search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சந்தா்ப்பவாத அரசியலின் அடையாளம் நிதிஷ்குமாா்
    X

    சந்தா்ப்பவாத அரசியலின் அடையாளம் நிதிஷ்குமாா்

    • தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது.
    • அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது.

    திருப்பூா்:

    சந்தா்ப்பவாத அரசியலின் அடையாளம் நிதிஷ்குமாா் என்று மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லடத்தில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தா்ப்பவாத அரசியலின் பேராபாயத்தை உற்று நோக்கி அதனைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

    பீகாா் மாநில முதல்வா் நிதீஷ்குமாா் கடந்த காலங்களில் கூட்டணி, அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதும், நிா்வாகிகளின் முடிவுக்கு ஏற்ப கூட்டணி நிலைபாடுகளை மாற்றிக் கொள்வதும் தவிா்க்க முடியாதது. ஆனால் நிதிஷ்குமாா் பச்சை சந்தா்ப்பவாதத்தின் அடையாளமாக அரசியலில் காணப்படுகிறாா்.


    18 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுடன் இருந்தவா் முதல்வா் பதவிக்கு ஆபத்து என்றவுடன், லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஏற்படுத்தி புதிய ஆட்சியை நடத்தப்போவதாக கூறினார்.

    இதன் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற களத்தை அமைத்தாா். கடந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. முதல்வா் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்வா் பதவியை ஏற்று புதிய பாதையை த்தொடங்கியுள்ளாா். இத்தகைய அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    திருச்சி மத்திய சிறைச்சாலையை வரும் பிப்ரவரி 10- ந்தேதி பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சி முற்றுகையிட உள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து சமூக வழக்குகள் தொடா்பாக வாடிவதங்கிக் கொண்டிருக்கும் 36 கைதிகள் உள்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 2024 பாராளுமன்ற தேர்தல்தான் கடைசி தேர்தலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவா் ராயல் ராஜா, மாநில செயலாளா்கள் ஷபி, ஜாபா் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

    Next Story
    ×