என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • கடனுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் நேரடி அல்லது மறைமுக உரிமையாளர்கள் அனைவரும் நூறு சதவீதம் அமெரிக்கக் குடிமக்களாக இருக்கவேண்டும்
    • நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் இனி அரசு உதவிபெறும் வணிகக் கடன்களைப் பெற முடியாது.

    அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Green Card holders) வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு வணிகக் கடனுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் நேரடி அல்லது மறைமுக உரிமையாளர்கள் அனைவரும் நூறு சதவீதம் அமெரிக்கக் குடிமக்களாகவோ அல்லது அமெரிக்கத் தேசியவாதிகளாகவோ இருக்க வேண்டும்.

    நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் இனி அரசு உதவிபெறும் வணிகக் கடன்களைப் பெற முடியாது. இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தில் 5% வரை வெளிநாட்டினர் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் பங்கு வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட விதிவிலக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் தரவுகளின்படி, 2024 நிதியாண்டில் கிரீன் கார்டு (Green Card) பெற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில், இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. ஜூன் 2025-ல் அமெரிக்க வர்த்தக சபையின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 40% சிறுதொழில் உரிமையாளர்கள்  வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.
    • நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தை முன்னெடுக்க ஈரான் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

    ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி நகரத்தொடங்கின. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கி சென்றுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், மத்தியஸ்தரராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.

    இதனால் துருக்கியில் அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தி திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை அணுசக்தி திட்டம் விகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டால், தடைகளை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா, எகிப்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இணைய தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த பேச்சுவார்த்தை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறுவத்துறை அமைச்சருமான இஷாக் தார் பாகிஸ்தான் பிரதிநிதியாக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    • ஈரானில் பொருளாதார நெருக்கடியால் போராட்டம் வெடித்தது.
    • போராட்டக்காரர்களை ஒடுக்கும் ஈரான் நடவடிக்கைக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி நகரத்தொடங்கின. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதற்கிடையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் துருக்கி சென்றுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், மத்தியஸ்தரராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.

    ஆனால், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால் பதற்ற நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
    • கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    திருப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

    அந்தவகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீதம் கூடுதல் வரியை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி அமல்படுத்தினார். அதன் பின்னர், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், அந்த அதிருப்தி காரணமாக மேலும் 25 சதவீதம் அபராதம் விதித்து 50 சதவீதமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உயர்த்தினார்.

    இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூரில் ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.

    திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் கோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஆடைகள் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக ரூ.15 ஆயிரம் கோடி ஆடை வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    எனவே வரி விவகாரத்தில் சுமூக தீர்வு காண வேண்டும், அமெரிக்க வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்ட சில சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் திருப்பூர் ஆடை வர்த்தகம் அமெரிக்காவை நம்பியே இருப்பதால் வரியை குறைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் திருப்பூர் ஆடை வர்த்தகம் முற்றிலும் முடங்கும். எனவே மத்திய அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர்(ஏ.இ.பி.சி.) சக்திவேல் கூறுகையில்,

    அமெரிக்காவின் வரி குறைப்பு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். கடந்த 6 மாதங்களாக ஏற்றுமதியாளர்கள் கவலையில் இருந்தனர். இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாரத பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு எங்களது சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.15000 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த வரிக்குறைப்பின் காரணமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இந்த வருடமே மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,

    இந்த வரிகுறைப்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான். குறிப்பாக பெனால்டி வரியை முற்றிலுமாக குறைத்து. அடிப்படை வரியிலும் 7 சதவீதம் குறைத்து 18 சதவீதமாக குறைத்து இருப்பது நமது போட்டி நாடுகளான வங்காளதேசம், வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை விட குறைவான வரி விதித்து இருப்பதால்ஆயத்த ஆடை தொழிலுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இந்த வரி குறைப்பு காரணமாக ஆய்த்த ஆடை ஏற்றுமதி 2030 ஆம் ஆண்டுக்குள் 2 மடங்காக அதிகரிக்கும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் கூறுகையில்,

    அமெரிக்காவின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இதனால் திருப்பூர் பின்னலாடைத்தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.

    திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி:-

    இந்திய-ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த சமயத்தில், அமெரிக்காவும் இந்தியாவுடன் வரிச்சலுகை ஒப்பந்தம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கனவு இன்று நினைவாகிவிட்டது. திருப்பூர் இனிமேல் மின்னல் வேகத்தில் முன்னேறும் காலம் உறுதியாகிவிட்டது. இதற்கு ஒத்துழைத்து உதவிய மத்திய அரசுக்கும், அமெரிக்காவுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.பாலச்சந்தர்:-

    திருப்பூர் பின்னலாடைத்தொழிலுக்கு நல்ல செய்தியை மத்திய அரசு வழங்கியுள்ளது. நிச்சயம் இது தொழில் துறையினருக்கு புத்துணர்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போதுள்ள தொழில் நிலையில் இருந்து பல மடங்கு வளர்ச்சியை நாம் காணப்போகிறோம். ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

    திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்புசாமி:-

    கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் சற்று நலிவடைந்து காணப்பட்டது. தற்போது இந்த வரிக்குறைப்பு அறிவிப்பால் ஜாப் ஒர்க் தொழில் துறையினர் நிச்சயம் மகிழ்ச்சி அடைவர். ஏற்றுமதியும், உள்நாட்டு தொழிலும் நல்ல வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. இனி வேலைவாய்ப்புகள் அதிக அளவில் பெருகும் என்று நம்புகிறோம். இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கம்:-

    திருப்பூர் தொழில் துறையினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக விடிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது தற்போது நினைவாகியுள்ளது. அதேபோல் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் வரிவிதிப்பில் சற்று இறங்கி வந்துள்ளது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் நல்ல வளர்ச்சி பெறக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றார்.

    அதே நேரம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரி தொடருமா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த வரியை குறைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா உள்ளது.
    • சீனா குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.

    சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தனகத்தில் விலை புதிய உச்சத்தை தொட்டு விலையேறி வருகிறது.

    இந்நிலையில், சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் 'யுவான்'-ஐ (Yuan) உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப் போவதாக அதிபர் ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.

    சீனா கடந்த ஆண்டு, அதன் 6.2 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உள்ளூர் நாணயத்தில் மேற்கொண்டது.

    சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தத்துவார்த்த இதழான கியுஷியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், "சீனாவின் நிதித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், 'யுவான்' நாணயத்தை சர்வதேச வர்த்தகம், முதலீடுகளில் ஒரு முக்கிய நாணயமாக நிலைநிறுத்த வேண்டும்" என்று ஜி ஜின்பிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசத்தைத் தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் ஈரானிய தேசம் தகுந்த பதிலடி (பலமான அடி) கொடுக்கும்.
    • ஈரான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ராணுவங்களை 'பயங்கரவாதக் குழுக்கள்' என்று அறிவித்துள்ளது

    இருநாடுகளுக்கிடையே நிலவிவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால் பிராந்தியப் போர் ஏற்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    "அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால் , இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," என்று அயதுல்லா கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  மேலும், "நாங்கள் தூண்டுபவர்கள் அல்ல, எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஈரான் தேசத்தைத் தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் ஈரானிய தேசம் தகுந்த பதிலடி (பலமான அடி) கொடுக்கும். சமீபத்திய கிளர்ச்சி ஒரு இராணுவப் புரட்சியைப் போன்றது. நிச்சயமாக, அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டது." என தெரிவித்துள்ளார். 

    அமெரிக்கா தனது கடற்படையை ஈரான் அருகே அனுப்பியுள்ள நிலையில் கமெனி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஒருபுறம் போர் பதற்றம் நிலவினாலும், மோதலைத் தவிர்க்க இரு நாடுகளும் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் "சீரியஸாகப் பேசி வருகிறது" என்று டிரம்ப் கூறியுள்ளார். ரகசிய பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இதற்கான கட்டமைப்பு தயார் செய்யப்பட்டு வருவதாகவும் ஈரானின் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.

    இதனிடையே ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை ஐரோப்பிய ஒன்றியம் 'பயங்கரவாத அமைப்பு' என அறிவித்ததற்குப் போட்டியாக, ஈரான் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ராணுவங்களை 'பயங்கரவாதக் குழுக்கள்' என்று அறிவித்துள்ளது.

    • இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர்.
    • ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் இன்று 8 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.

    இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

    வெடிப்பில் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த கடைகள் மற்றும் பல வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

    ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அதை ஈரான் அரசு ஊடகம் மறுத்துள்ளது.

    எரிவாயு கசிவால் இந்த விபத்து நடந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது? இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது விபத்தா? என்பது குறித்து ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் கடற்படை ஈரானை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பொருளாதார மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பல்களை நகர்த்தி வருகிறது.
    • ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    டாலருக்கு நிகரான ஈரானின் பண மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். போராடியவர்களை ஒடுக்க ஈரான் அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்புடையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். அத்துடன் போர்க்கப்பல்களை ஈரான் நோக்கி நகர்த்த உத்தரவிட்டார். அமெரிக்க போர்க்கப்பல்களும் முன்னோக்கி வருகின்றன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    ஈரான்- அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக துருக்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்தான்புல் சென்றுள்ளார்.

    துருக்கி சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, "பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறோம். அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு முதலில் பேச்சுவார்த்தைகளின் வடிவம், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் தலைப்பு ஆகிய அனைத்தையும் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

    ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதுபோன்று போருக்கும் தயாராக உள்ளது" என்றார்.

    • மிகவும் விலையுயர்ந்தது ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 'ஸ்டெர்லிங் சில்வர்' ரெயில் சிலை ஆகும்.
    • ஜில் பைடனுக்கு, சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த காஷ்மீர் பஷ்மினா சால்வையை மோடி பரிசளித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் குறித்த விவரங்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    பிரதமர் மோடி, முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு வழங்கிய பரிசுகளில் மிகவும் விலையுயர்ந்தது ரூ.6.5 லட்சம் மதிப்பிலான 'ஸ்டெர்லிங் சில்வர்' ரெயில் சிலை ஆகும். இது 2024 ஜூலை மாதம் வழங்கப்பட்டது.

    அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு, சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த காஷ்மீர் பஷ்மினா சால்வையை மோடி பரிசளித்துள்ளார்.

    2023-ல் ஜோ பைடனுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் ஒரு பிரத்யேகமான சந்தனக் மரப் பெட்டி, கைவேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி விநாயகர் சிலை ஆகியவை அடங்கும்.

    முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கு, ரூ.1.11 லட்சம் மதிப்பிலான 'கிருஷ்ண ராசலீலா வெள்ளிப் பெட்டி' வழங்கப்பட்டுள்ளது. அவரது கணவர் டக்ளஸ் எம்ஹாப்பிற்கு ரூ.49,000 மதிப்பிலான உடையில் அணியும் கஃப்லிங்க்ஸ் வழங்கப்பட்டது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கு காஷ்மீர் பஷ்மினா சால்வை வழங்கியுள்ளார்.

    அதேபோல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நடராஜர் வெண்கலச் சிலையை வழங்கியுள்ளார்.

    அமெரிக்கச் சட்டப்படி, அந்நாட்டு அதிகாரிகள் பெறும் பரிசுகளின் மதிப்பு 480 டாலருக்கு மேல் இருந்தால் அதன் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

    அதன்படி, மோடி வழங்கிய இந்தப் பரிசுகள் அனைத்தும் தற்போது அமெரிக்கத் தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

    • இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 27-ம் தேதி கையெழுத்தானது.
    • வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வாஷிங்டன்:

    இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த 27-ம் தேதி டெல்லியில் கையெழுத்தானது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யவேண்டும். ஆனால் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.

    உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா தடைகளை விதித்தது. ஆனால் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க தொடங்கியது.

    இந்தியாவால் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஐரோப்பியர்கள் வாங்குகிறார்கள். எனவே ஐரோப்பியர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு மறைமுகமாக நிதியளித்து வருகின்றனர். இது நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஒன்று.

    ஏனென்றால் உக்ரைன்-ரஷியா போரின் முன் வரிசையில் ஐரோப்பியர்கள் உள்ளனர். ஐரோப்பிய தலைவர்கள் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உக்ரைன் போரில் தங்கள் சொந்த நிலைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இந்த நடவடிக்கையில் எங்களுடன் ஐரோப்பியர்கள் இணைய விரும்பவில்லை. இதற்கு அவர்கள் இந்த வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்ய விரும்பியதுதான் காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் ஒரு ஐரோப்பியர் உக்ரைனிய மக்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் உக்ரைன் மக்களை விட வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளித்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை விட வர்த்தகத்திற்கு ஐரோப்பியா முக்கியத்துவம் அளித்துவிட்டது என தெரிவித்தார்.

    • ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
    • ஐரோப்பிய யூனியன் உலகமயமாக்கலை மீண்டும் இரட்டிப்பாக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகியுள்ள புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

    அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அளித்த பேட்டியில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மிகப்பெரிய அளவில் பலனடையும் என்றும், ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த ஒப்பந்தம் இந்தியத் தொழிலாளர்களின் குடியேற்ற உரிமைகளை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருவதால், மற்ற நாடுகள் மாற்று சந்தைகளைத் தேடிச் செல்வதாகவும், அதன் விளைவாகவே ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் கிரீர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா உலகமயமாக்கலின் சிக்கல்களைச் சரிசெய்ய முயலும் போது, ஐரோப்பிய யூனியன் உலகமயமாக்கலை மீண்டும் இரட்டிப்பாக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறியிலேயே நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது.
    • "ஆபிரகாம் லிங்கன்" என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தலைமையில் நகர்கிறது.

    ஈரான் அரசு அணுசக்தி விவகாரத்தில் புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதள பதிவில், "வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது. 

    நேரம் கடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுதங்களைத் தவிர்த்து, அனைவருக்கும் நன்மை பயக்கும் நியாயமான ஒப்பந்தத்திற்கு ஈரான் வர வேண்டும். இல்லையெனில் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    வெனிசுலாவில் இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டு அதிபர் மதுரோவை கைது செய்ய அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈடுபட்டதை விட பெரிய அளவிலான அமெரிக்க கடற்படை பிரிவான அர்மடா,  தற்போது ஈரான் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    "ஆபிரகாம் லிங்கன்" என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தலைமையிலான இந்தக் கடற்படை, மிகுந்த வலிமையுடனும் வேகத்துடனும் ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும், கடந்த மாதம் ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்கா நடத்திய 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' (O மூலம் ஏற்பட்ட அழிவையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

    ×