

நாகப்பட்டினம்:
திருமருகல் சீராகுளம் அருகில் வசித்து வரும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் என்.விஜயராகவன் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சீராகுளம் அருகே மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மற்றும் தாய் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் கிருஷ்ணவேணி, ஸ்வேதா ஆகியோருக்கு புத்தகப்பை, எழுதுகோல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை சங்கத்தின் மாநில தலைவர் என்.விஜயராகவன் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பழனிவேல் தினேஷ்குமார், ராஜீவ் காந்தி கார்த்திக் வாணி கோகிலா அபிராமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதேபோல் பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.