search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரைமுருகன்"

    • தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது.
    • அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான்.

    சென்னை:

    தேர்தல் களத்தில் பிரசார அனல் வீசினாலும் அவ்வப்போது பெரிய தலைவர்களின் பேச்சுக்கள் சிரிப்பு, சிந்தனை, நையாண்டியோடு வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது போல் அவர்கள் நயமாக பேசுவது தென்றலாக வந்து செல்லும்.

    அப்படித்தான் தி.மு.க.வின் மூத்த தலைவரான அமைச்சர் துரைமுருகனின் பேச்சும் தேர்தல் களத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். வழக்கம் போலவே தனது நகைச்சுவை கலந்த பேச்சை மலரும் நினைவுகளோடு பேசினார். அவர் பேசியதாவது:-

    உனக்கு ரொம்ப அதிர்ஷ்டம். உன் பெயர் தமிழச்சி. எதிர்த்து போட்டியிடுபவர் தமிழிசை. கொஞ்சம் மாறினால் வேறு ராகத்துக்கு போய் விடும். ஜாக்கிரதையாக பேச வேண்டும். இப்போது என்னண்ணா அந்த அம்மாவும் (தமிழிசையும்) எனக்கு வேண்டியவர்தான்.

    என் வீட்டின் பின்னால்தான் குமரிஅனந்தன் குடியிருந்தார். தமிழிசை குழந்தையாக இருந்த போது கவுன் போட்டு கொண்டு வீட்டின் முன் விளையாடும். இப்போ அது தலைவராகி, கவர்னராகி விட்டது.


    ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டோம். அந்த நிகழ்ச்சியில் என்னை முதலில் பேச விட்டு அவரை பேசவைத்தனர். அதை பார்த்ததும் அவரை அழைத்து சிரித்துக் கொண்டே நீயெல்லாம் தலைவர் என்றேன். அதையும் பேசும் போது அப்படியே சொல்லிவிட்டார்.

    தமிழிசைக்கு குரு பெயர்ச்சி மாறிபோய் விட்டது. இல்லை என்றால் கவர்னர் பதவியை விட்டு விட்டு வருமா? ஒரு மாநிலத்துக்கு அல்ல. இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தவர். ஒரு வேலையும் கிடையாது. காலை எழுந்து சாப்பிட்டு விட்டு ஒரு பைல் வந்தால் கையெழுத்து போட வேண்டியது. அதன் பிறகு நிம்மதியாக இருக்கலாம்.

    இப்போ அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது. எனக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போன் போட்டு வேண்டாம்மானு சொல்லி இருப்பேன்.

    அதிலும் தென்சென்னனக்கு வரலாமா? தமிழச்சி பாராளுமன்றத்துக்கு தகுதியானவர். தமிழச்சி ஆங்கிலத்தில் புலமை பெற்று பேராசிரியையாக இருந்தார். அவர் பேசியபோது சபையே அதிர்ந்து போனது என்றார்.

    அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு டாக்டர் தமிழிசையும் தனது பாணியில் பதிலடி கொடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-

    அண்ணன் துரைமுருகன் அவர்களே உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் தனி என்பது தமிழிசைக்கும் புரியும்.


    உங்கள் வீட்டு முன்பு கவுன் போட்டுக் கொண்டு நானும், உங்கள் மகன் தம்பி கதிர்ஆனந்த், அண்ணன் ரகுமான்கான் மகன் தம்பி சுபீர் எல்லாம் விளையாடி கொண்டிருப்பதும் அப்போது நாங்கள் உங்களை பார்த்ததும் நீங்கள் எங்களை சிரிக்க வைத்து மகிழ்வதும் மறக்க முடியாத மலரும் நினைவுகள்தான்.

    நீங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை நான். கட்சிக்காக எனக்கு எதிராக நீங்கள் பேசினாலும் நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்மனதில் இருக்கும். உங்கள் உதடுகள் பேசினாலும் உள்ளம் பேசாது.

    அண்ணன் அவர்களே, நீங்களே கூறி விட்டீர்கள் கவர்னர் பதவி எவ்வளவு சொகுசானது என்று. அப்படிப்பட்ட சொகுசான, கவுரவமான பதவியையே வேண்டாம் என்று நான் குடியிருக்கும் தென் சென்னையில் போட்டியிடுகிறேன் என்றால் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். அதை சொகுசான பதவி நிறைவேற்றி வைக்காது. மக்களோடு இருந்து நேரடியாக மக்களுக்கு சேவை செய்யும் ஆசையில் வந்திருக்கிறேன்.

    இந்த நேரத்தில் உங்களை நினைத்து சநதோசப்படுகிறேன். நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். உங்களுக்கும் குரு பெயர்ச்சி மீது நம்பிக்கை வந்திருக்கிறது. அதை நினைத்து மகிழ்கிறேன்.

    எனக்கு பெயர்ச்சிகள் சாதகமாகவே இருந்து வருகின்றன. கட்சி தலைவராகவும், கவர்னராகவும் பெயர்ச்சி நடந்தது. இப்போது பாராளுமன்றத்தை நோக்கி பெயர்கிறது.

    அண்ணனின் இயல்பை ரசிப்பவள் நான். ஆனால் கொஞ்சம் அகங்காரத்தோடு பேசுகிறீர்கள். பெயரில் தமிழச்சி, நீங்களெல்லாம் முழுங்குவதும் தமிழ் தமிழ் என்றுதான். ஆனால் தமிழச்சி பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பிய்த்து உதறி விட்டார் என்று பெருமை பேசுகிறீர்கள்.

    உங்கள் தமிழ் பேச்சு இவ்வளவு தானா? ஊருக்கு தான் உபதேசமா? பாராளுமன்றத்தில் தாய்மொழி தமிழில் பேசும் உரிமையை குமரிஅனந்தன் எப்போதோ பெற்று தந்து விட்டாரே. ஆங்கில புலமை பெற்றிருந்தும் தமிழில் பேசி அதிர வைத்தார். அவரது போராட்ட வெற்றியை கலைஞரும் பாராட்டினார் என்பதை நீங்களும் அறிவீர்கள்.

    நான் இரு மாநிலங்களிலும் தமிழில்தான் பதவி பிரமாணம் எடுத்து கொண்டேன். தமிழ் மீது அக்கறை இருந்தால் கன்னிப் பேச்சை அன்னை தமிழில் அல்லவா பேச செய்து இருக்க வேண்டும்.

    தமிழ் மொழியில் பேசுவதையே அவமானமாக கருதுகிறார்கள் தி.மு.க. எம்.பி.க்கள். ஆனால் என் தாய்மொழியாக தமிழ் இல்லாமல் போய் விட்டதே என்று பிரதமர் மோடி ஆதங்கப்படுகிறார். தாய் மொழியில் பாராளுமன்றத்தில் பேசும் உரிமையை கூட விட்டுக் கொடுத்தவர்கள் நீங்கள்.

    பேசி பேசியே மக்களை மயக்கியவர்கள் நீங்கள். மக்கள் மயக்கம் தெளிந்து விட்டார்கள். உண்மையை உணர்ந்து கொண்டார்கள். சூரியன் உதித்தாலும் சரி, உதிக்காவிட்டாலும் சரி. தாமரை மலரும் காலம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.
    • என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.

    வேலூர்:

    வேலூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி பொங்க அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    நாங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து மக்களிடையே ஒட்டு கேட்கிறோம். ஆனால் தேர்தல் வாக்குறுதி என்று எதுவும் குறிப்பிடாத பிரதமர் மோடி நான் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்கிறார்.

    எதற்காக எங்களை அழிக்க வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம். மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். இனியும் செய்யப் போகிறோம்.

    இது போன்ற மக்கள் சேவைக்காக எங்களை அழிக்க போகிறார்களா? வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்றும் பிரதமர் சொல்கிறார்.

    நாங்கள் கட்சிக்காக பல தியாகங்கள் செய்துள்ளோம். சிறை சென்று இருக்கிறோம். எங்களைப் பார்த்து எங்கள் வாரிசுகளும் அரசியலுக்கு வருவது வாரிசு அரசியலா? பிரதமர் ஒரு சந்தேக வழக்கிலாவது சிறை சென்றுள்ளாரா? முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.


    இது சர்வாதிகாரி நாடு அல்ல. சமதர்ம நாடு. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. கடந்த முறை நடந்த சோதனையின் போது என் வீட்டில் இருந்தோ எனக்கு சொந்தமான இடங்களில் இருந்தோ ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்தீர்களா? எங்கேயோ எடுத்த பணத்தை வைத்து என் மீது பழி சுமத்தினீர்கள். இதனால் அந்த தேர்தல் நின்றது. மறுபடியும் தேர்தல் நடந்து வெற்றி பெற்றது மட்டுமின்றி சத்தியமும் வென்றது.

    இப்போதும் சொல்கிறேன். இதே போன்ற செயலுக்கான ஆயத்தங்களே நடக்கின்றன. எப்படியாவது கதிர் ஆனந்தை கைது செய்யுங்கள் என்று சில வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். என் மகனை சிறைக்கு அனுப்புவதற்கும் தயாராக இருக்கிறேன். இதற்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.

    நான் ஒழுக்கமாகவும் நாணயமாகவும் இருந்ததால்தான் ஒரே தொகுதியில் 12 முறை நின்றாலும் எனக்கு மக்கள் ஓட்டு போட்டனர். அது போல தான் என் மகனையும் வளர்த்து உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
    • கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

    நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை.
    • மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து ஏதாவது மீன் சிக்காதா? என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழகம் வருகிறார்.

    இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல. மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள்.

    மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். பா.ஜ.க.வினர், தி.மு.க. வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்.

    உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள். இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்:-

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கோர்ட்டில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்ட உள்ளனர்.

    இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உச்ச கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டி உள்ளேன்.

    அண்டை மாநிலமான எங்களோடு பேசியிருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என எழுதி உள்ளேன் என்றார்.

    • நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
    • தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என ஆந்திரா அரசு கூறியிருந்த நிலையில், எந்த விழாவும் நடைபெறவில்லை. அதேநேரத்தில் பாலாற்றில் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு 315 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:-

    பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டைய மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

    1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

    இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த குறிப்பிட்டுள்ளது.

    இவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும் என்று கூறியுள்ளார்.

    • காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.
    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

    அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். "காவிரியின் குறுக்கே மேகதாதுவை அனுமதிக்காதே" என சட்டசபை வளாகத்தில் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * காவிரி விவகாரம் குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்தோம்.

    * உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு செயல்படுவது மட்டுமே காவிரி ஆணையத்தின் வேலை.

    * காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை பேசியதற்கு கண்டன தீர்மானம் பேரவையில் நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

    • மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.
    • பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் கூறியதாவது:

    * காவிரி விவகாரத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டுகிறது.

    * காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் கவலை அளிக்கிறது.

    * மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்ட ஆணைய கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள்? அதில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்றும் கேள்வி எழுப்பிய ஈபிஎஸ், மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற வேண்டும் என்று கூறினார்.

    மேகதாது அணை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:

    * மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது.

    * நீர் பங்கீட்டு பிரச்சனைகளை தீர்வு காண மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

    * ஆணையத்திற்கு நீண்ட காலம் தலைவர் நியமிக்கப்படாமல் இருந்ததால் பிரச்சனை ஏதும் வரவில்லை.

    * தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.1-ந்தேதி கூட்டம் நடைபெற்றது.

    * கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

    * தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

    * மேகதாது விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    * மேகதாது விவகாரத்தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசி கொண்டிருக்கிறது.

    * மேகதாது பற்றி பேச கேரள அரசும், மத்திய பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    * மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

    * கூட்டத்தில் எடுத்த முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு.

    * மேகதாது தொடர்பாக மத்திய பொதுப்பணித்துறைக்கு அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

    * தமிழ்நாட்டில் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது.

    * பாஜகவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    * மேகதாது அணை குறித்து யாரும் அஞ்ச தேவையில்லை.

    * மேகதாது அணை கட்டுவதை தமிழகத்தை சேர்ந்த எந்த கட்சியும் அனுமதிக்காது.

    * மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது என்று அவர் கூறினார்.

    • பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
    • மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் 23-ந் தேதி (நாளை) காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.
    • வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு வரும் 19-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

    * விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.

    * வரும் 19-ந்தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும்.

    * வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.

    * ரூ.2000 செலுத்தி, தி.மு.க. வேட்பாளருக்கான விண்ணப்ப படிவத்தை கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

    • அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள 10சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது என்றார்.

    சோதனை ஓட்டத்தில் ஒரு சில ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என கூறிய அவர், விடுபட்டுள்ள ஏரி குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பைப் இணைப்பு நடந்து வருவதாகவும், விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்ட தொடக்க விழா நடைபெறும் எனவும் உறுதி அளித்தார்.

    அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது இந்த திட்டம் சுணக்கமாக செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வந்தவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டிஸ்மிஸ் செய்து பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு தி.மு.க. தலைமைக்கு கடிதம் கொடுத்தார். அதில் தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    அதை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார்.
    • பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில், 'விரைவில் அமலாக்கத்துறை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வீட்டு கதவை தட்டும்' என்று கூறினார்.

    காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு?. நாங்களே திறந்து வைத்திருக்கிறோம்.

    பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார். அவர் என்ன வந்து பார்த்தாரா?. பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையை குழப்பி விடுவீர்கள். கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×