search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க."

    • மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவராகவும் அவர் செயலாற்றி வருகிறார்.

    என்.ஜி.ஓ. காலனி :

    நாகர்கோவில் நாகராஜா கோவில் தெற்குரத வீதியில் ராஜன் மெடிக்கல் ஏஜென்சி நடத்தி வருபவர் சி. ராஜன். அ.தி.மு.க.வில் 1988 முதல் 35 வருட காலமாக பணியாற்றி வரும் இவரை, குமரி மாவட்ட செயலா ளரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் பரிந்துரை யின் பெயரில் வர்த்தக அணி மாநில இணைச் செயலாளராக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்தார். இதைத் தொடர்ந்து சி.ராஜன், எடப்பாடி பழனிச்சாமியை சென்னை யில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வை சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாநில நிர்வாகி சந்துரு, நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷய கண்ணன், தோ வாளை யூனியன் தலைவரும் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான சாந்தினி பகவதியப்பன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வர்த்தக அணி மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.ராஜன், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி செயலாளர் மற்றும் பிள்ளை யார்புரம் சிவந்தி ஆதித்த னார் கல்லூரி செயலாளர் ஆகிய பொறுப்புகளையும் நிர்வகித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவராகவும் அவர் செயலாற்றி வருகிறார்.

    அ.தி.மு.க வர்த்தக அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.ராஜ னுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றனர்
    • மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் உள்ளிட்ட பலர் உடன்இருந்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நாக்குபெட்டா நலசங்க தலைவர் தும்மனட்டிபாபு தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்.பி.ஏ தலைவர் தியாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்தை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைசெயலாளர் பாலநந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன்இருந்தனர்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநில மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் 25, 26-ந் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயலாற்றுதல் குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., எடுத்து கூறி னார்.

    இதில் மாவட்ட இணை செயலாளர் சண்முகப்பிரியா, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்மு கையா, முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல செய லாளர் கந்தசாமி பாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதா உருவாக்கித்தந்த திட்டங்கள் வருகிற தேர்தலில் வாக்குகளாக மாறும்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட் டில் கழக பூத் கமிட்டி, மகளிர் குழு அமைத்தல், இளை ஞர் மற்றும் இளம்பெண்கள் பாச றைக்கூட்டம் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சுதா.கே.பரமசிவன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதா வது:-

    புரட்சித்தலைவி அம்மா தேசியம் கடந்து உலக மக்கள் அனைவரும் நேசிக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கியவர். ஏழை, எளிய மக்களை நேசித்து அவர்களின் வாழ்வு வளம் பெற செய்தவர். சாதி, மதம் மொழி கடந்து மக்கள் அனை வராலும் நேசிக்கப்படக்கூடிய திறம்பட ஆட்சியை நடத்தியவர்.

    அவரது வழியில் வந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கழகத்தின் கடைநிலை ஊழியராய் வந்து கழகத்தின் பொதுச்செயலா ளராக உருவாகிக்கிறார் என் றால் அவர் கொண்ட விசுவா சமும், உறுதிமிக்க கொள்கையும் தான் காரணம். கழக பொதுச் செயலாளர் எடப்படாடியார் அனைத்தையும் அறிந்தவர். அவரை யாரும் ஏமாற்றவோ, அச்சுறுத்தவோ முடியாது.

    ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க கூடியவர் எடப்பாடியார் மட்டும் தான். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக மாறும். காவிரி, முல்லை பெரி யாறு அணைகள் பிரச்சினை யில் தமிழகத்தின் உரிமையே நிலைநாட்டியது அம்மா தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

    ஏழை, எளிய மக்களுக்கும், அன்றாடம் பசியில் வாடுவோ ருக்கும் அம்மா ஏற்படுத்திய நல்ல பல திட்டங்கள் அனைத் தும் வரும் தேர்தலில் நமக்கு வாக்குகளாக மாறும். மேலும் இளைஞர்கள், பெண்கள் மாணவர்கள் ஆகியோர்களின் தேவைகளுக்கேற்ப நமது பொதுச் செயலாளர் பார்த்து பார்த்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

    வரும் தலைமுறையினரின் நோக்கங்களையும், எதிர்பார்ப் புகளையும் நமது கழக பொதுச்செயலாளர் எடப்பாடி யார் நிச்சயம் செய்து தருவார். நாம் பூத் கமிட்டி தெளிவாக அமைப்பதன் மூலம் அதிக உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கழக ஆட்சி மலர நாம் வழி வகுக்கலாம்.

    இனி மேலும் தி.மு.க. தலை வர் ஸ்டாலினை நம்புவதை விட்டுவிட்டு நாம் சந்திக்கும் நாளைய நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றாய் சிந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • ஆய்வின்போது உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், குறைகளை கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
    • கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ.விடம் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் கோரிக்கை விடுத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கடையநல்லூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, பெண்கள் வார்டு மற்றும் குழந்தைகள் வார்டுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. விடம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு பாய்ல்ஸ் அப்பாரட்டஸ் என்ற கருவியும், ஸ்கேன் எடுப்பதற்கு அல்ட்ரா சோனோகிராம் அப்டாமன் என்ற கருவியும் அவசரமாக தேவை ப்படுவதால் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

    அந்த கருவிகள் வாங்குவதற்கு நடவடி க்கை எடுப்பதாக கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். ஆய்வின் போது, தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கணேசன் மற்றும் அரசு மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி அய்யாத்துரை பாண்டியன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.
    • நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள விண்மின் இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கி, உணவு பரிமாறி குழந்தைகளோடு இணைந்து தீபாவளியை அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உற்சாகமாக கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், குருவிகளும் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, கோவிந்தன், தேவர்குளம் கிளை செயலாளர் சண்முகசுந்தரம், களப்பாகுளம் பசும்பொன், களப்பாகுளம் கிளை செயலாளர் முருகன், எழில் நகர் கிளை செயலாளர் பாபு கதிரேசன், என்.ஜி.ஓ. காலனி கிளை செயலாளர் ராஜா, இருமன்குளம் பசும்பொன், சங்கரன்கோவில் காங்கேயன் என்ற கார்த்தி, இளைஞர் அணி பட்டு ராஜா, கார்த்திக் தங்கமுத்து, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், ஞானசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • 2024 நாடாளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெறுவதற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
    • திருப்பூர் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் பூத் கமிட்டி இளைஞர், இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு அமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தூரிலும், மேட்டுப்பாளையம், வள்ளியரச்சல் ஊராட்சிகளுக்கான கூட்டம் புஷ்பகிரியிலும், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சிக்கான கூட்டம் வெள்ளகோவிலிலும் நடந்தது. இதற்கு திருப்பூர் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

    வெள்ளகோவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வி.ஜெயராமன் பேசியதாவது:- காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெறுவதற்கு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்தும் மதத்தினருக்கும் பதவிகள் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தி தொகுதிகளை பலப்படுத்த வேண்டும்.

    உங்களால் தான் கழகம் வெற்றி பெற வேண்டும். ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக சிறப்பான முறையில் பணியாற்றி வெற்றியை தேடி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மேலிடப்பார்வையாளரும், கழக அமைப்பு செயலாளருமான எஸ். தாமோதரன் கலந்து கொண்டு ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட கழக பொருளாளர் கே.ஜி.கிஷோர்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஏ.எஸ்.முருகவேல், கே.ராஜலிங்கம், காங்கயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ். என்.நடராஜ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன், ஒன்றிய கழக பொருளாளர் வி.பி. சந்திரமோகன், நகர செயலாளர்கள் காங்கயம். வெங்கு என்கின்ற ஜீ.மணிமாறன், முத்தூர். ஜி.முத்துக்குமார், வெள்ளகோவில் டீலக்ஸ் ஆர். மணி, முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி தலைவர் கே.கண்ணுசாமி, இளைஞரணி செயலாளர் சி.கண்ணுசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ராஜாவை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு போராட்டம் நடத்த கோட்டார் பகுதியில் அப்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். தேர்தல் விதிமுறை அமலில் இருந்த நிலையில் நிர்வாகிகள் திரண்டதால் எஸ்.ஏ.அசோகன் உட்பட 27 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் ஜே.எம்.2 கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. எஸ்.ஏ.அசோகன் மற்றும் கிருஷ்ணதாஸ், ஆர்.ஜே.கே. திலக், ஜெயசீலன், டாரதி சாம்சன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனவரி 22 -ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • விழாவிற்கு அ.தி.மு.க. வடக்கு பகுதி செய லாளர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார்.
    • கே.சி.யு.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    தீபாவளி பண்டிகையை யொட்டி நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் நிர்வாகி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புத்தேரி பராசக்தி கார்டனில் நடந்தது. விழாவிற்கு அ.தி.மு.க. வடக்கு பகுதி செய லாளர் ஸ்ரீலிஜா தலைமை தாங்கினார்.

    விழாவில் நலத்திட்ட உதவிகளை மாநில நிர்வாகி கிருஷ்ணதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி சந்திரன், மாவட்ட துணை செயலாளர் பார்வதி, கவுன்சிலர் அக்சயா கண்ணன், பகுதி செயலாளர்கள் முருகேஷ்வரன், ஜெவின் விசு, இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், மற்றும் கே.சி.யு.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பூத்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி யில் 15 வார்டுகள் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல்

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் இளைஞர்கள் இளம்பெண்கள், மகளிர் பாசறை, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளை கொண்டு வார்டுகளில் பூத்கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    இந்த பூத்கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் நிர்வாகி களுக்கான ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது. பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு ஆலங்குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கே.பி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே. சண்முக சுந்தரம், தென்காசி தெற்கு மாவட்ட துணை செயலாளர் பசுவதி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூத் கமிட்டி பணிகள்

    தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் களப்பணிகள், வாக்காளர்களை சந்தித்தல் உள்ளிட்ட பூத்கமிட்டியின் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

    ஆலங்குளம் பேரூராட்சி 13- வது வார்டு, 14-வது வார்டு, 15-வது வார்டு மற்றும் சந்தனமாரியம்மன் கோவில் திடல், நத்தம் மாரியம்மன் கோவில் திடல், நாடார் திருமண மண்டபம், அண்ணாநகர், பரும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலங்குளம் நகர துணைசெயலாளர் சால மோன்ராஜா, பேரூராட்சி துணை தலைவர் ஜான்ரவி, கவுன்சிலர் அன்னத்தாய் சொரிமுத்து, தகவல் தொழில்நுட்பம் நிக்சன் சத்தியராஜ், சிறுபான்மை பிரிவு ஐசக்சேகர், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தமிழரசன், ஜெயலலிதா பேரவை தனபால், விவசாய அணி தங்கசாமி மாரியப்பன், நகர இணை செயலாளர் நடராஜன், சுமோ சூரியன், இளைஞரணி கேபி குமரன் தேவதாஸ் சுரேந்திரன். சொரிமுத்து சொக்கலிங்கம்.செந்தில் தீப்பொறி பெரிய பாண்டியன், 11-வது வார்டு தங்கராஜ் தேவதாஸ், நகர மகளிர் அணி முத்து லெட்சுமி, விஜி வனிதா வசந்தி உள்பட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் அணியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கவும்
    • இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் அதிகமான பெண்களை சேர்க்கவும் தீர்மானம்

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் ராஜாக்க மங்கலத்தில் ஒன்றிய செய லாளர் பொன்சேகர் தலை மையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம்

    எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகே சன், இலக்கிய அணி அமைப்பு செயலாளர் சந்துரு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக் ஷயாகண்ணன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர நாத், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அய்யப்பன், சாந்தினி பகவதியப்பன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சுந்தரம், மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் ஜான்சிலின் விஜிலா, மாநில மகளிர் அணி துணை செயலாளர் ராணி, ஒன்றிய செயலாளர்கள் வீராசாமி, ராதாகிருஷ்ணன், முன் னாள் மாவட்ட செயலாளர் அசோகன், ராஜாக்கமங்க லம் கிளை செயலாளர் தங்கப்பன், ஒன்றிய அவைத் தலைவர் முருகன், ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் மகளிர் அணியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கவும், இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் அதிகமான பெண்களை சேர்க்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்து அதிகமான வாக்குகளை அ.தி.மு.க.விற்கு பெற தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. முடிவில் நாகர்கோவில் மாநகர உறுப்பினர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்

    • அ.தி.மு.க.வின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சியை தூக்கிப்போட மக்கள் நினைத்து விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லல் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் கல்லல் பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க.வின்

    52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கொள்கை பரப்பு துணை செயலா ளரும், முன்னாள் அமைச்ச ருமான மாப.பாண்டிய ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எடப்பாடியார் எண்ணத் திற்கு ஏற்ப எதிர்காலத்தில் வர இருக்கின்ற தேர்தல் மற்றும் கழகத்தினுடைய வளர்ச்சி பணியை கருத்தில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டி அமைக்கும் போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி இதை நாம் செய்துவிட்டால் தி.மு.க. வினர் எத்தனை கோடி கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது பொதுமக்கள் இந்த ஆட்சியை தூக்கிப் போட நினைத்து விட்டார் கள்.

    சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிகப்படி யான வாக்கு வித்தியா சத்தில் நம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு அமைத்து இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    ஆளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் எங்கே? என்று கேட்டால் நிலம் இருக்கிறவர்களுக்கு இல்லை என்கிறார். நகை கடன் தள்ளுபடி எங்கே என்று கேட்டால் கார் இருக்கிறது என்கிறார். இப் படி வாக்குறுதி கொடுக்கும் போது அனைவருக்கும் தருவேன் என்றவர் இப் போது கொடுக்காமல் இருப்பதற்கான கார ணங்களை தேடி கொண்டி ருக்கிறார்.

    பொது மக்களிடம் எந்த பொய்யை கூறினால் வாக்கு களை பெறலாம் என்பது தி.மு.க.வினர் கை தேர்ந்த வர்கள் என்றும், ஆட்சிக்கு வந்த பின் அதனை நிறை வேற்ற மாட்டார்கள் என்றும், தற்போது மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் நாகராஜன்.நகர செயலாளர் ராஜா ஒன்றிய செயலாளர்கள், கருணாகரன் செந்தில்குமார், அருள்ஸ்டிபன், சிவாஜி, கோபி, செல்வமணி, சோனைரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ் செல்வன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×