search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம்:சேரன் கல்லூரியில் தொழில்நுட்ப நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

    காங்கயம்:சேரன் கல்லூரியில் தொழில்நுட்ப நிகழ்ச்சி

    • தேசிய தொழில்நுட்ப சிம்போசியம் உக்ரா 2 கே 23 நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப சிம்போசியம் உக்ரா 2 கே 23 நடைபெற்றது. நிகழ்ச்சியை சேரன் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில் , ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒளிந்துள்ள தனித்திறமைகளை வாய்ப்பு கிடைக்கும் போது அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் .அதற்கு ஆசிரியர்களும் தூண்டு கோளாக இருக்க வேண்டும் என்றார்.

    இவரைத்தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் கெளசல்யா தேவி வரவேற்று பேசினார். மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி மேடையில் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து வணிகவியல் துறைத்தலைவர் தேன்மொழிசெல்வி சிறப்புரை ஆற்றினார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கும். அதனை தகுந்த நேரத்தில் வெளிக்காட்ட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு 20க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் கட்டுரை வாசித்தல், வினாடி வினா,சமையல்போட்டி, குறும்பட போட்டி, புகைப்பட போட்டி, நடனப்போட்டி ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஆங்கில உதவிப்பேராசிரியர் புவனா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×