search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament elections"

    • பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.
    • மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.

    மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன்.

    உங்கள் சகோதரனாகிய நானும் எனது அமைச்சர்கள் குழுவும் இந்த காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

    தெலுங்கானா தங்க தெலுங்கானாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன் என உறுதி அளித்துள்ளார்.

    பெண் வாக்காளர்களை குறிவைத்து காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    • அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.
    • இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருதப்பட்டார்.

    ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உத்தரபிரதே சத்தில் குறைய தொடங்கியது.

    காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதோடு உத்தரபிரதேசம் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.

    சோனியா காந்தியால் மட்டும் தனது ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிந்தது. இந்த நிலையில் பிரியங்கா மீண்டும் உத்தர பிரதேசம் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்த முறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாகிவிட்டார். இத னால் பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் விரும்புகிறது.

    இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்ட ராகுல்காந்தி, அங்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரசுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்த முறையை போல் அவர் போட்டியிடும் 2 தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்பு உள்ளது.

    உத்தரபிரதேசத்தின் 80 பாராளுமன்ற தொகுதி களில் 17 தொகுதிகளை பெற்று சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

    • கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள்.
    • தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் பாராளுமன்ற தேர்தலில் ஏற்படும்.

    கோவை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் நடந்தது. பாப்பநாயக்கன் பாளையம் திங்களூர் மாரியம்மன் கோவில் அருகே அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் பெண்கள் வரவேற்பு அளித்தனர். நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் எல்.முருகன், ராஜீவ்சந்திரசேகர், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோரும் பங்கேற்றனர்.

    நடைபயணம் வி.கே.கே. மேனன் சாலையில் நிறைவடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார். அவர் கூறியதாவது:-

    கோவை மக்கள் அரசியலை எப்போதும் குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்க மாட்டார்கள். கோவை குண்டு வெடிப்பை அவர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்த பகுதி மக்கள் அரசியல் சூழ்நிலையை பார்த்து கட்சியை ஆதரிப்பார்கள். கோவையின் சிறு, குறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுத்து இருப்பது பா.ஜனதா அரசு தான். 10 ஆண்டாக எந்த பிரச்சினையும் இங்கு இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல் தாமரை கோவையில் இருந்து இருக்கும் என்று நம்புகிறோம்.


    என்னை லேகியம் விற்பவர் என அ.தி.மு.க.வினர் விமர்சித்துள்ளனர். வருகிற 27-ந் தேதி பல்லடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில தமிழகத்தில் நிலவி வரும் குடும்ப ஆட்சி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அந்த லேகியம் அமையும். பல்லடம் பொதுக்கூட்டத்தில் எதிர்கால இந்தியாவிற்கு பிரதமர் என்ன சொல்ல போகிறார் என்பதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கேட்க வேண்டும்.

    தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மாற்றம் பாராளுமன்ற தேர்தலில் ஏற்படும். தமிழகம், புதுச்சேரியில் பா.ஜ.க. 40-க்கு 40 வெற்றி பெறும். 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை கொண்டு வர வேண்டும். பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவது தான் ஒரே நோக்கம்.

    பா.ஜனதா கட்சி எங்கு இருக்கிறது என்று கருணாநிதி கேட்டார். ஆனால் தற்போது சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார். இது பா.ஜனதா காலம்.

    தமிழக பட்ஜெட்டே ஒரு ஏமாற்றம். மது விற்பனை மூலம் எவ்வளவு வருவாய் என்பது தெரியாமல் இருந்தது. ரூ.50 ஆயிரம் கோடி என்பது இந்த பட்ஜெட் மூலம் தெரியவந்தது. இதுபோன்று எந்த மாநிலத்திலும் இல்லை. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகள் தி.மு.க. உள்ளே வராது. இதுதான் கடைசி முறை.


    தமிழகத்தில பா.ஜ.க. 20 சதவீத வாக்கு சதவீதத்தை தாண்டி பல ஆண்டுகள் கடந்து விட்டது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 33 சதவீத வாக்குகள் பெறும்.

    தமிழக அரசு ரூ.9½ லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறது. ஆனால் ரூ.8½ அரை லட்சம் கோடி கடன் என்று சொல்கிறது. ரூ.1 லட்சம் கோடி கடனை அரசு கணக்கில் காட்டவில்லை. இதுகுறித்து பா.ஜனதா சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். தி.மு.க. ஆட்சியில் 3 லட்சம் டன் உணவு உற்பத்தி குறைந்து இருக்கிறது. ஆனால் உணவு உற்பத்தி அதிகரித்ததாக வேளாண் பட்ஜெட்டில் கூறி இருக்கிறார்கள்.

    கரும்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. நாட்டிலேயே பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவு தான்.

    நதிகள் புனரமைப்பு உள்ளிட்ட தமிழக அரசு அறிவித்து வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து அமல்படுத்தி வரும் திட்டங்கள் தான். கோவை பாராளுமன்ற தொகுதி வெற்றியை மோடி எதிர்பார்த்து இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.

    இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.

    தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.

    இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.



    உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஒரு குடும்ப நலனுக்காக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
    • இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்க கூடாதோ அப்படியெல்லாம் தான் இருக்கிறது. ஊழல், குடும்ப ஆட்சியில் திளைத்து, ஒரு குடும்ப நலனுக்காக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழக அரசாங்கம் கடந்த 33 மாதங்களாக கதை, திரைக்கதை, வசனமாக நடக்கிறதே தவிர மக்களுக்கான அரசியலாக இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வெளிநாட்டு பயணம் சென்றும் ஒரு ரூபாய்கூட முதலீடு வரவில்லை.

    உத்தரபிரதேசம் ரூ.33 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில் தமிழகம் ரூ.6.60 லட்சம் கோடியை பெற்றுள்ளதாக கூறுகிறது. அதிலும் முதலீடு வந்து சேரவில்லை.


    நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்துள்ளார்கள். தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று கூறிவிட்டு நிதி நிலை அறிக்கையில் 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கொடுத்துள்ளதாக கூறி உள்ளார்கள்.

    இரண்டு திராவிட கட்சிகளும் ஊழலுக்கு இலக்கணமாக தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கின்றன.

    பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு பயந்து இரண்டு பங்காளி கட்சிகளும் (தி.மு.க.-அ.தி.மு.க.) ரகசிய கூட்டணி வைத்து உள்ளன.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரசில் முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார் உள்ளனர்.

    பா.ஜனதாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.


    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே பா.ஜனதா தொடங்கிவிட்டது. தொகுதிதோறும் மக்கள் சந்திப்பு, நிர்வாகிகள் சந்திப்பை மத்திய மந்திரி எல்.முருகன் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பாஜனதா தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கட்சி நிர்வாகிளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

    இருப்பினும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியமாக உள்ளது. 4 பிராந்தியங்களிலும் அறிமுகமான வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றிக்கு வழி வகுக்கும். அத்தகைய வேட்பாளரை போட்டியிட செய்ய வேண்டும் என பா.ஜனதாவினர் வற்புறுத்தி வருகின்றனர்.

    இதனிடையே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை ஆகியோர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு உள்ளூர் பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிற மாநிலங்களைப்போல இல்லாமல், புதுச்சேரி ஒரு தொகுதிதான். அதையும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதா? என கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் வெளி மாநிலத்தினரை புதுவை மக்கள் ஆதரிப்பார்களா? என்ற தயக்கமும் பா.ஜனதாவுக்கு உள்ளது.


    இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி, பா.ஜனதா வேட்பாளருக்காக ஒரு பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    என்ஆர்.காங்கிரஸ் தலைவர் முதலமைச்சர் ரங்கசாமி தயவு இல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது சிரமமான காரியமாகும்.

    அதோடு அவர் பரிந்துரைக்கும் வேட்பாளர் என்றால் தேர்தல் பணியில் எந்தவித சுணக்கமும் இன்றி ரங்கசாமி தீவிர பிரசாரம் செய்வார்.

    இது பா.ஜனதாவின் வெற்றி மேலும் பிரகாசமாகும். ஏற்கனவே ராஜ்யசபா பதவியை பா.ஜனதாவுக்கு தர முதலமைச்சர் ரங்கசாமி முன்வந்தார். அப்போது 3 பேர் கொண்ட பட்டியலை பா.ஜனதா தலைமை அளித்து அதில் ஒருவரை எம்.பி.யாக தேர்வு செய்ய பரிந்துரைக்கும்படி கேட்டது. அதனடிப்படையில்தான் தற்போதைய பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.


    2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி.யை முதலமைச்சர் ரங்கசாமி விட்டுக் கொடுத்தார். அப்போதும் அவருக்கு நெருக்கமான கோகுல கிருஷ்ணனை அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. யாக்கினார்.

    இதேபோல தற்போதும் பாஜனதா வேட்பாளராக பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரின் பெயரை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளார். இது பா.ஜனதா தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைமை முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்றால், அவர் பா.ஜனதா வேட்பாளராககளம் இறங்குவார்.

    முதலமைச்சர் ரங்கசாமியின் முடிவால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    • தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன்.
    • திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணுர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புர, வயநாடு, சாகர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம், பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.

    அந்த தொகுதிகளை கைப்பற்றும் வகையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.


    இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியிருக்கிறார்.

    திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். கட்சியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது.
    • அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது.

    திருப்பூா்:

    சந்தா்ப்பவாத அரசியலின் அடையாளம் நிதிஷ்குமாா் என்று மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லடத்தில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தா்ப்பவாத அரசியலின் பேராபாயத்தை உற்று நோக்கி அதனைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

    பீகாா் மாநில முதல்வா் நிதீஷ்குமாா் கடந்த காலங்களில் கூட்டணி, அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதும், நிா்வாகிகளின் முடிவுக்கு ஏற்ப கூட்டணி நிலைபாடுகளை மாற்றிக் கொள்வதும் தவிா்க்க முடியாதது. ஆனால் நிதிஷ்குமாா் பச்சை சந்தா்ப்பவாதத்தின் அடையாளமாக அரசியலில் காணப்படுகிறாா்.


    18 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுடன் இருந்தவா் முதல்வா் பதவிக்கு ஆபத்து என்றவுடன், லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஏற்படுத்தி புதிய ஆட்சியை நடத்தப்போவதாக கூறினார்.

    இதன் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற களத்தை அமைத்தாா். கடந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. முதல்வா் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்வா் பதவியை ஏற்று புதிய பாதையை த்தொடங்கியுள்ளாா். இத்தகைய அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    திருச்சி மத்திய சிறைச்சாலையை வரும் பிப்ரவரி 10- ந்தேதி பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சி முற்றுகையிட உள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து சமூக வழக்குகள் தொடா்பாக வாடிவதங்கிக் கொண்டிருக்கும் 36 கைதிகள் உள்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 2024 பாராளுமன்ற தேர்தல்தான் கடைசி தேர்தலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவா் ராயல் ராஜா, மாநில செயலாளா்கள் ஷபி, ஜாபா் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.
    • விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

    முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை தொடர்ந்து, திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீட்டு குழு தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது " மக்களவை தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. நிதிஷ் குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது. 20 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி முதல்வரிடம் தெரிவிப்பேன்" எனக் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, "தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் காங்கிரஸ் மேலிட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது. 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது. வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து பேசினோம். திமுக-விடம் நாங்கள் தொகுதி பட்டியல் எதுவும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

    • பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
    • பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

    தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.

    இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

    இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.

    அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

    அதனைத்தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

    பாட்னாவில் நடைபெற்ற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

    • பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சேர்ந்துள்ளார்.
    • ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்

    பீகாரில் லாலு பிரசாத் துடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் சேர்ந்துள்ளார்.

    இதையடுத்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

     இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறும்போது, "மகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி விடுவார் என்பது எங்களுக்கு முன் கூட்டியே தெரியும். தேஜஸ்வி யாதவ் இதனை எங்களிடம் கூறினார்" என்றார்.

    • பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை.
    • பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

    தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.


    இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

    இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.


    அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

    இந்நிலையில் மீண்டும் இன்று ஆளுநரை சந்தித்து நிதிஷ்குமார் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

    இன்று மாலை நிதிஷ்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர்.

    ×