என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியன் ஆயில் நிறுவனம்"
- போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
- வளைகுடா போரால் உலக அளவில் கியாஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தங்களது நாடு மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக இந்த போர் நீடித்து வருகிறது.
இந்த போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் போதிய அளவில் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் இருப்பு இருப்பதால் தற்போதைக்கு அதற்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறின. ஆனால் பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறிப்பாக செல்போனில் வாட்ஸ்-அப் எண்களில் அல்லது செயலிகளில் வணிகம் கியாஸ் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றை முன்பதிவு செய்தால் 25 நாட்களுக்கு பிறகு தான் சிலிண்டர்கள் கிடைக்கும் என்று குறுஞ்செய்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், ஓட்டல்கள் நடத்துவோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இயல்பு நிலை திரும்பும் வரை வணிக சிலிண்டர், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று கியாஸ் நிறுவனங்கள் கூறி உள்ளன.
இதனால் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் செயல்படாது என்று அதாவது ஓட்டல்கள் வேலைநிறுத்தம் தொடங்குவதாக பெங்களூரு மாநகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
வளைகுடா போரால் உலக அளவில் கியாஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை கண்காணித்து வருகிறோம். மாற்று எரிசக்திகளை உபயோகப்படுத்தி கொள்ளுமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
- தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
- நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. மேலும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது. பதற்றம் வேண்டாம். நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் மற்றும் LPG உடனடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் பாட்டிகளை மறுசுழற்சி செய்து இந்த சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- ஆண்டுக்கு 405 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த முன்களப் பணியாளர்கள் மற்றும் இண்டேன் எல்பிஜி சிலிண்டர் விநியோகப் பணியாளர்கள் உள்பட சுமார் 3 லட்சம் பேருக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த பிரத்யேக பசுமை சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை மறுசுழற்சி செய்து இந்த சீருடைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம் ஆண்டுக்கு 20 மில்லியன் அளவிலான சுமார் 405 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில் அல்லாத பசுமையான எதிர்காலத்தை நோக்கி என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எஸ்.எம்.வைத்யா சீருடையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த பசுமை சீருடை நமது பசுமை சுற்றுச் சூலுக்கான உறுதிப்பாட்டை ஒளிரச் செய்யும் என்றும், முன்கள எரிசக்தி வீரர்கள் அதனை நிறைவேற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.






