search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்நுட்பம்"

    • டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.

    இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.

    தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.

    இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.



    உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • படம் குறித்து படக்குழு அதன் போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
    • ரஜினியின் 171வது படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் அவ்வபோது வருகிறது.

    ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் படக்குழு அதன் போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இந்நிலையில், ரஜினியின் 171வது படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் அவ்வபோது வருகிறது.

    அந்தவகையில், இந்த படத்தில் ரஜினியை இளமையாகக் காட்ட டீ- ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஜய் நடிக்கும் G.O.A.T திரைப்படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய தொழில்நுட்ப சிம்போசியம் உக்ரா 2 கே 23 நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப சிம்போசியம் உக்ரா 2 கே 23 நடைபெற்றது. நிகழ்ச்சியை சேரன் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில் , ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒளிந்துள்ள தனித்திறமைகளை வாய்ப்பு கிடைக்கும் போது அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் .அதற்கு ஆசிரியர்களும் தூண்டு கோளாக இருக்க வேண்டும் என்றார்.

    இவரைத்தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் கெளசல்யா தேவி வரவேற்று பேசினார். மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி மேடையில் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து வணிகவியல் துறைத்தலைவர் தேன்மொழிசெல்வி சிறப்புரை ஆற்றினார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கும். அதனை தகுந்த நேரத்தில் வெளிக்காட்ட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு 20க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் கட்டுரை வாசித்தல், வினாடி வினா,சமையல்போட்டி, குறும்பட போட்டி, புகைப்பட போட்டி, நடனப்போட்டி ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஆங்கில உதவிப்பேராசிரியர் புவனா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.
    • இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதி நவீன தொலைத்தொடர்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது காசிமேடு மீனவர்களின் 750 படகுகளில் பொருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும். இது ஜிசாட்-6 செயற்கை கோள் வழியாக இயங்கும்.

    இந்த தொழில்நுட்ப கருவியில் எஸ்.ஓ.எஸ். என்ற அவசரகால பட்டன் உள்ளது. இதை மீனவர்கள் அவசர காலத்தில் அழுத்தினால் அதில் இருந்து தகவல் மற்றும் படகு இருக்கக்கூடிய இடத்தை தகவலாக மீன்வளத்துறை, படகின் உரிமையாளர், மற்றும் கடலோர காவல் படையினருக்கும் தகவலாக சென்று அடையும். இதே போல் கடலில் மற்றொரு படகு ஆபத்தில் இருக்கும் நேரத்தில் அதையும் மற்றொரு படகில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டறிக்கூடிய தொழில்நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஆழ் கடலில் உள்ள மீனவர்களின் படகுகளை சுலபமாக கண்டறிந்து மீட்க முடியும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இந்த கருவி இயங்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கருவியை தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் விசைப் படகுகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.18 கோடி நிதி உதவி வழங்கபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும்.
    • பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும்

    தஞ்சாவூர்:

    தேசிய உணவு தொழில்நு ட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிப்டெம்) தஞ்சாவூர், இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும்.

    "உணவுத் தரநிலைகள் உயிர்களைக் காக்கும்" என்ற கருப்பொருளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், உலக உணவுப் பாதுகாப்பு நாள் அதன் வளாகத்தில் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

    தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா முன்னிலையில் மாணவர்க ளின் திறமைத் தேடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசும்போது :-

    ஒழுங்குமுறை அமைப்பு கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும். பாதுகாப்பற்ற உணவில் இருந்து மக்களைக் காக்க புதுமையான தொழில்நுட்பங்களைக் மாணவர்கள் கண்டறிய வேண்டும். அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் லோகநாதன், நிறுவனத்தின் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம்மூலம் உலக மண்வள நாள் விழா பூதலூர் மனையேரிப்ப ட்டியில் நடைபெற்றது.
    • விழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது சந்தே கங்களை கேட்டு பயன் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், காட்டு தோட்டம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீர் நுட்ப மையம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் மூலம் உலக மண்வள நாள் விழா பூதலூர் மனையேரிப்பட்டியில் நடைபெற்றது.

    இதில் இளநிலை ஆராய்ச்சியாளர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு தஞ்சாவூர் காட்டுதோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராமநாதன் தலைமை தாங்கி, இந்தத் திட்டத்தை பற்றியும், உலக மண்வள நாள் விழா பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    இத்திட்டத்தின் பொறுப்பாளர் பார்த்திபன் மண் மாதிரிகள் எடுத்தல், மண் பரிசோதனையின் அவசியம் மற்றும் கடலை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு ஈடுபொருட்களாக உயிர் உரம் வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாட்டை இளநிலை ஆராய்ச்சியாளர் சதீஷ்குமார், தொழில்நுட்ப உதவியாளர் ஆனந்தராஜ், சுதாகர் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது சந்தே கங்களை கேட்டு பயன் அடைந்தனர். முடிவில் தொழில் நுட்ப உதவியாளர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "உலகை ஆளும் உள்நாட்டுத் தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், கட்டிடக்கலை துறை சார்பில் நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி டில்லிபாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    இதனை முதல் இடத்திற்கு கொண்டு வரவேண்டும். தமிழில் அறிவியல் தொழில் நுட்பங்களை பதிவு செய்யவேண்டும் என்றார். மெக்கானிக்கல் துறை மூத்த பேராசிரியா் சரவணசங்கா், டீன் ராஜேஷ் வரவேற்று பேசினர். ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் இணை இயக்குநா் வளா்மதி "இந்திய பலவகை செயற்கை கோள்கள்" பற்றி பேசினார்.

    புதுடெல்லி – விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய "அறிவியல் கருத்தரங்கு மலரை" வெளியிட்டார். பேராசிரியா்கள் மெய்யப்பன், உதயகுமார், லிங்கா குளோபல் பள்ளி முதல்வா் அல்கா சா்மா மற்றும் பள்ளி, கல்லுரி மாணவா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியை கவிதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். துறைத்தலைவா் ஆறுமுகபிரபு நன்றி கூறினார்.

    • கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர்.
    • திருடப்பட்ட சிலை எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்திற்கு வருகை தந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கும்பகோணம் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கான புதிய அலுவலக கட்டிடத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். தொடர்ந்து, கும்பகோணம் மற்றும் மதுரையில் சிறப்பாக பணியாற்றிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு வெகுமதியுடன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில், சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர். குறிப்பாக, 1962-ம் ஆண்டு திருடு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டது சிறப்பிற்குரியது. இந்த சிலைகள் அனைத்தும் இனி எக்காலத்திலும் யாராலும் திருட முடியாத வகையில், சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன், சமீபத்தில் கைப்பற்றிய 300 சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும், முப்பரிமான முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரேடியோ ப்ரீக்குவன்ஸி முறையில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், அப்படி மீறி சிலை திருடப்பட்டால், இது எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மேலும் 60 சிலைகளை விரைவில் மீட்க சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறிளார்.

    • பயிற்சியில் தமிழக முதல்-அமைச்சரின் மானாவாரியின் நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
    • உதவி மேலாண்மை அலுவலர் பிரான்சிஸ், பொருட்களின் மதிப்பு கூட்டு விற்பனை செய்தல் குறித்தும் பல்வேறு வழிமுறைகளையும் எடுத்து கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் தெற்கு வண்டானம் கிராமத்தில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆணைப்படி அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

    இந்த பயிற்சியில் தமிழக முதல்-அமைச்சரின் மானாவாரியின் நில மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு தெற்கு வண்டானம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். அட்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் ஆறுமுக பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இந்த பயிற்சியில் வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தை சேர்ந்த வேளாண் வல்லுநர் முருகன் கோடை உழவு மற்றும் அடி உரம் இடுதல், வேப்பம் புண்ணாக்கு, மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுதல் உட்பட பல்வேறு சாகுபடிகள் குறித்து விளக்கி கூறினார்.

    மேலும் இயற்கை பண்ணையம் தரிசு நில மர சாகுபடி குறித்து வேளாண் வணிகத்துறையை சேர்ந்த உதவி மேலாண்மை அலுவலர் பிரான்சிஸ், தமிழக அரசு செயல்பட்டு வரும் தமிழக சேமிப்புக் கிடங்கு உழவர் சந்தை விவசாயிகள், பொருட்களின் மதிப்பு கூட்டு விற்பனை செய்தல் குறித்தும் பல்வேறு வழிமுறைகளை எடுத்து கூறினார்.

    உதவி வேளாண்மை அலுவலர் முத்துமாரி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    மானாவாரி பயிர்களுக்கான சாகுபடி தொழில்நுட்பம் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மணிகண்டன், துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், காளிராஜ் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாலமன் நவராஜ்பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெயலட்சுமி மற்றும் உழவர் நண்பர்கள் முத்துப்பாண்டியன், பொன்னுச்சாமி பாண்டியன் ஆகியோர் செய்தனர்.

    • கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளனர்.
    • கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது.

    காரைக்குடி

    காரைக்குடியில் செயல்படும் மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தின் (சிக்ரி) 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 19 கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    முதற்கட்டமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் கடத்தி, அதை திரவ நிலைக்கு மாற்றுவதற்கான ஆராய்ச்சியில் சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, ஷ்ரவந்தி, வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். தற்போது அதற்கான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த தொழில் நுட்பம் கோவையை சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி சிக்ரி வளாகத்தில் நடந்தது. சிக்ரி இயக்குனர் கலைச்செல்வி இந்த தொழில் நுட்பத்தை சுமிட்ஸ் நிறுவன இயக்குநர் ராஜ்மோகன் சத்தியதேவிடம் வழங்கினார். இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி கூறிய தாவது:-தற்போது தொழி ற்சாலைகளில் வெளியாகும் கார்பன்டை ஆக்சைடானது குளிர்விக்கப்பட்டு, மீண்டும் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் திரவ நிலைக்கு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவினங்கள் அதிகம் உள்ளது. அந்த செலவினத்தை 30 முதல் 40 சதவீதம் குறைக்கும் வகையில் எங்கள் விஞ்ஞானிகளின் தொழில் நுட்பம் அமைந்துள்ளது.

    இதன்படி தொழிற்சாலைகளில் 70 டிகிரி வெப்பத்தில் வெளிவரும் கார்பன்டை ஆக்சைடை அதே வெப்பநிலையில் பயனுள்ள திரவ கார்பன்டை ஆக்சைடாக மாற்றி உருளைகளில் சேமித்து ஆற்றலாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் உலக வெப்ப மயமாதல் குறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்தியாவில் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடால் 40 சதவீதம் அளவிற்கு வெப்பம் ஏற்படுகிறது. அதனால், முதற்கட்டமாக இந்த தொழில் நுட்பத்தை கோவை சுமிட்ஸ் நிறுவனம் அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வின்போது மூத்த விஞ்ஞானி சத்யநாராயணன் உள்பட விஞ்ஞானிகள் உடனிருந்தனர்.

    ×