search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cost"

    • அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்துமே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் செலவு செய்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதில் கிடைத்த தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர். ஆனால் பெண்களோ ரூ.1830 மட்டும் செலவு செய்கிறார்களாம். இதன்மூலம் பெண்களை விட ஆண்கள் 36 சதவீதம் அதிகம் ஷாப்பிங் செய்வதாக 'டிஜிட்டல் சேனல்கள் மற்றும் நுகர்வோர் தி இந்தியன் பெர்ஸ்பெக்டிவ்' அறிக்கை தெரிவித்துள்ளது.

    அறிக்கையின்படி 47 சதவீத ஆண்களும், 58 சதவீத பெண்களும் பேஷன் ஆடைகளை வாங்கி உள்ளனர். அதே நேரத்தில் 23 சதவீத ஆண்கள் மற்றும் 16 சதவீத பெண்கள் ஆன்லைன் மூலம் மின்னணு சாதனங்களை ஷாப்பிங் செய்துள்ளனர். ஜெய்ப்பூர், லக்னோ, நாக்ப்பூர், கொச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்கள் ஆன்லைனில் பேஷன் ஆடைகளுக்கு 63 சதவீதம் அதிகமாகவும், மின்னணு சாதனங்களுக்கு 21 சதவீதம் அதிகமாகவும் செலவழிப்பது தெரிய வந்துள்ளது.

    • ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது.
    • அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி வட்டாரத்தில் பாரப்பட்டி, வாணியம்பாடி, கம்மாளப்பட்டி, திப்பம்பட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில் 150 ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் காய்களை சேலம் உழவர் சந்தையில் விவசாயிகள் விற்கின்றனர். குறிப்பாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது. அப்போது வெளி மார்க்கெட்டுக்கள், மளிகை கடைகள், வணிக வளா கத்தில் உள்ள கடைகளில் 75 ரூபாய்க்கு விற்றது.

    இந்த நிலையில் சில நாட்களாக வெண்டைக் காய்க்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தையில் ஒரு கிலோ 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    இது குறித்து பன மரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் குமரவேல் கூறுகையில், பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து தட்டுப்பாட்டால் வெண்டைக்காய் விலை உயர்ந்துள்ளது, என்றார்.

    • பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
    • பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையம், அனைத்தித்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சென்னை மற்றும் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை தஞ்சாவூர் இணைந்து அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் பெருமங்கல விழாவில் வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் பல்கலக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், பசிப்பிணி இல்லா உலகினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    இவ்விழாவில்தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பஞ்சநதம் பேசுகையில், மக்கள் அனைவரும் பசியில்லாமல் வாழவேண்டுமென்றால் பெண்கள் தங்களுடைய அலங்கார செலவின ங்களுக்காக செலவிடும் தொகையை குறைத்தும் ஆண்கள் தீயப்பழக்க வழக்கத்திற்காக செலவிடும் தொகையைத் தவிர்த்தும் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்க முன்வ ரவேண்டும் என்றார்.

    இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவே ந்தருக்கு வள்ளலார் விருது வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் தமிழ்ப் பண்பாட்டு மையம் இயக்குனர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார்.

    கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை பா. தம்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர் வாசுதேவன் இவ்விழாவிற்கு இணைப்புரை வழங்கினார்.

    இதில் டாக்டர் சிவராமன், அனைந்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
    • மரபணு மாற்றப்பட்ட விதையால் விதை அழிந்து விட்டது.

    உடுமலை :

    பருத்தி,நூல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்ததால் ஒட்டு மொத்த ஜவுளி துறையும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதை சமாளிக்க அரசு வெளிநாட்டில் இருந்து பருத்தி இறக்குமதி செய்கிறது. தற்போது அங்கும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.உள்நாட்டில் பருத்தி சாகுபடி அதிகரிக்காவிட்டால் ஒட்டுமொத்த ஜவுளி துறையும் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

    உலக அளவில் நம் ஏற்றுமதி வாய்ப்பு பறிபோய் விடும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அரசு பருத்தி சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொழிலாளர்கள் முன்பு 10 மணி நேரம் வேலை பார்த்தனர். தற்போது 6மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கின்றனர். கடின வேலை என்பதால் ஆட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. மரபணு மாற்றப்பட்ட விதையால் விதை அழிந்து விட்டது. தற்போது ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு வெளியில் தான் வாங்க வேண்டும். செலவு அதிகரிப்பால் பருத்தி சாகுபடியை தவிர்த்து வருகிறோம். எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளை அரசு பாதிக்கும் மேல் இறக்குமதி செய்கிறது.

    இதனுடன் பருத்தியும் இணைந்துள்ளது. விலை உயராமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. தொடர் நஷ்டம் வருவதால் நாங்களும் உற்பத்தியை குறைக்கிறோம்.இதனால் ஒட்டுமொத்த தொழில்துறையும் முடங்கியுள்ளது. அரசு தன் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுத்தாலே பருத்தி சாகுபடி உயர்ந்து விடும் என்றனர்.

    • தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
    • கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 8-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக, கபிஸ்தலம் கடைவீதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கைகளில் கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது. முன்னதாக கொடியினை அர்ஜூனன் ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு கலியமூர்த்தி அஞ்சலி செய்தார். அனைவரையும் மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் தில்லைவனம் வேலை அறிக்கை வாசித்தார். வரவு செலவு அறிக்கைகளை மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன் வாசித்தார். பின்பு, ஏ.ஐ.டி.யு.சி யின் மாநில செயலாளர் சந்திரகுமார் தொடக்க உரை நிகழ்த்தினார்.

    இதில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தையும், மதசார்பின்மையும் பாதுகாக்க போராடுவோம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சட்ட ஆலோசகர் பாரதி, மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் மணி மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு சாமு. தர்மராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைப்பின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜி.எஸ்.டி. குறித்து மக்கள் அறிந்து கொள்ள மத்திய அரசு விளம்பரத்துக்காக ரூ.132.38 கோடி செலவழித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GST #CentralGovt
    புதுடெல்லி:

    சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நாடு முழு வதும் கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டது.

    ஜி.எஸ்.டி. குறித்து மக்கள் அறிந்து கொள்ள மத்திய அரசு விளம்பரம் செய்தது. இந்த விளம்பரத்துக்காக ரூ.132.38 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பத்திரிகைகளில் செய்த விளம்பரம் மூலம் ரூ.126.93 கோடியும், வெளிப்புற ஊடகங்கள் மூலம் 5.44 கோடியும் செலவழிக்கப்பட்டது. #GST #CentralGovt
    ×