search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடீஸ்வரி"

    • பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.
    • மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.

    மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன்.

    உங்கள் சகோதரனாகிய நானும் எனது அமைச்சர்கள் குழுவும் இந்த காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

    தெலுங்கானா தங்க தெலுங்கானாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன் என உறுதி அளித்துள்ளார்.

    பெண் வாக்காளர்களை குறிவைத்து காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    பெயர் குழப்பம் காரணமாக 3400 ரூபாய்க்கு பதில் சுமார் 7.5 கோடி ரூபாயை பெண் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு பின்னர், திரும்ப எடுத்து கொண்டதால் சில நிமிட கோடீஸ்வரி என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    அமெரிக்காவின் பாஸ்டன் மாகாணத்தை சேர்ந்த எல்லென் பிளம்மிங் என்ற பெண் தனியார் நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளார். வெறும் 3400 ரூபாய் இருந்த தனது கணக்கை சமீபத்தில் எல்லன் பரிசோதிக்கும் போது ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

    3400 ரூபாய்க்கு பதிலாக சுமார் 7.5 கோடி ரூபாய் அவரது கணக்கில் இருந்துள்ளது. உடனே, தனது வேலையை விட முடிவு செய்த எல்லென், தனது குழந்தைகளின் கல்வி கடனை அடைத்து விடலாம் என கனவுலகில் வாழத் தொடங்கியுள்ளார். எனினும், சந்தேகம் ஏற்பட்டு நிதி நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்ட போது கனவு கலைந்து சோகம் வந்து குடியேறியது.

    புளோரிடாவில் எல்லென் பெயரில் வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு செல்ல வேண்டிய தொகையை தவறுதலாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்த நிறுவனம், 7.5 கோடியையும் திரும்ப பெற்றுக்கொண்டது. சோகத்தில் இருந்தாலும், இறந்த பின்னர் சில நிமிட கோடீஸ்வரி என என்னை யாரேனும் குறிப்பிடுவார்கள் என எல்லென் கூறியுள்ளார். 

    ×