என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • இந்த செவிலியர் பணி தேர்வை நிறுத்த சென்னை கோர்ட்டுக்கு சென்றனர்.
    • இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 226 செவிலியர் அதிகாரிகள் மற்றும் சுகாதரத்துறையின் கீழ் அரசு பொது மருத்துவமனையில் 67 மருந்தாளுநர், இ.சி.ஜி. டெக்னீஷியன், சுகாதார உதவியாளர், தியேட்டர் உதவியாளர், ஏ.என்.எம் ஆகியோருக்கு பணியாணை வழங்கும் விழா நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணியாணை வழங்கி பேசியதாவது:-

    இந்த பணியாணை கொடுப்பதை பெரிய விழாவாக எடுக்கலாம். ஆனால் அதற்குள் யாரேனும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி வந்துவிடுவார்களோ என்ற பயம். இதனை எவ்வளவோ சிரமப்பட்டு செய்துள்ளேன். இந்த பணியாணை வழங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. துறையாக இருந்தால் கோப்பை சுத்த விடுவார்கள். பல்வேறு துறைகளுக்கு சென்று வரவேண்டும். சிரமங்கள் இருக்கும். இது சொசைட்டியாக இருந்தும் முறையாக நிரப்புவதற்கு 2 ஆண்டுகள் ஆனது.

    இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் செவிலியர் பணி தேர்வில் ஊழல் என்று சில அரசியல்வாதிகள் சொல்கின்றனர். செவிலியர் தேர்வு வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஆனால் எதையாவது பேச வேண்டும் என்று பேசுகின்றனர். எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் யாரும் குறை சொல்ல முடியாத அளவில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த செவிலியர் பணி தேர்வை நிறுத்த சென்னை கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால் முடியவில்லை. நீதிமன்றம் தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதன்பிறகு வேகமாக அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

    இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது. அப்போது பல சிரமங்கள் இருக்கும். இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கத்தான் வேகமாக பணி செய்து வருகிறேன். இன்னும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஓரிரு நாள்களில் 190 ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்க உள்ளோம். மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க இருக்கிறோம். இன்னும் 100 செவிலியர் விரைவில் எடுக்க உள்ளோம். அடுத்த 2 மாதத்தில் 400 மேல்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    புதுவை காங்கிரசார் கடந்த 21-ந் தேதி முதல் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசை கண்டித்து பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். இந்த யாத்திரையில் முன்னாள் முதல்-அமைச்சர்களான வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோர் புதுவை அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியுள்ளார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலர் முகமது யாசின், இயக்குநர் செவ்வேள், மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது.
    • பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை நகராட்சி சார்பில் லாஸ் பேட்டை சலவைத்துறை திறப்பு விழா நடைபெற்றது.

    அதில் புதிதாக கட்டப்பட்ட துணி பாதுகாப்பு அறைகளை திறந்து பயனாளிகளிடம் சாவிகளை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுச்சேரியில் முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ. 500 ஓய்வூதியம் பிப்ரவரி 7-ந்தேதி முதல் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட ரூ.2500 உதவித் தொகை வருகிற பிப்ரவரி 10-ந் தேதி முதல் கிடைக்கும். புதிதாக தொடக்கப்பள்ளிகளில் 190 ஆசிரியர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள்.

    இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர்கள் 400 பேர் அடுத்த மாதம் எடுக்கவுள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை தந்துள்ளது. அடுத்து 500 அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்த்த உள்ளோம். சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என சொன்னோம். அரசு மற்றும் தனியார் மூலம் வேலை தரப்பட்டுள்ளது.

    சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கர் நிலம் எடுத்து அப்படியே உள்ளது. புதிய தொழிற்பேட்டையை இங்கு உருவாக்க உள்ளோம். பல தொழிற்சாலைகள் வரவுள்ளன. ஏராளமான இளையோருக்கு வேலை கிடைக்கும். மீனவ சமூக மக்களுக்கு ரூ. 123 கோடி ஒதுக்கி பணிகள் செய்கிறோம்.

    மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார். நிறைய திட்டங்கள் தரவுள்ளார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அரசு மத்திய அரசு நிதி உதவியுடன் மேம்பாட்டு பணிகளைச் செய்து வருகிறது.

    புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ 450 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வ கணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும்.
    • மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    எங்கள் அரசு பொறுப்பேற்ற பின் பல உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுப்பணி, உள்ளாட்சி மூலம் பல பணிகள் செய்யப்பட்டுள்ளது. புதுவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது, நல்ல கல்வி, மருத்துவ வசதி, அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

    மக்கள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று, சட்டசபை வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியுள்ளது. எல்லா தொகுதியிலும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவை மாநிலம் ஒட்டு மொத்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

    4 பிராந்தியத்திலும் இன்னும் பல மக்கள் நல பணிகள் தொடங்கப்பட உள்ளது. நல்ல அரசாக செயல்பட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

    அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 500 ஆக வழங்குவதாக அரசு அறிவித்தது. மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000-ம் முதலில் வழங்கப்படும். உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும். மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உட்பட உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    இந்த தொகையும் விரைவில் உயர்த்தி வழங்கப்படும். புதுவையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கலுக்கு எந்தளவுக்கு பரிசு தொகை தரமுடியுமோ அவை வழங்கப்படும். போலி மருந்து விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையாக அறிக்கை வெளியிடப்படும் என்றார். 

    • அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது.
    • ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

    இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங்கல் திட்டம் இனி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.

    முன்னதாக புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது.
    • காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.

    பிரதமர், முதல்-அமைச்சர் படம் மட்டும் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் பையில் இருந்தால் போதும் என கவர்னர் அறிவுறுத்தியதால், அவரின் படம் அச்சிடவில்லை என்றார்.

    அப்போது த.வெ.க. தலைவர் விஜய், ரேஷன் கடைகள் செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பொதுமக்களை விசாரித்தால் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை வழங்கப்படுவதை அறிந்து கொள்ளலாம். குறைகள் இருந்தால் சொல்லாம் என பதிலளித்தார்.

    புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது. காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.

    இந்த ரேஷன் கார்டுகளுக்கு இலவச கோதுமை விநியோகம் செய்ய மாதந்தோறும் புதுச்சேரி பிராந்தியத்துக்கு 521, காரைக்காலுக்கு 120, மாகிக்கு 16, ஏனாமுக்கு 31 என 688 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இலவச கோதுமை திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக மாதம் ரூ.3.25 கோடி செலவாகும் என்றார்.

    • விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    த.வெ.க. தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 12 நிமிடம் உரையாற்றிய அவருடைய பேச்சில் தெளிவுகள் இல்லை. புதுச்சேரி பற்றி புரிதல் விஜய்க்கு இல்லை.

    மத்திய அரசு நிதி உதவி, சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை வசதி, ரேஷன் கடை உள்ளிட்டு அனைத்துமே புதுச்சேரியில் உள்ளது. இதனாலேயே விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

    விஜய்யை கட்சி தொடங்க சொன்னதே புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தான். அப்படி இருக்கும் போது புதுச்சேரியில் விஜய் பொது கூட்டத்திற்கு ரங்கசாமி அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல என்றார்.

    • அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
    • நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணெய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு என ரூ.750 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். இந்த பரிசு தொகுப்பு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இந்த பரிசு தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் பாண்லே நெய், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது.

    புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    இந்த பரிசு தொகுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. கான்பெட் நிறுவனம் பரிசு தொகுப்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதில் நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    • முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது.

    அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் அதனை மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

    தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசுகளை எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த செலவிலேயே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

    இதற்கிடையே கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கோப்புக்கும் கவர்னர் கைலாஷ்நாதன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்காததே கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

    முதலமைச்சர் ரங்கசாமி அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமானது என்றாலும் இருவருக்கும் உள்ள மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    • வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
    • தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட நினைக்கும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இதனிடையே, பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள்(21-ந்தேதி) ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 21-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.

    தற்போது கான் பெட் நிறுவனம் சார்பில் பட்டாசு விற்பனை சிறப்பு அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட் டாசு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார்.

    மேலும் இதேபோன்று கூட்டுறவு துறையின் மார்க்கெட் சொசைட்டி சார்பில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பட்டாசு விற்பனை கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாண்லே நிறுவனத்திற்கு 2024-25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7,500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். அதாவது, மொத்த மதிப்பில் ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி கூடுதலாக செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் கட்சி தொடங்கிய போதும், மாநாடு நடத்திய போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
    • இப்போதும் அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒட்டலில் ரகசியமாக சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

    அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் கவர்னர் கைலாஷ்நாதன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் என பலரும் போன், எக்ஸ் வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதுபோல் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

    அதற்கு நன்றி தெரிவித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    வணக்கம்பா- நன்றி...வாழ்த்துகள்- நல்லாயிருக்கணும்- வளமாக இருக்கணும். நல்லா வரணும். நல்லா பண்ணுங்க வெற்றி பெறணும், நல்லா செய்துட்டு வாங்க என விஜய்க்கு பதில் வாழ்த்துகள் தெரிவித்தார்.

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கும் இடையே நட்பு உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்- அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்ற பிறகு பனையூரில் உள்ள விஜய் வீட்டில் அவரை நேரடியாக சந்தித்தார்.

    அதன் பிறகு விஜய் கட்சி தொடங்கிய போதும், மாநாடு நடத்திய போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    இப்போதும் அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒட்டலில் ரகசியமாக சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது.

    இதனால் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுடன் முதல்- அமைச்சர் ரங்கசாமி கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்,

    மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×