என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விடுமுறை"

    • சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டார். அதில் சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு விடுமுறை நாட்கள் வருமாறு:-


    எண் விடுமுறை நாட்கள் தேதி கிழமை
    1 ஆங்கில புத்தாண்டு 1.1.2026 வியாழன்
    2 பொங்கல் 15.1.2026 வியாழன்
    3 திருவள்ளுவர் தினம் 16.1.2026 வெள்ளி
    4 உழவர் திருநாள் 17.1.2026 சனி
    5 குடியரசு தினம் 26.1.2026 திங்கள்
    6 தைப்பூசம் 1.2.2026 ஞாயிறு
    7 தெலுங்கு வருட பிறப்பு 19.3.2026 வியாழன்
    8 ரம்ஜான் 21.3.2026 சனி
    9 மகாவீர் ஜெயந்தி 31.3.2026 செவ்வாய்
    10 ஆண்டு வருட கணக்கு 1.4.2026 புதன்
    11 புனித வெள்ளி 3.4.2026 வெள்ளி
    12 தமிழ் புத்தாண்டு /அம்பேத்கர் பிறந்தநாள் 14.4.2026 செவ்வாய்
    13 மே தினம் 1.5.2026 வெள்ளி
    14 பக்ரீத் 28.5.2026 வியாழன்
    15 முகரம் பண்டிகை 26.6.2026 வெள்ளி
    16 சுதந்திர தினம் 15.8.2026 சனி
    17 மிலாது நபி 26.8.2026 புதன்
    18 கிருஷ்ண ஜெயந்தி 4.9.2026 வெள்ளி
    19 விநாயகர் சதுர்த்தி 14.9.2026 திங்கள்
    20 காந்தி ஜெயந்தி 2.10.2026 வெள்ளி
    21 ஆயுத பூஜை 19.10.2026 திங்கள்
    22 விஜய தசமி 20.10.2026 செவ்வாய்
    23 தீபாவளி 8.11.2026 ஞாயிறு
    24 கிறிஸ்துமஸ் 25.12.2026 வெள்ளி


    • வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
    • தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட நினைக்கும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இதனிடையே, பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள்(21-ந்தேதி) ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 21-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
    • பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.

    இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் அவர்கள் எங்கிருந்தாலும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

    அத்தகைய மக்களுக்கு அமெரிக்கா ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. குறிப்பாக அந்த நாட்டில் அதிக இந்திய மக்கள் தொகை இருப்பதால், கலிபோர்னியா தங்களுக்குப் பிடித்த தீபாவளிப் பண்டிகையை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரித்து, ஆளுநர் கவின் நியூசம் நேற்று முன்தினம் ஒரு புதிய மசோதாவில் கையெழுத்திட்டார்.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இந்திய-அமெரிக்க சமூகங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். இந்தப் புதிய சட்டத்தின்படி, பொதுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி நாளில் விடுமுறை அறிவிக்கப்படும். மேலும், இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.

    • நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது.
    • தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பால் பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    நாளை 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ந் தேதிவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டி இல்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார்.

    தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாளை சென்னை மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
    • காலை 8 மணி முதல் 11 மணி வரை 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.

    மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். இதனால் நாளை சென்னை மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.

    அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    • வரும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • நவம்பர் 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதளாக தகவல் வெளியாகியுள்ளது.

    வரும் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    மேலும், நவம்பர் 1ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால், நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர் 31-ந்தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நவ.1-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 9-ந்தேதி அன்று வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.
    • அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 2025ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என அரசு விடுமுறைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக் கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2025- ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, குடியரசு தினம், தெலுங்கு பிறப்பு, மொகரம் ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.

    அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் மற்றும் அக்டோபரில் தலா 4 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



     


    • தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • இந்த சட்டத்துக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்தநிலையில் அங்குள்ள ஒகியோ மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதுதவிர தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்துக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 13-ந்தேதி நடக்கிறது.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மரகத நடராஜர் சிலை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 13-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    இந்த விழாவையொட்டி 13-ந்தேதியும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் தொடர் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
    • வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து மனு மீதான பரிசீலனையும் முடிந்துள்ளது. இடைத்தேர்தல் மொத்தம் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலில் முழு அளவிலான வாக்கு சதவீதத்தை எதிர்நோக்கி அரசு விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×