search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடை"

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • நேஷனல் சமுதாய கல்லூரியில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதுக்காட்டாம்பூரில் அமைந்துள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் பயிற்சி சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. வட்டாட்சியர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் இக்கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஏழை-எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்றுவிக்கப்படும் பணி உதவியாளர், மாதிரி தையல் பயிற்சி போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும், பயிற்சி காலம் முடிந்து எவ்வாறு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

    ஒவ்வொரு பயிற்சிக்குரிய சீருடைகளை 60 மாணவர்களுக்கு வட்டாட்சி யர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரி ஆசிரியர்கள் சிவநேசன், மோனிஷா, பூவிழி, கனிமொழி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • அருள்பிரபின் நன்றி கூறினார்.

    இரணியல்:

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்நகரில் நடந்தது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசிசுபாசிங் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராஜா வரவேற்றார்.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். குமரி மாவட்டம் வருகை தரும் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது. அழகியமண்டபத்தில் வைத்து நாளை (28-ந்தேதி) நடைபெறும் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் வெள்ளை சீருடையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா, குளச்சல் சபீன், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அருள்பிரபின் நன்றி கூறினார்.

    • மதுரையில் மறுசுழற்சி செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தயாரான சீருடைகள் விநியோகம் செய்யப்பட்டது.
    • நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் ஆகியோர் சீருடைகளை வழங்கினர்.

    மதுரை

    மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சீருடைகள் தயாரிக்கப் பட்டு இந்திய ஆயில் நிறுவ னத்தின் மூலமாக சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழி யர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் சீரு டைகளாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந் நிகழ்வில் நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு சீருடை களை வழங்கினர்.

    • 38 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது
    • புகளூர் டிஎன்பிஎல் காகிதஆலை நிறுவனம் வழங்கியது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் சமுதாயப் பணிகளில் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஓனவாக்கல் மேடு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற சமுதாயத்தை சார்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் பள்ளியில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.ஓனவாக்கல் மேடு கிராமத்தைச் சேர்ந்த 38 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர்.இலவச கல்வி பெரும் குழந்தைகளுக்கு 2செட் பள்ளி சீருடைகள், காலனி, காலனி உறை மற்றும் பள்ளி கட்டணம் முழுவதும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வியும், இவர்களுக்கான பள்ளி கட்டணம் உட்பட அனைத்து செலவினங்களையும் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தின் மூலமாக பள்ளி நிர்வாகத்திற்கு செலுத்தும் .2007 -2008 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த இலவச கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை 11 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

    மேலும் இந்த கல்வியாண்டில் 38 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ 13 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி சேஷாயி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் காகித பிரிவில் 3 1/2 ஆண்டுகால கட்டணமில்லா தொழில்நுட்ப பட்டய படிப்பு பயில ஆண்டுதோறும் 5 மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ,விடுதி கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்தி காகித ஆலை நிறுவனம் கட்டணம் இல்லா கல்வி அளித்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎல் காகித ஆலை அழகு -1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் என்.புகளூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அழகு-2 ஐ சுற்றியுள்ள மொண்டிசெட்டிப்பட்டி, கே .பெரியபட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதல் முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசையின்படி வித்யா ,பிரவீன், ராமன் மற்றும் கௌசிக் ஆகிய நான்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 63 மாணவர்கள் கட்டணமில்லா தொழிற் பட்டயப்படிப்பு முடித்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் .இக்கல்வியாண்டில் 19 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவச தொழிற்கல்வி பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவனம் தனது சமுதாய நலப்பணித் திட்டத்தின் மூலம் இந்த கல்வியாண்டில் 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது .38 மாணவர்களுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குநர்( இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர்( மனிதவளம் )கலைச்செல்வன் மற்றும் முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு38பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளை வழங்கினார்கள்.

    • ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.
    • 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர்:

    தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், தெற்கு மாநகர அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க ஒப்புதல் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நியமனம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வது,

    வருகிற 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன், பாலசுப்பிரமணியம், சசி என்கிற ஞானசிகாமணி, சசிக்குமார், லிங்கேஸ்வரன், ரவிச்சந்திரன், முகமது ஜூனைத், வடக்கு மாநகர துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர், பாண்டித்துரை, வஞ்சிமுத்து, பார்த்திபன், தியாகு, தெற்கு மாநகர துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், அரவிந்த், திருநாவுக்கரசு, சையது அபுதாஹிர், அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் சீராகுளம் அருகில் வசித்து வரும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் என்.விஜயராகவன் வழங்கினார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சீராகுளம் அருகே மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மற்றும் தாய் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் கிருஷ்ணவேணி, ஸ்வேதா ஆகியோருக்கு புத்தகப்பை, எழுதுகோல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை சங்கத்தின் மாநில தலைவர் என்.விஜயராகவன் தலைமையில் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பழனிவேல் தினேஷ்குமார், ராஜீவ் காந்தி கார்த்திக் வாணி கோகிலா அபிராமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    அதேபோல் பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பொதுசெயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார்.

    கடலூர்:

    உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொது செயலாளர் ஜீவா வினோத்குமார் கலந்து கொண்டு சுமை தூக்குவோர் சங்கத் தலைவரிடம் சீருடைகளை வழங்கினார். இதில் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு தலைவர் அசோக் ராஜ், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் அழகு முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பாட்டிகளை மறுசுழற்சி செய்து இந்த சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • ஆண்டுக்கு 405 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

    இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் மற்றும் இண்டேன் எல்பிஜி சிலிண்டர் விநியோகப் பணியாளர்கள் உள்பட சுமார் 3 லட்சம் பேருக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த பிரத்யேக பசுமை சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை மறுசுழற்சி செய்து இந்த சீருடைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம் ஆண்டுக்கு 20 மில்லியன் அளவிலான சுமார் 405 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

    பிளாஸ்டிக் பாட்டில் அல்லாத பசுமையான எதிர்காலத்தை நோக்கி என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ்.எம்.வைத்யா சீருடையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த பசுமை சீருடை நமது பசுமை சுற்றுச் சூலுக்கான உறுதிப்பாட்டை ஒளிரச் செய்யும் என்றும், முன்கள எரிசக்தி வீரர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
    • வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், வார்டு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசுகையில் வார்டு பகுதிகளில் தெருவிளக்கு, சாக்கடை வசதி, சாலை சீரமைப்பு பணிகள் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர். வார்டு உறுப்பினர்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவதாக தலைவர் உறுதிகூறினார். முடிவில் ஊராட்சி செயலாளர் பரமேஸ்வரன் (பொறுப்பு) நன்றி கூறினார்.

    • அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
    • 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்

    அவினாசி :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அவினாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை தாங்கி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார். நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார், துளிர்கள் அமைப்பு ஸ்ரீகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இவர்களுக்கான புத்தாடைகள் எச்.பி., பங்க் உரிமையாளர் ராஜ் மற்றும் அவரது துணைவியார் கீதா ராஜ் வழங்கினர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி நன்றி கூறினார்.

    • 13 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணிந்தனர்.
    • மீதமுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள 148 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 24 பள்ளிகளில் அரசு வழங்கிய சீருடைகள் பயன்படுத்தப்படவில்லை.

    சென்னை:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4 சீருடைகள் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த சீருடைகள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    2021-22-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை 47.89 லட்சம். அவர்களில் 38.41 லட்சம் பேர் மதிய உணவு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    2021 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 4 மாவட்டங்களில் உள்ள 1,425 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 214 மாதிரி பள்ளிகளில் சீருடை பயன்பாடு குறித்த தணிக்கை ஆய்வு நடத்தப்பட்டது

    இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள 66 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 48 பள்ளிகளில் பள்ளிகளின் நிர்வாகங்கள் வெவ்வேறு வண்ணம் மற்றும் வடிவமைப்பு கொண்ட சீருடையை அமல்படுத்தி உள்ளதால் அரசு வழங்கிய இலவச சீருடை அணியவில்லை.

    13 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணிந்தனர். மீதமுள்ள நாட்களில் அவர்கள் பள்ளி நிர்ணயித்த சீருடையை அணிவது தெரியவந்துள்ளது.

    மீதமுள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள 148 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 24 பள்ளிகளில் அரசு வழங்கிய சீருடைகள் பயன்படுத்தப்படவில்லை. மேலும் 36 பள்ளிகளில் மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் முதல் மூன்று நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

    இரண்டு வெவ்வேறு சீருடைகளை அணிவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பள்ளிகளில் இருந்து குறிப்பிட்ட கோரிக்கைகள் பெறாமல் தேவையின்றி இலவச சீருடைகள் வழங்குவதாக தணிக்கை துறை குற்றம் கண்டறிந்து உள்ளது.

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தில் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு அவர்களது தேவையை அறிந்து கொள்ளாமல் சீருடை வழங்கியதில் 4 கோடியே 13 லட்சம் ரூபாய் அளவுக்கு தேவையற்ற செலவினம் ஏற்பட்டதாகவும், மேலும் சீருடை ஓரளவு மட்டுமே பயன்படுத்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளால் 2 கோடியே 25 லட்சம் அளவுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை கண்டறிந்துள்ளது .

    எனவே அரசு திட்ட வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யலாம், சீருடை கேட்டு கோரிக்கைகள் வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்கலாம். வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை இலவச சீருடை அணியும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள் எண்ணிக்கையை குறைக்கலாம் என தணிக்கை துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

    ×