search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "akhilesh yadav"

    • அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.
    • அமித்ஷாவுக்கு தடையாக இருந்த பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்றார். அங்கு சமாஜ் வாடி கட்சி அலுவலகத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்குமாறு உத்தரபிரதேச வாக்காளர்களிடம் கோரிக்கை வைக்க இங்கு வந்துள்ளேன். நான்கு விஷயங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். முதலில் இந்த தேர்தலில், அமித்ஷாவை பிரதமராக்க, பிரதமர் மோடி ஓட்டு கேட்கிறார்.

    பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது. அன்று அவர் அமித் ஷாவை தனது வாரிசாக்கி, பிரதமராக்க முடிவு செய்துள்ளார். இதற்காக மோடி கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அமித்ஷாவுக்கு தடையாக இருந்த அனைத்து பெரிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

    தற்போது அமித் ஷாவுக்கு பதிலாக ஒரே ஒரு தலைவராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். 75 வயதுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதில்லை என்று பிரதமர் மோடி இதுவரை கூறவில்லை. இந்த விதி

    முறையை (75 வயதானால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்) பா.ஜனதா கட்சியில் மோடி ஏற்படுத்தினார். இந்த விதியை அவர் பின் பற்றுவார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

    2-வதாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், 2 அல்லது 3 மாதங் களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

    3-வதாக, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றி விடுவார்கள். போகிறார்கள். எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை நீக்குவார்கள்.

    பா.ஜனதாவினர் எப்போதுமே இட ஒதுக்கீட் டிற்கு எதிரானவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை (மாற்றி) இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். நான்காவதாக, ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 220 இடங்களுக்கு குறைவாகவே பெறும் என்று தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன. அரியானா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அவர்களது இடங்கள் குறைய போகிறது. பா.ஜனதா ஆட்சியை அமைக்கப் போவதில்லை.

    இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றார். அகிலேஷ் யாதவ் கூறும் போது, 543 தொகுதிகளில் 143 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று பா.ஜனதாவே நம்புகிறது என்றார்.

    • நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார்.

    நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிப் பேசி வருவதால் அரசியல் களம் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி உடன்பட பல பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் இதுகுறித்து பாராமுகம் காட்டுவதாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடி பிரச்சாரங்களில் பேசி வருவது குறித்து விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளர்களை சாதித்து கார்கே உரையாடினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, இந்து- முஸ்லிம், மட்டன்- சிக்கன் என பிரச்சாரத்தில் பேசுவதை விட்டுவிட்டு நாட்டில் உள்ள மக்கள் பிரச்சனயை பற்றி பேச வேண்டும்.

    அவரது பிரச்சாரத்தில், மட்டன், மாட்டிறைச்சி,சிக்கன், மீன், பெண்களின் தாலி உள்ளிட்ட வார்த்தைகளையே கேட்க முடிகிறது. அவர் மக்களிடம் இந்து- முஸ்லிம் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு நாட்டுக்கு பாஜக செய்த்வற்றைப் பற்றி பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நாட்டில் நடந்து முடித்த 4 கட்ட வாக்குப்பதிவைப் பார்க்கும்போது இந்தியா கூட்டணி வலிமையுடன் இருப்பதாக தெரிவித்தார். 

    • 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.
    • பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    லக்னோ:

    பாரதிய ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வரும் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ்யாதவ் பாராளுமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்கியது அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. அங்குள்ள கண்ணூஜ் தொகுதியில் அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    முதலில் இத்தொகுதியில் அகிலேஷ் யாதவ்வின் சகோதரி மகன் தேஜ் பிரதாப் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது மாமாவுக்காக ( அகிலேஷ்யாதவ்) தொகுதியை விட்டு கொடுத்தார். இதனால் கண்ணூஜ் நட்சத்திர தொகுதியாக மாறியது. இத்தொகுதியில் அவர் ஏற்கனவே 2000, 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். கண்ணூஜ் தொகுதியை பொறுத்த

    வரை அகிலேஷ் யாதவின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.

    இத்தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஒருமுறையும், அகிலேஷ் 3 முறையும், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஒரு முறையும் வெற்றி வாகை சூடி உள்ளனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரத் பதக் உள்ளார். இம்முறையும் இவர் மீண்டும் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில் இவரை டிம்பிள் யாதவ் 19,907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கு பழி வாங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிம்பிள் யாதவைவிட 12,353 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று சுப்ரத் பதக் வெற்றி பெற்றார்.

    இம்முறை டிம்பிள் யாதவ் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவரது இடத்தை நிரப்பும் வகையில் அவரது கணவர் களத்தில் குதித்துள்ளார்.

    இந்த முறை சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி சார்பில் அகிலேஷ் நிற்பதால் கண்டிப்பாக எங்களுக்கு தான் வெற்றி என அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயம் பாரதிய ஜனதாவை பொறுத்தவரை இது ஒரு கவுரவ பிரச்சனை. எப்படியும் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவை வீழ்த்துவோம் என பாரதிய ஜனதாவினர் கூறி உள்ளனர். தனது ஆஸ்தான தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது போன்ற சூழ்நிலை கண்ணூஜ் தொகுதியில் நிலவுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இத்தொகுதியில் சுமார் 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சம் பேர் முஸ்லீம்கள், யாதவர்கள், பிராமணர்கள் தலா 2.5 லட்சம் பேர் உள்ளனர். கண்ணூஜ்ஜில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் தலித் வாக்குகள் மிக முக்கியமாக உள்ளது. தலித்துகள் சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை தவிர ராஜபுத்திரர்கள், வைசியர்கள், மற்றும் குர்மி சமூகத்தினர் கணிசமானவர்கள் வசித்து வருகின்றனர்.

    இத்தொகுதியில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தனது கட்சி சார்பில் இம்ரான் பின் ஜாபரை நிறுத்தி உள்ளார்.

    இவர் தலித் ஓட்டுகள் மட்டுமல்லாது முஸ்லீம் ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. வாக்காளர்கள் மத்தியில் போதிய அளவு வேலை வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் உள்ளது. ஏராளமானவர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். இது இத்தேர்தலில் பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. கண்ணூஜ் தொகுதியில் இம்முறை பாரதீயஜனதா- சமாஜ்வாடி, கட்சிகளுடன் ஓட்டு வங்கி வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்த வரை இத்தொகுதியில் இதுவரை வென்றதாக வரலாறு இல்லை. இதனால் பதக்-யாதவ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி 4-வது முறையாக அகிலேஷ் யாதவ் சாதிப்பாரா? அல்லது பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    • சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது.
    • இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது. அந்த இடங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது பா.ஜனதா பொய்களை அள்ளி வீசியது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சியை போன்று அதிக அளவில் பொய் சொல்ல வேறு கட்சிகள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.

    மேற்கு திசையில் இருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இந்த முறை பா.ஜனதாவை முற்றிலும் அகற்றிவிடுவது போல் உணர்த்துகிறது. இது பா.ஜனதாவின் முதல் நாளின் முதல் ஷோ பிளாப் போன்று உள்ளது.

    பா.ஜனதா திரும்ப திரும்ப சொல்லுவதை பொதுமக்கள் யாரும் கேட்க விரும்பவில்லை. தற்போது வரை அவர்கள் புனைந்துள்ள கதை, யாரும் கேட்க விரும்பாத வகையில் உள்ளது.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என நம்புகிறேன்.
    • சமாஜ்வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியில் சமாஜ்வாதி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சமாஜ்வாதி கட்சி தனது தோல்வி மற்றும் இடங்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

    மக்கள் இடங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியபோது காங்கிரசுக்கு இவ்வளவு சீட் ஏன் கொடுத்தீர்கள் என்றார்கள்?

    கூட்டணியில் வரவேண்டும் என்பதனால் காங்கிரசுக்கு 17 இடங்கள் கொடுத்துள்ளேன்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோற்கடிப்போம் என்று நம்புகிறேன்.

    அவர்கள் (பா.ஜ.க.) 400ல் வெற்றி பெறப் போவதில்லை. தோற்கப் போகிறார்கள்.

    அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும் என கனவு காண்பவர்களை 400 இடங்களில் தோற்கடிக்கச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • தேர்தல் பத்திரம் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம்.
    • பா.ஜனதா ஊழல்வாதிகளை மட்டும் வைத்து கொள்ளவில்லை. ஊழல் பணத்தையும் வைத்துள்ளது.

    காசியாபாத்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    இந்த பாராளுமன்ற தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். ஒரு புறம். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா அரசியல் சாசனத்தையும், ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயல்கின்றன. மறுபுறம் இந்தியா கூட்டணியும் காங்கிரசும் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன.

    தேர்தலில் மூன்று பெரிய பிரச்சனைகள் உள்ளன. வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனை. 2-வது பண வீக்க பிரச்சனை. ஆனால் அதை பற்றி பேசாமல் பா.ஜனதா மக்களை திசை திருப்புகிறது. இந்த பிரச்சனைகளை பிரதமரோ பா.ஜனதாவோ பேசுவதில்லை.

    சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி நீண்ட பேட்டி ஒன்றை அளித்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது. அதில் தேர்தல் பத்திரங்கள் பற்றி விளக்க முயன்றார். வெளிப்படைத் தன்மைக்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

    இது உண்மையாக இருந்தால் ஏன் அந்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. வெளிப்படைத்தன்மையை கொண்டு வர விரும்பினால் பா.ஜனதாவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள். அவர்கள் உங்களுக்கு (பா.ஜனதா) பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?

    தேர்தல் பத்திரம் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். இதை இந்தியாவில் அனைத்து தொழில் அதிபர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    பா.ஜனதா ஊழல்வாதிகளை மட்டும் வைத்து கொள்ளவில்லை. ஊழல் பணத்தையும் வைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும்.

    இந்த விவகாரத்தில் பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் பிரதமர், ஊழலின் சாம்பியன் என்பது முழு நாட்டிற்கும் தெரியும்.

    15-20 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால் தற்போது 150 இடங்கள்தான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பா.ஜனதா 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது.

    ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வரும் தகவல்களின்படி நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். உத்தரபிரதேசத்தில் நாங்கள் மிகவும் வலுவான கூட்டணியை கொண்டு உள்ளோம். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும். இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வலுவான அடித்தளம் அமைந்து இருக்கிறது.

    நான் அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுவேனா? என்று கேள்வி கேட்கிறார்கள். இது பா.ஜனதாவின் கேள்வி. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு முடிவுகள் அனைத்தும் மத்திய தேர்தல் கமிட்டி மூலம் எடுக்கப்படுகிறது. எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன்.

    கடந்த 10 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி. வரி மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை ஆதரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் முறையை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.

    வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்தவது எங்களது முதல் பணியாகும். அதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையில் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம். இதில் பயிற்சி உரிமை என்ற யோசனையும் ஒன்று.

    உத்தரபிரதேசத்தின் அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான உரிமையை வழங்க முடிவு செய்துள்ளோம். பயிற்சி அளிக்கப்படும். இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். இந்த உரிமையை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்குவோம். தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க சட்டம் இயற்றுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
    • ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான் என்றார் அகிலேஷ்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பிலிபித் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறது; டீசல், பெட்ரோல் அல்லது அடிப்படைத் தேவைகள் எல்லாம் இப்போது விலை உயர்ந்தவை.

    இந்த அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான்.

    உத்தர பிரதேசம் அவர்களை ஆட்சி அமைக்க வைத்தது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 2014-ல் ஆட்சிக்கு வந்தாலும் 2024-ல் வெளியேற்றப்படுவார்கள். உத்தர பிரதேச மக்கள் அன்புடன் வரவேற்பார்கள், அவர்கள் உற்சாகமாகவும் விடை அளிப்பார்கள்.

    அவர்கள் சீனா எங்கள் கிராமங்களின் பெயரை மாற்றியிருந்தால், சீனாவின் பெயரை மாற்றுவோம் என பா.ஜ.க. அரசு கூறுகிறது. சீனாவின் பெயரைத் திருத்தாதீர்கள், அவர்களுடன் வியாபாரத்தை நிறுத்துங்கள், அப்போதுதான் நம் தேசம் முன்னோக்கிப் பார்க்கப்படும் என தெரிவித்தார்.

    • ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை
    • உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை

    பாஜக இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது சொந்த கிராமமான சைஃபாயில் தனது கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    அப்போது பேசிய அவர், "ஹோலி பண்டிகை ஒருவரையொருவர் கொண்டாடுவதற்கும் அரவணைப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று நீங்களும் நானும் இந்த சமயத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஒரே ஒரு நிறம் மட்டும் தான் பிடிக்கும். ஆனால், இந்தியா பலதரப்பட்ட மக்களின் பல்வேறு சித்தாந்தங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாடு என்பதே உண்மை.

    உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை. வேலை கொடுக்க வேண்டும் என்றால், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆனால் உயர்சாதியினருக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க விரும்பும் பாஜக அரசு, வேண்டுமென்றே வினாத்தாள்களை கசியவிடுகிறது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு எப்படி வளர்ந்த நாடாக மாற முடியும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிக்கு அதிக பணம் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். நன்கொடைகள் என்பது தானாக முன்வந்து அல்லது மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் அழுத்தம் கொடுத்து பணத்தை பெறுவது என்பது வழிப்பறியாகவே கருதப்படும். தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக செய்தது வழிப்பறி தான்.

    பாஜகவுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை, வேறு யாருக்காவது கொடுத்தால் அது கருப்பு பணம் என்று மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்" என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

    • மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன

    மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தொடர்ந்து நாட்டிற்கு எதிரான எதிர்மறையான எண்ணங்களை மக்களிடம் பரப்பி தவறாக வழிநடத்தி வருவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "இந்திய வாக்காளர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். தங்களை யார் சரியாக வழி நடத்துகிறார்கள்? தவறாக வழி நடத்துகிறார்கள்? என்று அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்" என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    • 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர்
    • நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்

    குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர் என்பதையும் பாஜக அரசு விளக்க வேண்டும்.

    நாட்டின் குடிமக்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழ்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் என்ன நடக்க போகிறது?

    பாஜகவின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.
    • பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது

    பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது. லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.

    இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மத்தியப்பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது யாத்திரையை தள்ளி வைத்து விட்டு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேஜஸ்வி யாதவின் ஜன் விஸ்வாஸ் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்ட வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "15 மணி நேரம் தொடர் மழை, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய லட்சக் கணக்கான மக்கள், குறுகிய நேரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் என அனைத்தையும் மீறி, உங்கள் அளப்பரிய அன்பினாலும், தளராத ஆதரவினாலும், அபரிமிதமான ஒத்துழைப்பினாலும் இந்த சாதனைப் பேரணி நிறைவு பெற்றது" என தெரிவித்துள்ளார்.

    ×