search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civic poll"

    • புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட சுப்ரீம்கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.
    • இதனால் கோர்ட்டு அவமதிப்பை தவிர்த்திட மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 2011-க்கு பிறகு 10 ஆண்டுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

    சுப்ரீம்கோர்ட்டு தலையீட்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியது.

    இருப்பினும் இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கால் 2 முறை தேதி அறிவிக்கப்பட்டும், தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட சுப்ரீம்கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.

    இதனால் கோர்ட்டு அவமதிப்பை தவிர்த்திட மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனையை பெற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

    இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்துள்ள நிலையில், அதை தி.மு.க.வும், மற்றக் கட்சிகளும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. பா.ம.க. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்து விட்டதாகவும், இனி அக்கட்சியால் எழ முடியாது என்றும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 23 லட்சம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க வாங்கிய வாக்குகளின் விழுக்காடு 5.40 ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் பா.ம.க. வாங்கிய வாக்குகளை விட இது அதிகம் ஆகும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய அதே அளவிலான வாக்குகளை, இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெறும் 7 இடங்களில் போட்டியிட்டு பா.ம.க. பெற்றுள்ளது.

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வகையிலும் இழப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

    தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஒரு தேர்தலில் வெற்றியடைந்த கட்சி, அடுத்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததையும், அந்த தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சி அதற்கு அடுத்த தேர்தலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெற்றி பெற்றதையும் பார்த்திருக்கிறோம்.

    தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சரிவுகளை சந்திக்கவே சந்திக்காத கட்சி அல்ல. கடந்த காலங்களில் இதைவிட மிக மோசமான தோல்விகளை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்திருக்கிறது. சாதாரண வேகத்தில் பயணித்து சரிவுகளை சந்திக்கும் போது, உடனடியாக அதிக வேகத்தில் மீண்டும் பயணித்து இலக்குகளை எளிதாக கடக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு.

    இதற்கு காரணம் பா.ம.க.வை உந்தித் தள்ளும் சக்தியாக இருப்பவர்கள் அனைவரும் இளைஞர்கள்... இளைஞர்கள்... இளைஞர்கள் என்பது தான். கடந்த காலத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அடைந்த தோல்விகளின் ஈரம் காயும் முன்பே நமது வாக்கு வலிமையை நிரூபித்துக் காட்டிய தருணங்கள் ஏராளம்.

    இப்போதும் நமது வலிமையையும், செல்வாக்கையும் நிரூபித்துக்காட்ட இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள், இரு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் என வாய்ப்புகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

    பாட்டாளி இளைஞர்களும் போருக்காக காத்திருக்கும் புறநானூற்று வீரர்களைப் போல, மக்கள் சந்திப்பு, கொள்கைப் பிரசாரம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் நமது வலிமையை பெருக்கிக் கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்..... புதிய வரலாறுகளை படைக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போனதற்கு தி.மு.க.தான் காரணம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் பொய் பிரசாரம் செய்தாலும் நாட்டு மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது மூன்றாம், ஐந்தாம் கட்ட தேர்தலில் பிரதிபலிக்கும். மோடி மீண்டும் பிரதமராவார். தூத்துக்குடியில் தாமரை வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போனதற்கு தி.மு.க.தான் காரணம். உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

    ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். அ.தி.மு.க. வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு உண்டு. அவர்களது வெற்றிக்கு பாடுபடுவேன். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். தூத்துக்குடியில் துப்பாக்கி நடமாடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதியே சொல்லியுள்ளார்.

    பயங்கரவாத கலாச்சாரம் எந்த விதத்திலும் தூத்துக்குடியில் தலை எடுத்து விடக்கூடாது. இன்று தி.மு.க.வை சேர்ந்தவர் தனது சகோதரரை சுட்டுக்கொன்று உள்ளார். இது உண்மையிலேயே கவலை அளிக்கக் கூடியது.

    இதே போல் எத்தனை பேர் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. தூத்துக்குடி அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்காக தொழிற்சாலைகள் ஏற்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டம்.

    தூத்துக்குடி மேம்பாட்டிற்கு எனது பணி எப்போதும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழகத்தில் 40 இடங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அத்திட்டத்தை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, இத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தி.மு.க. தான். ஹைட்ரோகார்பன் திட்டத்திலும் 54 இடங்களில் கையெழுத்து இடும்போதும் தமிழகத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அதை முறைப்படுத்தி நடைமுறைப்படுத்த யோசனை செய்வோம் என்ற அவர் மக்களுக்கு விருப்பமில்லாத எதையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்றார்.  #BJP #TamilisaiSoundararajan #DMK
    உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுவதாக ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். #DengueFever
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கொ.ம.தே.க. ஆலோசனை கூட்டம் அந்தியூரில் நடந்தது.

    இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுந்த நேரத்தில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குவதுதான் பொது மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதாகும். தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அது சுயநலத்தோடு தள்ளிப்போடப்படுகிறது என்ற ஐயம் இன்றைக்கு மக்களிடையே இருக்கிறது.

    ஆண்டுக்கணக்கில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள் மழையை காரணம் காட்டி ஒத்தி வைத்திருப்பது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளில் ஓராண்டு ஆகப்போகிறது ஆனால் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே அந்த தொகுதி மக்கள் அரசால் ஏமாற்றப்படுகிறார்கள் .

    உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் இன்றைக்கு டெங்கு போன்று காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் இடமில்லாத அளவுக்கு இன்றைக்கு நோயாளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் இது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த வகையிலே நாம் ஏமாற்றப்படுகிறோம்.

    உள்ளாட்சி தேர்தலை எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக தமிழக அரசு நடத்த வேண்டும், 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

    சிவகாசியில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாலும் ஒரு நிரந்தரமான தீர்வு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. அடுத்த வருடம் என்ன நடக்கும், சிவகாசி தொழிற்சாலைகள் பட்டாசுகளை உற்பத்தி செய்வதா? வேண்டாமா? என்று எந்தவிதமான தெளிவும் இல்லாமல் இன்றைக்கு தொழிற்சாலையை மூடுகின்ற நிலைக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

    தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் போடப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வழக்கு போடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் பட்டாசு வெடித்ததற்காக 2,400 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது

    பவானி ஆற்றில் கலக்கின்றன சாயக்கழிவு தொடர்ந்து கலந்து கொண்டே இருக்கிறது.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார். #DengueFever
    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #TNLocalBodyElections #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஜெயசுகின். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட கூடிய மேயர் உள்ளிட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல், இழுத்தடிக்கப்படுகிறது.

    உள்ளாட்சி தேர்தலை கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தி முடித்து இருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடத்தப்படவில்லை.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு நிர்வகிக்கிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த சிறப்பு அதிகாரிகளின் பணியை நீட்டித்து வருகிறது.

    தொகுதி வரையறை தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் காரணம் கூறுகிறது.


    ஆனால், நிலுவையில் உள்ள இந்த வழக்கிற்கும், தேர்தல் நடத்துவதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இதன்பின்னரும், இதே காரணத்தை கூறி தேர்தல் நடத்தாமல், மாநில தேர்தல் ஆணையம் இழுத்தடிக்கிறது.

    மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர், ஒரு பிரமாண மனுவை தாக்கல் செய்தார்.

    அதில், உள்ளாட்சி தேர்தலை 2018-ம் ஆண்டு ஜனவரிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், இந்த உத்தரவாதத்தை இதுவரை நிறைவேற்றாமல், அவர் இழுத்தடிக்கிறார். மெத்தன போக்குடன் மாநில தேர்தல் ஆணையம் செயப்பட்டு வருகிறது.

    மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல நூறு கோடி ரூபாய் நிதி உதவிகள் கிடைக்காமல் போய் உள்ளது. பல நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளன. எனவே, 10 நாட்களுக்குள் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மதன் லோகு, அப்துல் நஷீர், தீபக் குப்தா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் ஆஜராகி, ‘பிரமாண மனுவில் ஜனவரிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் மெத்தனமாக உள்ளன’ என்று கூறினார்.

    இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘பிரமாண மனுவில் உத்தரவாதத்தை குறிப்பிட்டு, கோர்ட்டு தாக்கல் செய்து விட்டு, அதை நிறைவேற்றாமல் இருப்பது சரியான நடவடிக்கை இல்லை. பிரமாண மனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாகத்தான் அர்த்தம்.

    அதனால், ஏன் உத்தரவாதத்தை அளித்து விட்டு அறை நிறைவேற்றவில்லை? ஏன் பொய்யான உத்தரவாதம் தரப்பட்டது? என்பதற்கு விரிவான பதிலை 4 வாரத்துக்குள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யவேண்டும்’ என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.#TNLocalBodyElections #SupremeCourt
    ×