search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் மனு
    X

    தென்காசியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் மனு

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர்.
    • பாழடைந்த கட்டிடங்களை இடித்து பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் வாகன நெரிசல்கள் குறைந்து விடும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜசேகர பாண்டியன் என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். மேலும் இக்கோவிலை சுற்றி அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளன.

    எனவே இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நான்கு ரத வீதிகளில் சாலை யிலேயே நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இப்பிரச்சினைக்கு தீர்வு காண இப்பகுதியில் பார்கிங் வசதி இல்லை. கோவிலுக்கு எதிராக உள்ள 2427 சதுர மீட்டர் கொண்ட நிலமானது தொடக்கத்தில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலமாக இருந்து பின்னர் ஆங்கிலே யர் ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறையால் கையகப்படுத்தப்பட்டு அதில் தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமை யியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. நீதிமன்றங்கள் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப் பட்டு விட்டது. இதனால் அந்த நிலம் வெற்றிடமாக உள்ளது.

    எனவே மேற்படி நிலத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றி அந்த நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் கோவிலை சுற்றி ஏற்படும் வாகன நெரிசல்கள் முற்றிலுமாக குறைந்து விடும்.

    அதே நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கும், இந்து அறநிலைய துறைக்கும் மனு கொடுத்திருந்தேன்.

    மனுவிற்கு அந்த இடத்தில் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அனுமதி அளித்து அரசின் நிதி ஒதுக் கீட்டிற்காக காத்திருப்பதாக பொதுப்பணித்துறையினர் பதில் அளித்துள்ளனர். குற்றாலத்திலோ, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவல கம் அருகில் கட்டப்படயி ருக்கும் மாவட்ட நீதிமன்றம் அருகிலோ நீதிபதிகள் குடியிருப்பு கட்டினால் உகந்ததாக இருக்கும். கோவில் முன்பு உள்ள அந்த நிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கார் பார்க்கிங் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×