என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்கா"
- 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது.
- இந்த நாடுகடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம்.
2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி முதல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த ஆண்டு திரும்பிய 3,258 பேரில், 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்களில் வந்தனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நாடு கடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மாநில அரசுகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் NIA இதுவரை 27 மனித கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து 169 பேரைக் கைது செய்துள்ளது என்றும் 132 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
- வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது.
கராகஸ்:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து கடந்த செப்டம்பா் முதல் வெனிசுலா அருகே கரீபியன் பகுதியில் அமெரிக்கா கடற்படையை பெரும் அளவில் குவித்து வருகிறது. இதனால் வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் மதுரோவும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்து உள்ளார்.
தலைநகர் கராகசில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரோ தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இறையாண்மை, சமத்துவம், சுதந்திரம் கொண்ட அமைதியை விரும்புகிறோம். அடிமையின் அமைதியையோ, காலனித்துவ அமைதியையோ நாங்கள் விரும்பவில்லை. வெனிசுலா ஒருபோதும் வெளிநாட்டு அழுத்தம் அல்லது ஆதிக்கத்திற்கு அடிபணியாது. எனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மோதலுக்குத் தயாராகும்போது வெனிசுலா வெளிப்புற கட்டளைகளுக்கு அடிபணியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
- துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஸ்டாக்டனில் உள்ள விருந்து மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது அங்கு துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்
- கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அமெரிக்காவில் போதைப்பொருள் அதிகளவு புழங்குவதற்கு வெனிசுலா தான் காரணம் என்று டிரம்ப் குற்றச்சாட்டி வரும் நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்தது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்தன.
இந்நிலையில், வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வான்வெளி மற்றும் அதை சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கவனத்தில் கொள்ளவும்" என்று சரிகை விடுத்துள்ளார்.
டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு 'காலனித்துவ அச்சுறுத்தல்' என்று தெரிவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது.
- அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தில் ஆப்கானிஸ்தான் இளைஞர் நேற்று முன் தினம் நடத்திய துபாஷிச்சூட்டில் 2 காவல்படை வீரர்கள் படுகாயமடைந்தனர். அதில் இரு பெண் வீராங்கனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய மிருகம் பெரிய விலையை கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
மேலும் ஆப்கானிஸ்தான் குடிமக்களின் விசா பரிசீலனையை அமெரிக்கா உடனடியாக நிறுத்தியது.
தாக்குதல் நடத்திய இளைஞர் கடந்த ஜோ பைடன் ஆட்சியில் 2021 இல் சரியான பரிசோதனை இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்தவர் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு மூன்றாம் உலக நாடுகளில் இருந்து இடம்பெயர்வை முழுமையாக தனது நிர்வாகம் நிறுத்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்கா மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்ப அவகாசம் கிடைக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் சமூக வலைதள பதிவில், முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் மில்லியன் கணக்கானோரை அமெரிக்காவுக்குள் அனுமதித்ததை தான் ரிவர்ஸ் செய்ய போவதாக தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு பயன்படாதோரும், அமெரிக்காவை நேசிக்க முடியாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என சூளுரைத்துள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்கர் அல்லாதோருக்கு கிடைத்து வரும் அரசு சலுகைகளையும் தான் நிறுத்தப்போவதாக டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.
அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள், தொழில்வளர்ச்சி பெற்ற ஜனநாயகங்கள் முதல் உலக நாடுகள், சோவியத் யூனியன்(ரஷியா), சீனாவை சார்ந்த நாடுகள் இரண்டாம் உலக நாடுகள், இந்த இரண்டு அணியிலும் இல்லாத, வளர்ந்து வரும் அல்லது பின்தங்கிய ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்டுகின்றன.
தற்போதைய மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில், ஆப்கானிஸ்தான், ஈரான், மியான்மர், காங்கோ, கியூபா, எரித்திரியா, ஹெய்டி, வெனிசுலா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட சில நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- சிகிச்சை பலனின்றி பெண் பாதுகாப்பு படைவீரர் சாரா பெக்ஸ்ட்ரோம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- மற்றொரு இளைஞன் ஆண்ட்ரூ வுல்ப் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று மர்ம நபர் ஒருவர் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனே சுதாரித்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். படுகாயமடைந்த வீரர்களை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி பெண் பாதுகாப்பு படைவீரர் சாரா பெக்ஸ்ட்ரோம் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்," மிகவும் மதிக்கப்படும் ஒரு அற்புதமான இளம் வீரரை நாடு இழந்துள்ளது. அவர் இப்போது நம்முடன் இல்லை. அவரை காப்பாற்ற முடியாத எங்களை இப்போது அவர் இழிவாக எண்ணிக்கொண்டிருப்பார். அவரது பெற்றோர்களுக்கு நாங்கள் ஆறுதலாக இருக்கிறோம். நடந்ததை சரி செய்யமுடியாது.
இது தற்செயலாக நடந்த ஒன்று. தாக்குதலில் பாதிக்கப்பட்ட 24 வயதே ஆன மற்றொரு இளைஞன் ஆண்ட்ரூ வுல்ப் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் உயர்பிழைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.
துப்பாக்கி சூடு நடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 29 வயதான ரகமானுல்லா லகன்வால் பற்றி சி.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா ராணுவம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த காலக் கட்டத்தில் சி.ஐ.ஏ.வின் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் ரகசிய போராட்டக்குழுவான ஜீரோ யூனிட்டில் ரகமானுல்லா லகன்வால் பணியாற்றினார்.
கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தனது ராணுவத்தை திரும்பப் பெற்றதையடுத்து, அப்போதைய அதிபர் ஜோபைடனின் அலைஸ் வெல்கம் திட்டத்தின் கீழ் ரகமானுல்லா அமெரிக்கா வில் குடியேறினார்.
இந்த குடியேற்றத்தை ஜோபைடன் அரசு பல வழிகளில் நியாயப்படுத்தியது.
பாதுகாப்பு படை வீரர்களை மிக அருகிலிருந்து சுட்டதால் நாம் இப்போது இளம் வீரரை இழந்துள்ளோம் என சி.ஐ.ஏ. இயக்குனர் ராட்கிளிப் தெரிவித்துள்ளார்.
- 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர்.
- அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.
மே 31, 1921 அன்று, அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் வசிக்கும் துல்சாவில், வெள்ளையர்களின் ஒரு கும்பல் 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைக் கொன்றது. இதுவே துல்சா படுகொலை என அழைக்கப்படுகிறது.
17 வயதுடைய வெள்ளையின லிப்ட் ஆபரேட்டர் சிறுமியை ஷூ பாலிஷ் தொழில் செய்த 19 வயது கறுப்பின இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பரவிய தகவலை அடுத்து கறுப்பினத்தவர்களின் வீடுகள் மட்டும் கதைகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வெள்ளியாயினத்தவர் இந்த படுகொலைகளை அரங்கேற்றினர்.
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் உள்ளூர் செய்தித்தாள் ஒன்று வெளியிட்ட பொய் செய்தியால் நிற வெறி தூண்டப்பட்டு இந்த படுகொலைகள் அரங்கேற்றப்பட்டதாக தெரியவந்தது.
சுமார் 2 நாட்கள் நீடித்த இந்த படுகொலைகளில் 300 பேர் கொல்லப்பட்டனர். 800 பேர் படுகாயமடைந்தனர். அவர்களின் வீடுகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக தீவைக்கப்ட்டு நாசமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகினர்.

இந்நிலையில் துல்சா படுகொலையில் உயிர்த்தியவர்களில் தற்போது மூத்தரவாக அறியப்படும் 111 வயதுடைய வயோலா பிளெட்சர் கடந்த திங்கட்கிழமை காலமானார்.
அமெரிக்க வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான துல்சா படுகொலையின் போது பிளெட்சர் ஒரு சிறுமியாக இருந்தார்.
படுகொலைக்குப் பிறகு வீடற்றவராக மாறிய பிளெட்சர் தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வெள்ளையர் குடும்பங்களுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார்.
சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், "கறுப்பின மக்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், அவர்களின் உடல்கள் தெருக்களில் கிடப்பதையும், அவர்களின் கடைகள் எரிக்கப்படுவதையும் இன்னும் என்னால் பார்க்க முடிகிறது," என்று விவரித்தார்.
- மருத்துவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என்று போலீசார் தகவல்.
- அமெரிக்கா செல்லும் கனவு தடைப்பட்ட நிலையில் மருத்துவர் உயிர்மாய்ப்பு.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற 38 வயது பெண் மருத்துவர், அமெரிக்க விசா மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பத்மாராவ் நகரில் ரோகிணி தனியாக வசித்து வந்தநிலையில், குடும்பத்தினர் அவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ரோகிணி வீட்டு பணிப்பெண்ணும் நீண்டநேரம் கதவை தட்டியுள்ளார். ரோகிணி கதவைத் திறக்காததால், அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இறந்தநிலையில் கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிர் மாய்ப்பு குறிப்பு ஒன்றையும் ரோகிணியின் அறையிலிருந்து எடுத்துள்ளனர். மருத்துவப் பணியில் கவனம் செலுத்தி வந்த ரோகிணி, அமெரிக்காவில் தனது எதிர்காலத்தை திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் விசா மறுக்கப்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
- துருக்கி ஏர்லைன்ஸ் இன்று முதல் நவம்பர் 28-ந்தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
- 6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இந்த நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
உலகின் சக்தி வாய்ந்த யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது. இது போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இதனால் வெனிசுலா பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது. அதன்படி சிறப்பு அவசரநிலையை அதிபர் நிகோலஸ் அறிவித்து உள்ளார். 'பிளான் இன்டிபென் டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் இன்று முதல் நவம்பர் 28-ந்தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
- ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார்.
- அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.
ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 38). இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவில் வசிக்கவும், மேற்படிப்பை தொடரவும், பயிற்சி பெறவும் ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார்.
அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ரோகிணியின் அமெரிக்காவில் பயிற்சி பெற வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மீண்டும் ஐதராபாத் திரும்பினார்.
நேற்று வீட்டின் அறையில் தனியாக இருந்த ரோகிணி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ரோகிணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
- 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.
வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் உள்ளது.
இந்தநிலையில் இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.823 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது.
ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்.ஜி.எம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 இலகு ரக ஏவுகணை ஏவும் அமைப்புகள், 216 பீரங்கிக் குண்டுகள் இந்திய ராணுவத்துக்கு விற்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் கூறியதாவது:-
ராணுவ உபகரணங்களுடன் பாதுகாப்பு சோதனைகள், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி, ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆயுத விற்பனை இந்தோ- பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்க ளில் அரசியல் ஸ்திரத் தன்மை, அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றத் திற்கு ஒரு முக்கிய சக்தியாகத் தொடர்ந்து இருக்கும் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியா பாதுகாப்பை மேம்படுத்தும்.
இந்த விற்பனை இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல் களைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தும். அதன் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல் களைத் தடுக்கும். இந்த ஆயுதங்களை இந்தியா தனது ஆயுதப் படைகளில் இணைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.
எப்.ஜி.எம். 148 ஜாவெலின் ஏவுகணைகள், டாங்கி போன்ற இலக்குகளை நீண்ட தூரத்தில் இருந்து அதிக துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவியத்திற்கான ஏலம் 20 நிமிடங்களில் முடிந்தது.
- ஓவியத்தில் குஸ்டாவ் கிளிம்ட் தனது முக்கிய வாடிக்கையாளரின் மகளை சித்திரித்திருந்தார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல ஓவிய கலைஞர் குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியத்தை அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த சோதேபிஸ் ஏல நிறுவனம் ஏலம் விட்டது.
இதை ஏலம் எடுக்க 6 பேர் போட்டிபோட்டனர். இதில் அந்த ஓவியம் 236.4 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி) ஏலம் போனது.
ஏலம் எடுத்தவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஏலம் 20 நிமிடங்களில் முடிந்தது. ஏல வரலாற்றில் 2-வது அதிகபட்ச விலைக்கு விற்பனையான ஓவியம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓவியம் 1914-1916ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வரைந்ததாகும். இந்த ஓவியம் லிசபெத் லெடரர் என்ற பெண் வெள்ளை அங்கி அணிந்து நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டும் ஓவியமாகும்.
அந்த ஓவியத்தில் குஸ்டாவ் கிளிம்ட் தனது முக்கிய வாடிக்கையாளரின் மகளை சித்திரித்திருந்தார்.
இந்த ஓவியம் 2-ம் உலக போரின்போது நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த ஓவியம் 1948-ம் ஆண்டு மீட்கப்பட்டது.







