search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசி விஸ்வநாதர் கோவில்"

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில்.
    • மின்விளக்கு ஒளியில் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    இரவு 7 மணி அளவில் கோவில் உட்புற சுவற்றில் மின்விளக்கு ஒளியில் விநாயகர் சன்னதியின் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    இதன்மூலம் சிவபெருமான் காட்சி அளித்ததாக பக்தர்கள் பரவச மடைந்தனர். இதனைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினர்.

    மின்விளக்கு ஒளி தெரியும் இடத்திற்கும் சிவலிங்கம் ஒளி உருவான இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மின்விளக்கு எரிந்தவுடன் சிவலிங்கம் தென்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.

    • காசி விஸ்வநாதர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகளுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • செங்கோட்டை சுற்றுப்பகுதியில் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    தென்காசி:

    கார்த்திகை திருநாளையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு சிறப்பு பூஜைகளுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோன்று கீழப்பாவூர் மைதானத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    இதேபோல் பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சொக்கபனையை ஏற்றும் நிகழ்ச்சியை தொழிலதிபர் ஆர்.கே. காளிதாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர் தினசரி மார்க்கெட் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவிலில் நேற்று இரவு செக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதுபோன்று கடையநல்லூரில் உள்ள முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில், கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில், கருப்பசாமி கோவில், மேல கடையநல்லூர் கட காளீஸ்வரர் கோவில், அண்ணாமலைநாதர் கோவில், பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் ஆகிய கோவில் களில் சொக் கப்பனை கொளுத்தப் பட்டது.

    செங்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள சிவன்கோவில், பிள்ளையார் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சாலையில் அமைக்க பெற்ற சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கூடலூர் அன்னதான அறக்கட்டளை சார்பில் ஊர் தலைவர் குருசாமி பாண்டியன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அய்யப்பா சேவா சங்கம் சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் கலந்து கொண்டார். ஒன்றிய கவுன்சிலர் அருணாதேவி பாலசுப்பிரமணியன், நாச்சியார் அன்கோ, அரசு ஒப்பந்ததாரர் விஜயகுமார், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிவகிரி கூடாரப்பாறை ஸ்ரீபால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்பத்தினர் செய்து இருந்தனர். சிவகிரியில் கருப்பாயி நாச்சியார் அறக்கட்டளைக்கு பாத்தி யப்பட்ட வள்ளி, தெய்வானை ஆறுமுகம் நயினார் கோவில் முன்பாக சொக்கப்பனை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    முக்கூடல் ஸ்ரீமுத்துமாலை கோவில், நாராயணசாமி கோவில், சடையப்பபுரம் சக்தி விநாயகர் கோவில், சந்தன மாரியம்மன் கோவில் மற்றும் பல கோவில்களில் திருக்கார்த்தி கை சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

    சேரன்மகாதேவி கொளுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் 2 தீபம் ஏற்றப்பட்டது.

    ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு நேற்று இரவு கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து சொக்க பனை கொளுத்தப்பட்டது. உச்சியில் இருந்த மாவிளக்கை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் குருவன் கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேகமாக பனையில் ஏறி பின்பு சாகவாசமாக அமர்ந்து மாவிளக்கை எடுத்து கீழே எடுத்து வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர்.
    • பாழடைந்த கட்டிடங்களை இடித்து பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் வாகன நெரிசல்கள் குறைந்து விடும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜசேகர பாண்டியன் என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். மேலும் இக்கோவிலை சுற்றி அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளன.

    எனவே இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நான்கு ரத வீதிகளில் சாலை யிலேயே நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இப்பிரச்சினைக்கு தீர்வு காண இப்பகுதியில் பார்கிங் வசதி இல்லை. கோவிலுக்கு எதிராக உள்ள 2427 சதுர மீட்டர் கொண்ட நிலமானது தொடக்கத்தில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலமாக இருந்து பின்னர் ஆங்கிலே யர் ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறையால் கையகப்படுத்தப்பட்டு அதில் தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமை யியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. நீதிமன்றங்கள் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப் பட்டு விட்டது. இதனால் அந்த நிலம் வெற்றிடமாக உள்ளது.

    எனவே மேற்படி நிலத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றி அந்த நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் கோவிலை சுற்றி ஏற்படும் வாகன நெரிசல்கள் முற்றிலுமாக குறைந்து விடும்.

    அதே நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கும், இந்து அறநிலைய துறைக்கும் மனு கொடுத்திருந்தேன்.

    மனுவிற்கு அந்த இடத்தில் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அனுமதி அளித்து அரசின் நிதி ஒதுக் கீட்டிற்காக காத்திருப்பதாக பொதுப்பணித்துறையினர் பதில் அளித்துள்ளனர். குற்றாலத்திலோ, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவல கம் அருகில் கட்டப்படயி ருக்கும் மாவட்ட நீதிமன்றம் அருகிலோ நீதிபதிகள் குடியிருப்பு கட்டினால் உகந்ததாக இருக்கும். கோவில் முன்பு உள்ள அந்த நிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கார் பார்க்கிங் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 1000-வது கும்பாபிஷேக விழா இந்து அறநிலையத்துறை சார்பில் விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவில் அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா ராஜன், தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு 4-வது கால யாகசாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து, அனைத்து யாகசாலை சிறப்பு வேள்வியும் நிறைவு பெறுகிறது.

    காலை 7 மணிக்கு கலச புறப்பாடும், 7.30 மணிக்கு அனைத்து கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு திருக்குட நன்னீராட்டும் நடைபெறும். பின்னர் அனைத்து பரிவாரங்கள், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நன்னீராட்டும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
    • விடுமுறை தினம் என்பதால் பலரும் குடும்பமாக வந்திருந்தனர்.

    தென்காசி:

    தமிழ் புத்தாண்டு உலக தமிழர்களால் நேற்று கொண்டாடப்பட்டது. அதனைமுன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பொதுமக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். தென்காசி யில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் தென்காசி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று மாலையில் காசி விஸ்வநாதர் கோவிலின் முகப்பு பகுதி மற்றும் உள் பிரகாரங்களில் தமிழ் புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் பலரும் தங்களின் குடும்பமாக வந்திருந்தனர். மேலும் முக்கிய பஜார்கள் எங்கும் கூட்டம் அலைமோதியது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் தென்காசி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • மலர்களால் ஜொலித்த கோவிலில் நின்று பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மக பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    நேற்று தேவர் சமுதாயம் சார்பில் நடந்த 7-வது நாள் திருவிழாவில் காசி விஸ்வநாதர் கோவில் முகப்பு பகுதியில் இருந்து கோவிலின் உள்ளே இருக்கும் கொடிமரம் வரையிலும் வண்ண வண்ண மலர்களால் கோலமிட்டு இருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் மலர்களால் ஜொலித்த கோவிலில் நின்று தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திருவிழாவின் 9-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலையில் சுவாமி மற்றும் அம்பாள் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. மேலும் திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி தீர்த்த வாரி நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

    • மானாமதுரை அருகே முன்னோர் வழிபாடு நடைபெறும் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம்.
    • காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேபரமக்குடி சாலையில் உள்ள குறிச்சியில் வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் 10 ஆண்டு களுக்கு முன்பு காசியில் இருந்து பூஜித்து காசி விஸ்வநாதர், அன்னபூரணி, தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, அனுமன், நந்தி மற்றும் சீரடி சாய் பாபா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம். கோவிலில் உள்ள வில்வம், வன்னி, மாமர இலைகளை வைத்தும் பூஜை செய்யலாம்.

    இக்கோவிலை கட்ட ஏற்பாடு செய்த இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி ஆண்டுக்கு 5 முறை காசி சென்று தங்கி தாய், தந்தை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்.

    பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நம் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் காசியில் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்களோ அதுபோல தமது சொந்த ஊரில் அனைவரும் காசி விஸ்வநாதர் அருளால் முன்னோர்கள் ஆசியை பெற வேண்டும் என காசி விஸ்வநாதர் கோவிலை உருவாக்கி உள்ளார்.

    இங்கு தை, ஆடி, மாஹாளயம் (புரட்டாசி) ஆகிய அமாவாசை தினங்களில் காலை 7 மணி முதல் 11 மணிவரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இது தவிர பிரதோஷம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா 10 நாட்கள் மற் றும் குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, நவகிரக யாகங் களும் நடைபெறுகிறது.

    முன்னோர்கள் ஆசி கிடைக்க பக்தர்களுக்கு தர்ப்பண பொருட்கள் எள், அகத்தி கீரை, பூ ஆகியவைகளை கோவில் நிர்வாகிகள் இலவசமாக வழங்கி வரு கின்றனர். காசி செல்ல முடியாத பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட காசி விஸ்வநாதரை கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்யலாம்.

    • தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
    • காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள 5-வது குழு வாரணாசி சென்றது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 216 பேர் கொண்ட 5-வது குழு வாரணாசி சென்றது. வாரணாசி கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விஸ்வநாதரை தரிசித்த பின் அன்னை அன்னபூரணி ஆலய வளாகத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாரணாசியின் பல்வேறு பாரம்பரிய இடங்களுக்கும் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இந்த குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை, காவிரி சங்கமத்திற்கு இணையானது என காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    காசியில் கங்கை இருக்கிறது, விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர், சோயி அம்மன் இருக்கிறார்கள். கங்கையில், புனித நீராடவும், தரிசிக்கவும், தமிழ் நாட்டின் கிராமங்களில் உள்ளவர்கள் கூட ஒரு முறையாவது வரவேண்டும் என்று விரும்புவார்கள். தற்போது பக்தர்கள் கூடுதலாக வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் வருகையால் காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவும் அதிகரித்துள்ளது.

    விஸ்வநாதர் கோவில் முன்பு மிகக் குறுகலாக, சுமார் 1,000 பேர் வரைதான் ஏற்கெனவே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்தும் தென்மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பிரதமர் மோடி, கோவிலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதனால் தற்போது தினமும் இரண்டு லட்சம் பேர் வரை தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதமாக கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதோடு பிரசாதமும் கொடுக்கப்படுகிறது.

    விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலேயே உள்ள மணிகர்னிகா தீர்த்தத்தை கையில் எடுத்து வந்து நேரடியாக விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பாராயணங்களும், ஆன்மீக கச்சேரிகளும் நடைபெற வசதியாக தமிழக கோவில்களில் உள்ளதை போன்று விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் பிரமாண்டமான கலையரங்கு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை சுவாமி வீதி உலா நிகழ்ச்சியுடன் தொடங்கப்படுகிறது.
    • பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் பாதுகாப்பிற்கு அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவில் தெப்பத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியுடன் தொடங்கப்படுகிறது. மாலை அபிஷேகம் மற்றும் ஆராதனையும், 6 மணிக்கு மேல் அம்மையப்பர் தெப்பத்திற்கு எழுந்தருளல், 11 சுற்றுகள் தெப்பஉற்சவமும், இரவு 9.30மணிக்கு மேல் சுவாமி ரிஷப வாகன காட்சியில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. காசி விஸ்வநாதர் கோவில் தெப்பத் திருவிழாவிற்கு பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பிற்கு அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ×