என் மலர்
நீங்கள் தேடியது "Dairy farmers"
- புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.
தற்போது கான் பெட் நிறுவனம் சார்பில் பட்டாசு விற்பனை சிறப்பு அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட் டாசு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார்.
மேலும் இதேபோன்று கூட்டுறவு துறையின் மார்க்கெட் சொசைட்டி சார்பில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பட்டாசு விற்பனை கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாண்லே நிறுவனத்திற்கு 2024-25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7,500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். அதாவது, மொத்த மதிப்பில் ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி கூடுதலாக செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர், சங்லி, சட்டாரா, புனே ஆகிய மாவட்டங்களில் அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் மக்களுக்கு தேவையான பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதுதவிர, அஹமத்நகர், நாசிக், ஜலகோன், நாண்டெட் மற்றும் பர்பானி மாவட்ட மக்களும் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் 17 ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. பின்னர், பதப்படுத்தி, குளிரூட்டி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் 42 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கொள்ளை லாபத்தை சுட்டிக் காட்டிய பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயரத்தி தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பால் உற்பத்தியாளர்களிடம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதற்காக கடந்த 3 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1 லிட்டர் பாலின் குறைந்தபட்ச விலை 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஜூலை 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MaharashtraMilkProtest
மராட்டியத்தில் பால் கொள்முதல் விலையை ரூ.5 அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் விவசாய அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின. போராட்டத்தையொட்டி விவசாயிகள் மாநிலம் முழுவதும் மும்பை, புனேக்கு வரும் பால் வாகனங்களை தடுத்தி நிறுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் சாங்கிலி, கோலாப்பூர், மரத்வாடா மற்றும் கொங்கன் மண்டலங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
போராட்டத்தின் 2-வது நாளான நேற்றும் விவசாயிகள் மற்றும் சுவாபிமனி சேத்காரி சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்பினர் பால் வாகனங்களை வழிமறித்து, அதில் இருந்த பாலை சாலையில் கொட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகளை ரோட்டில் வீசி அழித்தனர். இதேபோல பல இடங்களில் விவசாயிகள் ஏழை மக்களுக்கு பாலை இலவசமாக வழங்கினர். மேலும் விவசாயிகள் பாலில் குளித்தும், மாடுகளை பாலில் குளிக்க வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தாராவில் பால் லாரிகளை வழிமறித்து நிறுத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். புனே, உஸ்மனாபாத், புல்தானா, அகமதுநகர், நாசிக், கோலாப்பூர், சாங்கிலி, அவுரங்காபாத், சோலாப்பூர் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சுவாபிமனி சேத்காரி சங்க தலைவர் ராஜூ ஷெட்டி எம்.பி. தனது ஆதரவாளர்களுடன் மராட்டியம்- குஜராத் எல்லையில் பால்கர் மாவட்டம் தலசாரியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக பால் லாரிகள் மும்பைக்கு செல்கிறதா என பார்வையிட்டார்.
பின்னர் இதுகுறித்து ராஜூ ஷெட்டி எம்.பி. கூறுகையில், ‘சாங்கிலி, கோலாப்பூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’ என்றார்.
இந்தநிலையில் பால் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் நேற்று கோலாப்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் இருந்து 18 டேங்கர் லாரிகளில் கோகுல் நிறுவன பால் மும்பைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 10 பால் டேங்கர் லாரிகள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையே பால் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பால் விவசாயிகள் கோரிக்கை குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அனைத்து கட்சி தலைவர்களுடன் நாக்பூரில் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, எம்.எல்.சி. சுனில் தத்காரே, ஹமன்த் தாக்லே, நீலம் கோரே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.






