search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள்
    X

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள்

    • 38 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது
    • புகளூர் டிஎன்பிஎல் காகிதஆலை நிறுவனம் வழங்கியது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் சமுதாயப் பணிகளில் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஓனவாக்கல் மேடு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற சமுதாயத்தை சார்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் பள்ளியில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.ஓனவாக்கல் மேடு கிராமத்தைச் சேர்ந்த 38 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வி பயின்று வருகின்றனர்.இலவச கல்வி பெரும் குழந்தைகளுக்கு 2செட் பள்ளி சீருடைகள், காலனி, காலனி உறை மற்றும் பள்ளி கட்டணம் முழுவதும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வியும், இவர்களுக்கான பள்ளி கட்டணம் உட்பட அனைத்து செலவினங்களையும் டிஎன்பிஎல் காகித நிறுவனத்தின் மூலமாக பள்ளி நிர்வாகத்திற்கு செலுத்தும் .2007 -2008 ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த இலவச கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை 11 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துள்ளனர்.

    மேலும் இந்த கல்வியாண்டில் 38 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ 13 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வித் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி சேஷாயி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் காகித பிரிவில் 3 1/2 ஆண்டுகால கட்டணமில்லா தொழில்நுட்ப பட்டய படிப்பு பயில ஆண்டுதோறும் 5 மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ,விடுதி கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்தி காகித ஆலை நிறுவனம் கட்டணம் இல்லா கல்வி அளித்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎல் காகித ஆலை அழகு -1 ஐ சுற்றி அமைந்துள்ள புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் என்.புகளூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அழகு-2 ஐ சுற்றியுள்ள மொண்டிசெட்டிப்பட்டி, கே .பெரியபட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முதல் முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசையின்படி வித்யா ,பிரவீன், ராமன் மற்றும் கௌசிக் ஆகிய நான்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 63 மாணவர்கள் கட்டணமில்லா தொழிற் பட்டயப்படிப்பு முடித்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் .இக்கல்வியாண்டில் 19 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவச தொழிற்கல்வி பயின்று வருகின்றனர்.இத் திட்டத்திற்காக டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவனம் தனது சமுதாய நலப்பணித் திட்டத்தின் மூலம் இந்த கல்வியாண்டில் 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது .38 மாணவர்களுக்கு இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குநர்( இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர்( மனிதவளம் )கலைச்செல்வன் மற்றும் முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு38பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகளை வழங்கினார்கள்.

    Next Story
    ×