிதின்கட்காரியை பாராட்டுகிறேன். அவர் இதோடு நின்று விடக்கூடாது. ரபேல் விவகாரம், விவசாயிகளின் கஷ்டம் மற்றும் சி.பி.ஐ. நடவடிக்கை பற்றியும் பேச வேண்டும்” என்று கூறி இருந்தார்.



    மேலும் மற்றொரு பதிவில் வேலைவாய்ப்பு பற்றியும் நிதின்கட்காரி பேச வேண்டும். பா.ஜ.க.வில் அவரிடம் மட்டுமே கொஞ்சம் துணிச்சல் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

    ராகுலின் இந்த டுவிட்டர் பதிவுக்கு நிதின்கட்காரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராகுல்ஜி, உங்களது சான்றிதழ் எனக்கு தேவை இல்லை. பத்திரிகையில் தவறாக வெளியான ஒரு செய்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீங்கள் மத்திய அரசை தாக்கி பேசுவது ஆச்சரியமாக உள்ளது.

    தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பாக பேச வேண்டும். தலைவராக இருப்பவர் நல்ல புரியும் சக்தி கொண்டவராக திகழ வேண்டும். இது இரண்டும் உங்களிடம் இல்லை.

    காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடே அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுள்ள நம்பிக்கை தான். காங்கிரசுக்கு அரசியல் சட்டங்களில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. உங்களது செயல்பாடுகளும் அதைத்தான் காட்டுகின்றன.

    விவசாயிகள் பிரச்சினையில் நீங்கள் தவறான வழிகாட்டுதல்கள் மேற்கொண்டு இருக்கிறீர்கள். எனவே மீண்டும் மோடி தலைமையில்தான் மத்தியில் ஆட்சி மலரும். நாங்கள் தொடர்ந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம்.

    எதிர்காலத்திலாவது பொறுப்புடனும், புரிந்துகொள்ளும் தன்மையுடனும் நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். மற்றவர்களின் தோளை பிடித்துக்கொண்டு செயல்படும் நிலையில் இருந்து மாறுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #NitinGadkari #RahulGandhi
    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #PonRadhakrishnan #MamtaBanerjee
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் ஊழல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சி.பி.ஐ. முயற்சியை முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நேரடியாக தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்தின் மீது சம்மட்டியால் அடித்தது போல் இருக்கிறது.

    மம்தாபானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். 1972-ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு இன்னலுக்கு ஆளானார்கள். பல கஷ்டங்கள் பட்டோம் என்று அவர்களே கூறியுள்ளனர். இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசோடு சேர்ந்து தி.மு.க. கருத்து சொல்லி வருகிறது.

    பிரதமர் மோடி மாநிலங்களுக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக பல மாநில அரசுகள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் செயல் கண்டிக்கத்தக்கது.

    மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் நலன், ஓய்வூதிய திட்டம், வரிவிலக்கு, ஊரக வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்ற ஒரு பட்ஜெட். இதை யாரும் குறை சொல்ல முடியாது.

    காங்கிரசில் வறுமை ஒழிப்பு திட்டம் என்று சொல்லி வருகிறார்கள். வறுமை ஒழிப்பு என்பது அவர்களுக்குத்தான். அவர்களுடைய வறுமையை ஒழிக்கத்தான் பல ஊழல்கள் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #MamtaBanerjee

    நாகையில் பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சந்தானமாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் துணை தலைவர் பன்னீர், வட்டார தலைவர்கள் சுப்பிர மணியன், செய்யதுபிக்கின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பணமதிப்பிழப்பு செய்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகூர் நகர தலைவர் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மாநில அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. #SabarimalaTemple #KeralaGovernment
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில், அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுள்ள பல பெண்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர்.



    அவர்களை பல இடங்களில் தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பெண்கள் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    தற்போது சபரிமலையில் நடை அடைக்கப்பட்டு அமைதி திரும்பி இருக்கும் நிலையில், அங்கு போராட்டம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மாநில அரசு கைது செய்து வருகிறது. அந்தவகையில் இதுவரை மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக பத்தனம்திட்டாவை சேர்ந்த சுரேஷ் ராஜ், அனோஜ் ராஜ் என்பவர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி அப்பாவி மக்களையும் போலீசார் கைது செய்வதாக குற்றம் சாட்டியிருந்த அவர்கள், இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி இருந்தனர்.

    இந்த மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட்டு மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து நீதிபதி கூறுகையில், ‘மாநில அரசு வெறும் விளம்பரத்துக்காக பணியாற்றக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். மாறாக அப்பாவிகளை கைது செய்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும். அதேநேரம் சபரிமலைக்கு பக்தர்கள் மட்டும்தான் வருகிறார்களா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    பின்னர் இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கேரள அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 29-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தார். #SabarimalaTemple #KeralaGovernment

    சபரிமலையில் வழிபாட்டு முறைக்கு மாறாக சென்ற பெண்களை கேரள அரசு ராஜமரியாதையோடு அழைத்துச்சென்றது ஏன்? என்று ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #Sabarimala #TamilMaanilaCongress
    சென்னை:

    த.மா.கா. துணைத்தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கேரள முதல்-அமைச்சர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை என்று பேசி இருக்கிறார். சபரிமலைக்கு பெண்கள் போவதற்கான வாய்ப்பை உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்ததே தவிர கோவில் வழிபாட்டு முறைகளுக்கு மாறாக போகலாம் என்று சொல்லவில்லை.

    மத வழக்கங்களில் வழிபாட்டில் இதில் சம்பந்தமில்லாத நபர்கள் பொது நல வழக்கு போடுவது ஏற்புடையதல்ல என்பதை ஏற்க மறுத்துள்ளார்கள். மறு ஆய்வில் இவைகளெல்லாம் கருத்தில் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

    சபரிமலை என்பது சுற்றுலா தளம் அல்ல? கடவுள் நம்பிக்கை உள்ள ஐயப்பன் பக்தர்கள் போகிற இடம். முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதியாமல் கேரள அரசு சட்டத்தின் மூலம் மாற்ற முனைந்தது. ஆனால் வழிபாட்டு முறைகளை மீறி சபரிமலை செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லாதபோது இரண்டு பெண்களை ராஜமரியாதையோடு அழைத்து சென்றது ஏன்?

    இவ்வாறு ஞானதேசிகன் கூறி உள்ளார். #Sabarimala #TamilMaanilaCongress
    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #mullaiperiyardam #anbumani #duraimurugan #vaiko

    சென்னை:

    முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    திமுக பொருளாளர் துரைமுருகன்:-

    தென் தமிழகத்தின் பாசனத்திற்கு ஜீவாதாரமாக விளங்குகிற முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, இரு மாநில நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.


    தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கியிருக்கும் முதற்கட்ட அனுமதி என்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியதாகும். தமிழகத்தின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், வஞ்சக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மற்றொரு தாக்குதலே இந்த அனுமதியாகும். எனவே இதனை எதிர்த்து, மத்திய அரசு மீதும் அதன் சுற்றுச்சூழல் அமைச்சகம் மீதும் மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.

    புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணை பகுதி பகுதியாக செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்க திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தை தடுக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது. இரு மாநில மக்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி கேரளத்தை ஆளும் இடது முன்னணி அரசு புதிய அணை முயற்சியை கைவிட வேண்டும் என முதல் பினரயி விஜயனை தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நதிநீர் சிக்கல்களில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

    முல்லைப் பெரியாற்று வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், அதை மதிக்காமல் புதிய அணை கட்ட கேரள அரசு பலமுறை முயன்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டது. அப்போதெல்லாம் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவு தான் இப்போது புதிய அணைக்காக ஆய்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி பெறும் அளவுக்கு கேரள அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசு இத்தகைய அனுமதியை அளித்திருப்பதன் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படும் ஆபத்துள்ளது.

    எனவே, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்த ஆய்வுகளை நடத்த கேரள அரசுக்கு அளித்துள்ள அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திரும்பப்பெற வேண்டும்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-

    புதிய அணை கட்டுவதற்கு கேரளா தொடர்ச்சியாக முயற்சி செய்வதும், அதற்கு மத்திய பாஜக அரசு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அனுமதி வழங்கி இருப்பதும் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். தமிழகத்திற்கு தொடர்ந்து மன்னிக்க முடியாத பச்சை துரோகம் இழைத்து வரும் மோடி அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.


    முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்பட முனைவதும், அதற்கு மோடி அரசு துணை போவதையும் தமிழக மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். #mullaiperiyardam #anbumani #duraimurugan #vaiko

    செய்யாறு அருகே சரிவர படிக்காத மாணவனை பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தான். இது குறித்து அவனது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பிரம்மதேசம் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த 17 வயது மாணவன், வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்துவருகிறார். இந்த மாணவன் சரிவர படிக்காததால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதையடுத்து, கோபித்துக் கொண்டு மாணவன் வீட்டில் இருந்து கடந்த 27-ந் தேதி வெளியேறினார். எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை.

    இதுபற்றி, பிரம்மதேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து மாணவனை தேடி வருகின்றனர்.

    ஆர்.எஸ்.எஸ். தவிர அனைத்து அமைப்பையும் மூடி விடுங்கள் என்று தன்னார்வலர்கள் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இடது சாரிகள் மாநாட்டை தொடர்ந்து மராத்தா சமூகத்தினரும் தலித் சமூகத்தினரும் மோதிக்கொண்டனர்.

    மாநாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ‘‘ராஜிவ் பாணியில் மோடி கொலை செய்யப்படுவார் என்று எழுதப்பட்டிருந்த கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தை எழுதிய ஐதராபாத்தைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவை புனே போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் வட மாநிலங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை குறி வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தன்னார்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் சமூக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‘இந்தியா என்பது ஒரே ஒரு தன்னாவ தொண்டு நிறுவனம் மட்டுமே இருக்கும் இடம். அதுதான் ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படுகிறது.

    மற்றவைகளை எல்லாம் மூடி விடுங்கள். தன்னார்வலர்கள் அனைவரையும் ஜெயிலில் தள்ளுங்கள், குறை கூறுபவர்களை சுட்டுத் தள்ளுங்கள், புதிய இந்தியாவுக்கு வரவேற்பு’ என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். #Congress #RahulGandhi
    ×