என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது- சசிதரூர்
- தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன்.
- திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. கேரள மாநிலத்தில் ஆலப்புழா, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, திருவனந்தபுரம், பொன்னானி, எர்ணாகுளம், வடகரை, கண்ணுர், மாவேலிக்கரை, கோழிக்கோடு, கொல்லம், மலப்புர, வயநாடு, சாகர்கோடு, ஆலந்தூர், திருச்சூர், கோட்டயம், பாலக்காடு ஆகிய 20 மக்களவை தொகுதிகள் உள்ளன.
அந்த தொகுதிகளை கைப்பற்றும் வகையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.
இந்நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியிருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். கட்சியின் முடிவுக்காக காத்திருக்கிறேன். திருவனந்தபுரத்தில் எனது வேட்புமனுவை கட்சி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்