search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women"

    • உங்கள் உடைக்கு இன்னும் அழகூட்டும். மேலும், உங்களைத் தனித்துக் காட்டும்.
    • அப்படி பயன்படுத்தும் பர்ஃயூம் மற்றவர்கள் இரசிக்கும்படியாக இருக்க வேண்டும்.

    உடையை அழகாகவும், சுத்தமாகவும் அணிந்துகொள்ள விரும்புகிறோம். அது போல உங்களுக்கு ஏற்ற பர்ஃயூமைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது, உங்கள் உடைக்கு இன்னும் அழகூட்டும். மேலும், உங்களைத் தனித்துக் காட்டும்.

    முதலில் என்னனென்ன பர்ஃயூம் (fragrance)இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதில் நமக்குப் பொருந்தும் பர்ஃயூமை எப்படி தேர்வு செய்வது என்று பார்க்கலாம்.

    வகைகள்

    சிட்ரஸ் – சிட்ரஸ் பழங்களின் மணம் கொண்டது. எலுமிச்சை, மாண்டரின்(சீன ஆரஞ்சு), பெர்காமோட்(எலுமிச்சை, கிச்சிலி இன வகை) போன்ற நறுமணங்கள்.

    அரோமேட்டிக் – லாவெண்டர், லெமன் க்ராஸ், அனீஸ் போன்ற நறுமணங்கள்.

    ப்ளோரல்(பூ) – ரோஸ், ஜாஸ்மின், லீலாக் போன்ற நறுமணங்கள்.

    க்ரீன்(பச்சை) – புல், கல், இலை போன்ற நறுமணங்கள்.

    ப்ரூட்டி(பழங்கள்) – ரேஸ்ப்பெர்ரி, பியர், பீச் போன்ற நறுமணங்கள்.

    ஸ்பைஸஸ்(மசாலா) – கிராம்பு, ஜாதிக்காய், பட்டை போன்ற நறுமணங்கள்.

    வூடெட்(மரம்) – சிடார்(கேதுரு), பட்சவுளி(குளவி), மோஸ்(பாசி) போன்ற நறுமணங்கள்.

    பால்சாமிக் – வெண்ணிலா, ஹெலியோட்ரோப், டோங்கா பீன் போன்ற நறுமணங்கள்.

    பர்ஃயூம் எண்ணெய் எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது என்பதை வைத்து, எது தரமான பொருள் என்றும் கண்டறியலாம்.

    30 சதவிகிதம் பர்ஃயூம் எண்ணெய் இருந்தால் 6 முதல் 8 மணி நேரம்வரை வாசனை இருக்கும்.

    5 சதவிகிதம் மட்டுமே பர்ஃயூம் எண்ணெய் இருந்தால் 2 முதல் 3 மணி நேரம்தான் அதன் வாசனை இருக்கும்.

    இப்படி வாசனை திரவியத்தின் எண்ணெயின் சதவிகிதத்தைக் கொண்டும், பாட்டில் அளவைக்கொண்டும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    உங்களுக்கான நறுமணத்தை எப்படி தேர்வு செய்வது ?

    பர்ஃயூமின் மனம் (perfume/scent) ஒவ்வொருவருடைய உடல் தன்மைக்கேற்ப மாறுபடும். ஒவ்வொருவருக்கும், அவர்களின் ஹார்மோன், ஃபெரோமோன் பொருத்து பர்ஃயூமின் மனம் ஓங்கியோ அல்லது மங்கியோ இருக்கும். அதனால் அவரவர் மணிக்கட்டில் நீங்கள் வாங்க நினைக்கும் பர்ஃயூமை ஸ்ப்ரே செய்து, கொஞ்ச நேரத்திற்கு பின் முகர்ந்து பாருங்கள். பிறகு முடிவெடுங்கள்.

    உங்களால் கடைக்குச் சென்று தேர்வு செய்ய முடியவில்லை என்றால் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். தள்ளுபடி உள்ள பர்ஃயூமை பார்த்து மயங்கி விடாதீர்கள். ஆன்லைனில் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் தேர்ந்தெடுப்பதற்குமுன் அவர்கள் சில கேள்வி பதில்கள் வைத்திருப்பார்கள். அதை சரியாக செய்து, ஒவ்வொற்றிற்கும் தகுந்த விளக்கம் இருக்கும், அவற்றையும் சரியாக படிக்க வேண்டும். பிறகு உங்களுக்கான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.


    மேலும், நீங்கள் என்ன மாதிரியான உடை அணிகிறீர்கள், எந்த இடத்திற்கு செல்கிறீர்கள், எங்கு அதிகமாக இருக்கிறீர்கள் போன்றவற்றை மனதில் கொண்டு உங்களுக்கான பர்ஃயூமை தேர்ந்தெடுங்கள்.

    நீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியம் நீங்கள் வருவதற்குமுன் சில அடி தூரம்வரை மனம் வீசி நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை தெரிவித்துவிடும். அப்படி பயன்படுத்தும் பர்ஃயூம் மற்றவர்கள் இரசிக்கும்படியாக இருக்க வேண்டும். முகம் சுளிக்கும் படியாக இருக்கக் கூடாது.

    முதலில் எந்த கம்பெனி பர்ஃயூம் வாங்கப்போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள். பிறகு, அந்த கம்பெனியில் இருக்கும் மற்ற இரகங்களை ஆராய்ந்து உங்களுக்கான ஒரு பர்ஃயூமை தேர்வு செய்யுங்கள்.

    பார்க் அவென்யூ, ஃபாக், ஃபாரெஸ்ட் ஸ்பைஸ், யார்டலே, ப்ளாக் ஜாக், ஜியோர்ஜியோ அர்மானி, பெர்பெர்ரி பார் வுமன் , குச்சி, ரெவ்லான் சார்லி ரெட் பர்ஃயூம்,கால்வின் கிளைன் போன்றவை இந்தியாவில் பெண்களுக்கான (women) முதன்மை பர்ஃயூம்கள் ஆகும்.

    • பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது.

    ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பெண்களுக்கு கன்னம், மேல் உதடு, தாடை பகுதிகளில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கிறது. இது போன்ற முடி வளர்ச்சி அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. இது குறிப்பாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் வருகிறது. ஆண்களுக்கு இருக்கும் தாடி, மீசை போன்ற அமைப்புடன் பெண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். பெண்களில் உடலில் சுரக்கும் ஆண் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இதற்கு பெண்கள், த்ரெட்டிங், வேக்சிங் அல்லது ட்வீசிங் போன்றவற்றை செய்து தற்காலிகமாக முடியை நீக்கி வருகின்றனர். ஆனால், இதற்கு நிறைந்த தீர்வாக ஹார்மோன் பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

    பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - இது ஹார்மோன் குறைபாடு பிரச்சனையாகும். இதனால் பெண்களின் மாத விடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படும். இதில் ஆண்களின் ஹார்மோன் ஆன ஆண்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனை வரும். இது போன்ற முடி வளர்ச்சி, மாத விடாய் சுழற்சியில் மாறுபாடு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.


    நாளமில்லா சுரப்பி கோளாறுகள் - நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, மனஅழுத்த ஹார்மோன் ஆன, கார்டிசோல் அதிகரிப்பால் இந்த பிரச்சனை வருகிறது. இதனால் பெண்களுக்கு உடல் பருமன், வயிற்றை சுற்றி கொழுப்பு சேருதல், மற்றும் நீரிழுவு நோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    மரபணு காரணம் - மரபணு காரணமாக அம்மா, அக்கா, அத்தை ஆகியோர்க்கு இந்த பிரச்சனை இருந்தால், இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

    முதுமை - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முடி வளரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக செயல்படும். அதனால் கூட இது போன்ற முடி வளர்ச்சி பிரச்சனை முதுமையில் வரும்.

    கர்ப்ப காலம் - பெண்கள் உடலில் பல படிநிலைகளில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கிறது. பருவம் அடைதல், கர்ப்ப காலம், உடல் பருமன், மாத விடாய் சுழற்சி நிற்கும் ஆகிய நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அதனால் இது போன்ற தேவையற்ற முடி வளர்ச்சி வரலாம்.


    அட்ரீனல் சுரப்பி கட்டிகள் - அட்ரீனல் ஹார்மோன் குறைபாடுகளால், உடலில் ஆண்ட்ரொஜென் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும். இதன் காரணமாக கருப்பையில் கட்டிகள் வளரும். மேலும் தேவையற்ற முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கும்.

    முடி வளர்ச்சி இருக்கிறது என்பதை உறுதி செய்தவுடன், மருத்துவரை அணுகி எந்த காரணத்தால் இப்படி முடி வளர்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்து கொள்வது மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.

    • ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணி தொடங்கப்படும்.
    • ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ₹ 8,500 டெபாசிட் செய்யப்படும்.

    காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்

    உங்கள் ஒரு வாக்கு இந்தியாவில் நிகழும் அநீதிகளையும், அடக்குமுறைகளையும் அகற்றும்.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணி தொடங்கப்படும்.

    ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ₹ 8,500 டெபாசிட் செய்யப்படும்.

    இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் முதல் வேலை வழங்கப்படும்.

    அரசியலமைப்பு காக்கப்பட்டு, உரிமைகள் மீட்கப்படும்.

    உங்களின் சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாப்பதன் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

    ஒடுக்கப்பட்டவர்களுக்கான, இடஒதுக்கீடு நியாயமான முறையில் கிடைக்கப்பெறும்.

    நீர், நிலம், வனம் மீதான பழங்குடியினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

    நீங்கள் இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.
    • ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    வீட்டில் இருந்தவாறு குறைந்தபட்ச வருமானத்திலிருந்து அதிகபட்ச வருமானம் வரை தரும் பெண்களுக்கு ஏற்ற பிசினஸ்.

    இன்று அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. இதனாலையே பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்து முடித்துவிட்டு வருமானம் ஈட்டுவதற்கான வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

    மேலும் வீட்டிலேயே கடுமையான உழைப்பை செலுத்திய பெண்களால் பிறகு வேலைக்காக வெளியே செல்வது இயலாத காரியம் என்பதால் வீட்டில் இருந்தவரை வருமானம் ஈட்டும் தொழில்களை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குறைந்த நேரத்தில், முதலீடு இல்லாமல் அல்லது குறைந்த முதலீட்டில் தொழிலை தொடங்கி போதிய அளவு வருமானத்தை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

    • இந்த நிலையில் வீட்டில் இருந்தவாறு அதிக வருமானத்தை பெற பெண்களுக்கு ஏற்ற தொழில்கள், வீட்டிலேயே பேக்கரி தொடங்கி சாக்லேட், கேக் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யலாம், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு வகைகள், முறுக்கு தயாரித்து வியாபாரம் செய்யும் பெண்கள் சீசனுக்கு மட்டும் இல்லாமல், முழு நேரத் தொழிலாக ஹோம் பேக்கரி தொடங்கி பயன்பெற முடியும்.


    • கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க குறைந்தபட்ச முதலீடு இருந்தால் போதும், தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு பணிகளை மேற்கொண்டால் போதிய வருமானம் கிடைக்கும்.

    • சிறிய நகை உற்பத்தி, செயின், கம்மல் போன்ற பல்வேறு வகைகளில் நகை வடிவங்களை சிறிய அளவில் வீட்டிலிருந்தவாரு தயாரித்தால் அக்கம் பக்கத்தினரிடம் விற்பனை செய்தே வருமானம் ஈட்ட முடியும்.


    • வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் டைப்பிங் வர்த்தக நடவடிக்கையாக பயன்படுத்த முடியும். கணினியில் டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் கொண்ட பெண்களுக்கு மேலும் வருவாய் கிடைக்கும்.

    • தமிழ்நாட்டில் தற்போது அதிகப்படியான பெண்கள் வீட்டில் தையல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தையல் தொழில் செய்யும் பெண்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.


    • மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகள் ஆகியவற்றை வீட்டிலேயே மிக எளிமையாக தயாரிக்கலாம். இவையும் பயன்தரும் வணிக நடவடிக்கைகள் ஆகும். மேலும் ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை வீட்டில் தயாரித்து விற்பதும் ஆக்கப்பூர்வமான வணிக நடவடிக்கைகள் ஒன்றாகும்.

    • தற்போது ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால் வீட்டில் ஆர்கானிக் சோப்பு மற்றும் ஆர்கனைச் சார்ந்த பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதும் ஏற்ற வணிக நடவடிக்கையாகும்.


    • மேலும் தற்போதைய நவீன சமூகத்தில் அழகு கலை பெண்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் வீட்டிலேயே அழகு கலை சார்ந்த செயல்பாட்டை செய்யும் பெண்கள் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர் வீடு தேடி சென்று சில மணி நேரங்கள் செலவிட்டு அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறான வணிக நடவடிக்கைகள் தற்போது பெண்களுக்கு ஏற்ற முக்கியமான பிசினஸ்க்காக உருவெடுத்து இருக்கின்றனர்.

    • கலோரிகள் தான் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.
    • மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது.

    கலோரி... கலோரி... என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்திதான் கலோரியில் கணக்கிடப்படுகிறது.

    வயது, பாலினம், எடை, உயரம், உடல் உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் கலோரி அளவு மாறுபடும். ஒவ்வொரு உணவு வகைக்கும் கலோரி அளவு உண்டு. உதாரணத்துக்கு 100 கிராம் எடைகொண்ட ஆப்பிளில் 59 கலோரி இருக்கும். வாழைப்பழத்தில் 116 கலோரி, 300 கிராம் சாதத்தில் 346 கலோரிகள் கிடைக்கின்றன.

    மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு குடும்பப் பெண் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என ஒரு மணி நேரம் வீட்டு வேலைகளைச் செய்தால், 120 கலோரி செலவாகும். ஆனால், ஒரு ஆண் ஒரு மணி நேரம் ரன்னிங் செல்லும்போது, 470 கலோரிகள் செலவாகும். இதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் கலோரிகளின் அளவு வித்தியாசப்படும்.

    ஆண்களுக்கு

    26-45 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 2,600 கலோரிகள் தேவைப்படுகிறது. சுறுசுறுப்பான ஆண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,800 முதல் 3,000 கலோரிகள் தேவை.

    பெண்களுக்கு

    26-50 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான பெண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கலோரிகள் தேவைப்படுகின்றன.

    சுறுசுறுப்பான பெண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் தேவைப்படும்.

    20 வயதின் முற்பகுதியில் உள்ள பெண்களுக்கு தங்கள் எடையைக் கட்டுப்படுத்த அதிக கலோரிகள் தேவை, ஒரு நாளைக்கு சுமார் 2,200 கலோரிகள் அல்லது அதற்கும் அதிகமாக தேவைப்படலாம்.

    50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,800 கலோரிகளுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது.

    அதிக உடலுழைப்பைச் செலுத்தும், 55 கிலோ எடை கொண்ட ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2,210 கலோரிகள் தேவைப்படும் அதேநேரம் மிதமான உடலுழைப்பைச் செலுத்தும் பெண்களுக்கு 2,130 கலோரிகள் தேவைப்படும்.

    உடல் உழைப்பு குறைவாக இருக்கும் பெண்களுக்கு 1,660 கலோரிகள் தேவைப்படும். இதுவே அந்த பெண் கருத்தரித்தால் 300-500 கலோரிகள் கூடுதலாகத் தேவைப்படும். பாலுாட்டும் பெண் என்றால் கூடுதலாக 500 - 600 கலோரிகள் தேவைப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மட்டுமின்றி மார்பகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
    • நமது உடலில் உள்ள செல்கள் ஸ்வாசிக்கும் வகையில் மென்மையான உள்ளாடைகளை அணிந்து உறங்க வேண்டும்.

    பெண்களில் பலரும் ஆடைகளை தேர்வு செய்ய கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் கொடுப்பது இல்லை. இறுக்கமான, அளவில் மாறுதல் உள்ள உள்ளாடைகளை அணியும்போது பெண்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி மார்பகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    மார்பக பகுதி மிகவும் மென்மையான பகுதி என்பதால் இருக்கமான உள்ளாடை அணியும்போது மார்பகத்தின் கீழ் பகுதியில் எரிச்சல், நீர் கட்டி போன்ற விளைவுகள் ஏற்படலாம். அது மட்டுமின்றி பெண்களில் பலர் இருக்கமான உள்ளாடைகளை அணிந்துகொண்டு இரவில் உறங்குவார்கள்.


    அது மிகவும் தவறான செயல் மட்டுமின்றி ஆபத்தானதும் கூட. நமது உடலில் உள்ள செல்கள் ஸ்வாசிக்கும் வகையில் மென்மையான உள்ளாடைகளை அணிந்து உறங்க வேண்டும். உதாரணத்திற்கு ஸ்போட்ஸ் ப்ரா போன்ற வகையில் உள்ள உள்ளாடைகளை அணிந்து உறங்கலாம்.

    அப்போது நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மேலும், கோடை காலங்களில் இறுக்கமான ப்ரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரித்து தோல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். அது மட்டுமின்றி, செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் பெண்கள் காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் மிகவும் சிறந்தது.

    • வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவில். அப்பகுதியில் மிகவம் பிரபலமான இந்த கோவிலில் ரீல்ஸ் எடுப்பதை தடுத்த காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவத்தன்று மகாகாலேஸ்வரர் கோவிலில் தடை செய்யப்ட்ட பகுதியில் பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதனை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமைடந்த பெண்கள் இருவரும் அங்கிருந்த வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    பாலக் மற்றும் பாரி என இரு பெண்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பெண் காவலர்கள் காயமுற்றனர். கோவிலில் பெண் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மஹாகல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

    • விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம்.
    • தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான்களின் உச்ச தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை. அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றார்.

    • தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டார்.
    • ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்.

    தலிபான் அமைப்பின் தலைவர் மேற்கத்திய கலாசாரத்திற்கு எதிராக போர் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அந்நாட்டு தொலைகாட்சியில் ஆடியோ வெளியிட்ட தலிபான் தலைவர் மேற்கத்திய மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அவர்களை கற்களால் அடித்து சாகடிப்பதை நீங்கள் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல் எனலாம். ஆனால், விரைவில் நாங்கள் விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக இதனை அமல்படுத்த இருக்கிறோம். நாங்கள் பெண்களை பொது வெளியில் அடிப்போம். இவை உங்களது ஜனநாயகத்திற்கு எதிரானவை, ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்," என்று தெரிவித்தார்.

    தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசு தொலைகாட்சியில் அடிக்கடி முகம் தெரியாதவரின் குரல் செய்திகளை ஒளிபரப்புகிறது. அந்த வகையில், வெளியான ஆடியோவில் தான் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர தண்டனை குறித்த அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.

    • பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.
    • மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.

    மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன்.

    உங்கள் சகோதரனாகிய நானும் எனது அமைச்சர்கள் குழுவும் இந்த காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

    தெலுங்கானா தங்க தெலுங்கானாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன் என உறுதி அளித்துள்ளார்.

    பெண் வாக்காளர்களை குறிவைத்து காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    • வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது
    • இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

    இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட உள்ளோம் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் முழு பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

    இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்துமே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் செலவு செய்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதில் கிடைத்த தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர். ஆனால் பெண்களோ ரூ.1830 மட்டும் செலவு செய்கிறார்களாம். இதன்மூலம் பெண்களை விட ஆண்கள் 36 சதவீதம் அதிகம் ஷாப்பிங் செய்வதாக 'டிஜிட்டல் சேனல்கள் மற்றும் நுகர்வோர் தி இந்தியன் பெர்ஸ்பெக்டிவ்' அறிக்கை தெரிவித்துள்ளது.

    அறிக்கையின்படி 47 சதவீத ஆண்களும், 58 சதவீத பெண்களும் பேஷன் ஆடைகளை வாங்கி உள்ளனர். அதே நேரத்தில் 23 சதவீத ஆண்கள் மற்றும் 16 சதவீத பெண்கள் ஆன்லைன் மூலம் மின்னணு சாதனங்களை ஷாப்பிங் செய்துள்ளனர். ஜெய்ப்பூர், லக்னோ, நாக்ப்பூர், கொச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்கள் ஆன்லைனில் பேஷன் ஆடைகளுக்கு 63 சதவீதம் அதிகமாகவும், மின்னணு சாதனங்களுக்கு 21 சதவீதம் அதிகமாகவும் செலவழிப்பது தெரிய வந்துள்ளது.

    ×