search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்வு"

    • மக்கள் நேர்காணல் முகாம் 22 -ந்தேதி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்துக்கு உட்பட்ட செங்கமங்கலம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நவம்பர் 22 புதன்கிழமை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தாவது:-

    பேராவூரணி வட்டம் ஆவணம் சரகம் செங்கம ங்கலம் கிராமத்தில் நவம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்பட உள்ள மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது.
    • முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் அசோக் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது. 28 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார். முகாமில் 36 மனுக்கள் பெறப்பட்டு உடனே தீர்வு காணப்பட்டது.

    • நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

    திருப்பூர்:

    தேசிய மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 8 அமா்வுகளான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் என மொத்தம் 3,477 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 652 வழக்குகளுக்கு ரூ.24.87 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

    திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா், மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளரும், கூடுதல் சாா்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, நீதித் துறை நடுவா்கள் முருகேசன், ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

    • எலிகள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.
    • எலி அதிகமாகிவிட்டாலே கிட்சன் நாசமாகிவிடும்.

    எலிகள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும். எலி அதிகமாகிவிட்டாலே கிட்சன் நாசமாகிவிடும். எலி, கரப்பான் பூச்சி போன்றவை வீட்டுக்குள் நுழைந்து விட்டாலே வீடு அசுத்தமாவதோடு பல்வேறு கொடிய நோய்க்கிருமிகளையும் அது பரப்பி விடும். குறிப்பாக எலிகள் பிளேக் வைரசை பரப்பும் ஆபத்து அதிகம். அதனால் முடிந்தவரை வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் வீட்டில் உள்ள எலிகளை உடனடியாக விரட்டுவதும் மிக அவசியம்.

    வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் பீநட் பட்டர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகப் பிடிக்கும். அதேபோல தான் பீநட் பட்டர் உங்களுடைய வீட்டில் உள்ள எலிகளுக்கும் பிடிக்கும்.

    பொதுவாக எலிகளை பிடிக்க வீட்டில் எலிப்பொறியில் தக்காளி அல்லது தேங்காய் துண்டு, கருவாடு ஆகியவற்றை வைப்பதுண்டு. ஆனால் எலிப்பொறியில் சிறிதளவு பீநட் பட்டர் தடவி, அதன் அருகிலும் சிறிது பீநட் பட்டரை உள்ளுக்குள் வைத்துவிடுங்கள். பீநட் பட்டரை சாப்பிட முயற்சிக்கும்போது அதில் உள்ள பிசுபிசுப்புத் தன்மையால் சிறிது நேரம் நன்கு அவற்றின் கால்கள் மாட்டிக் கொள்ளும். அடுத்த நாள் காலையில் எலிப்பொறியில் நிச்சயம் எலி மாட்டியிருக்கும்.

    எப்படி விரட்டுவது?

    புதினா

    புதினா இலைகள் எலிகளுக்கு எதிரி என்றே சொல்லலாம். புதினா இலைகளில் இருந்து வரும் நல்ல நறுமணம் எல்லோருக்கும் பிடிக்கும். எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் ஃபிரஷ்ஷான புதினா இலைகளைக் கசக்கி போட்டு வைக்கலாம். அதேபோல புதினா சேர்க்கப்பட்ட டூத்பேஸ்ட்டுகள் கடைகளில் நிறைய கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, எலி அடிக்கடி வந்து போகும் இடங்களில் சிறிய சிறிய உருண்டைகளாக தடவி வைக்கலாம். புதினாவின் வாசனையில் எலி மயங்கிவிடும்.

    பிரிஞ்சுஇலை

    பிரியாணி இலை என்று அழைக்கப்படுவது தான் பிரிஞ்சி இலை. இதில் நல்ல வாசனை இருக்கும். பிரியாணி, மாமிச உணவுகள் செய்யும்போது வாசனைக்காகவும் ஜீரண சக்திக்காகவும் சேர்த்துக் கொள்ளப்படும் வாசனை மிகுந்த இலை தான் இந்த பிரிஞ்சி இலை.

    இந்த இலைகளில் இருந்து வரும் நறுமணம் எலிகளுக்குப் பிடிக்காது. பிரிஞ்சி இலையை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்தோ அல்லது கொரகொரப்பான பொடியாகவோ செய்து எலி வரும் இடங்களில் ஒரு பேப்பரில் அல்லது தட்டில் போட்டு வைத்துவிட வேண்டும். எலிகள் அந்த இலைகளை நுகரும்போது மயங்கிவிடும். இதனால் எலி மறுபடியும் வராது.

    கம்பி வலை

    பொதுவாக வீட்டில் ஏதேனும் சில வழிகளை எலிகள் நுழைவதற்காகத் தேர்வு செய்து வைத்திருக்கும். அந்த வழித்தடங்களைக் கண்டு பிடித்துவிட்டால் போதும் நீங்கள் உங்களுக்கு சவால் விடும் எலிகளை மிஞ்சி விடலாம். மெல்லிய இரும்பு அல்லது எஃகினால் ஆன கம்பி வலைகள் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் எலிகள் நுழையும் ஓட்டை, வாஷ்பேஷன் டியூப் போன்ற இடங்களில் அடைத்து வைக்க வேண்டும். எலிகள் உள்ளே நுழையாமல் இருக்கும். சில சமயங்களில் நுழைய முயற்சி செய்யும் போது எலிகளின் கால்கள் வலைக்குள் மாட்டிக் கொள்ளும்.

    பேக்கிங் சோடா

    பேக்கிங் சோடா எல்லோருடைய வீடுகளிலும் வைத்திருப்பது மிகவும் நல்லது. இது பாத்திரங்கள் சுத்தம் செய்வது தொடங்கி, வீட்டை சுத்தப்படுத்த, கறைகளை நீக்க, சருமத்துக்கு பயன்படுத்த என பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுகின்றன. எலிகளை விரட்டுவதிலும் பேக்கிங் சோடாவிற்கு மிக முக்கியப் பங்குண்டு. எலிகள் அடிக்கடி வரும் இடங்களில் பேக்கிங் சோடா கரைசலை தெளித்து விட வேண்டும். பேக்கிங் சோடாவில் சிறிது வினிகர் சேர்த்தும் தெளிக்கலாம். அது இன்னும் விரைவான பலன்களைத் தரும்.

    • குளிச்சபட்டு ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்தது.
    • விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் குளிச்சபட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    குளிச்சபட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சியில் உள்ள வரவு செலவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் வாசு, ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் மணிகண்டன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் ,ஊரக வளர்ச்சித் துறை திட்ட பணியாளர் மாலா, அங்கன்வாடி விற்பனை யாளர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர் சசிகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களை நேரில் அழைத்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளித்து அதில் முறையான தீர்வு காணமுடியாத 74 மனுக்கள் மீது விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் 63 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 11 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் புதிதாக 24 புகார் மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், லஷ்மண குமார், மனோஜ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மனுதாரர்கள் பலரும் பங்கேற்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் நிலப்பிரச்சினை தொடர்பான சிறப்பு முகாமில் 13 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
    • சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன், பெரம்பலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், ராமர் மற்றும் ஏட்டு பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நிலப்பிரச்சினை தொடர்பாக பெறப்பட்ட மொத்தம் 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • கும்பகோணம் நீதிம ன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
    • மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தாமார்ட்டின் ஆணைப்படி, செயலாளரும் சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவரும் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான சண்முகப்பிரியா ஆகியோ ர்களின் அறிவுரைகளின் படி கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் முதல் அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்சி வசக்திவேல்கண்ணன் தலைமையில், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்க ள்மோகன்ராஜ், சசிகலா மற்றும் இரண்டாவது அமர்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி புவியரசு தலைமையில், வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்க ள்செந்தில்குமார், மங்களம்,

    அதேபோல் திருவிடை மருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் மாவட்ட குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் சிவபழனி, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் மதவன், பூமொழி ஆகியோரது பங்கேற்பில் மொத்தம் 1948 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்பநல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 232 வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது.

    அதில் 3 காசோலை மோசடி வழக்கில் மூலம் ரூ. 16,49,841, 24 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் ரூ.92,83,000, 44 கடன் வசூல் வழக்கின் மூலம் ரூ.70,91,000, 189 சிறு குற்ற வழக்குகள் மூலம் ரூ.18,52,300/-இதர 1 வழக்குகள் மூலம் ரூ.1,94,000 என 232 வழக்குகள் மூலம் மொத்தம் ரூ.1,11,26,841 வசூல் ஆகியது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் இளநிலை உதவியாளர்ராஜேஷ்குமார், தன்னார்வ சட்ட பணியா ளர்கள்ரா ஜேந்திரன், பாஸ்கரன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர். திருவொற்றியூர். பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப் பூண்டி மற்றும் மாதவரம் தாலுக்கா நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது.

    இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமை யியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 17 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

    திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.செல்வ சுந்தரி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேல்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன், மோட்டார் வாகன விபத்து சார்பு நீதிபதி இ.எம்.கே. யஸ்வந்த்ராவ் இங்கர்சால், முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் ஸ்டான்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித் துறை நடுவர்கள் முகாம்பிகை, செல்வஅரசி மற்றும் பவித்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், டேனியல் அரிதாஸ் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 6351 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3070 வழக்குகள் முடிக்கப்பட்டது. ரூ.19 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரத்து 829 தீர்வு காணப்பட்டது. நிலுவையில் அல்லாத 102 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 102 வழக்குகளும் முடிக்கப்பட்டு ரூ.75 லட்சத்து 45 ஆயிரத்து 431 தீர்வு காணப்பட்டது. 6453 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3172 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.20 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 260 இழப்பீடு தீர்வு காணப்பட்டது.

    பொன்னேரி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணசாமி, முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கரன் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் முன்னிலை வகித்தனர். இதில் நிலுவையில் இருந்த 512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 1 கோடியே 83 லட்சத்து 21ஆயிரத்து156 இழப்பீடு வழங்கபட்டன. பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நீரிழிவு நோய்க்கு தீர்வு காண கல்லீரல், கணைய கொழுப்பு அளவை குறைப்பது முக்கியம் என்றார்.
    • மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் எஸ்.ஸ்ரீதர் விளக்கமளித்தார்.

    மதுரை

    எந்திரத்தனமான இந்த உலகில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் என்பது அதிகரித்துவரும் ஒன்றாகும். இது இந்தியாவில் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இரண் டாம் வகை நீரிழிவு நோய்க்கான காரணங்கள் பல உள்ளன. இதில் மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகள் அடங்கும்.

    நீரழிவு நோய்க்கு மரபணு ஒரு முதன்மை காரணியாக இருந்தாலும், அதிகரித்து வரும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடல் பருமன் போன்றவை காரணிகளாக அமைகின்றன.

    நகரமயமாக்கல் மற்றும் மேற்கத்திய வாழ்க்கை முறையை பின்பற்றுதல், உடலுழைப்பு இல்லாமை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது 2021 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 74.2 மில்லி யனாக இருந்ததை விட கணிசமான அதிகரிப்பு என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையானது இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டுகிறது. மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நீரிழிவு நோயாளிகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளது. உலகளவில் இரண்டாம் வகை நீரிழிவு நோயுடன் வாழும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் இந்தியர் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். நீரிழிவு நோயாளிகளின் இந்த அதிகப்படியான எண்ணிக்கை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை களின் அவசரத் தேவையை குறிக்கிறது.

    நீரழிவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால் நீரிழிவு நோயை திரும்ப பெற முடியுமா என்பதை புரிந்து கொள்வதேயாகும். நீரழிவு நோயை திரும்ப பெறுதல் என்பது நிரந்தரமான சிகிச்சையை குறிக்கிறது என்பதால், "நீரிழிவு நோய் நிவாரணம்" என்பது ஒரு தற்காலிக தீர்வாக இருக்கலாம். நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.

    உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை போன்றவை ஒருவருக்கு மீண்டும் ஏற்படும் சூழ்நிலையில் நீரழிவு நோயின் தீவிரம் அதிகரிக்கலாம், இதனால் மீண்டும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

    இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான நிரந்தர தீர்வை புரிந்துகொள்ளுதல் முக்கியமானதாகும். நீரிழிவு நோயின் நிரந்தர தீர்வு என்பது ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற செயல்பாடுகள், தொடர் மருந்து சிகிச்சை அல்லது இன்சுலின் சிகிச்சை தேவையில்லாத இயல்பான அல்லது சாதாரண நிலைக்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் HbA1c ன் மதிப்பு (மூன்று மாத கால ரத்த சர்க்கரை அளவுகளின் மதிப்பு) குறைந்தது ஆறு மாதங்களுக்கு 6.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்போது, மட்டுமே இதை அடைய முடி யும்.

    கல்லீரல் மற்றும் கணைய கொழுப்பு அளவு குறைக்கப்படு வதே நிவாரணத்திற்கு உரிய வழி என்பதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. மேலும் குறைந்த கலோரி கொண்ட உணவை பின்பற்றுவதன் மூலம் 10-15 சதவீதம் அளவு எடை குறைப்புடன் இதை அடையலாம். நீரிழிவு நோயை நிர்வகிக்க எடை குறைப்பை பராமரிப்பது முக்கியம் என் பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முன்பு இழந்த எடையை மீண்டும் பெற்றுவிட்டால், நீரழிவு நோய் மீண்டும் வர மற்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஆனால் நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு என்பது அனைத்து நோயாளிகளுக்கும் பொருந்தாது. இரண்டாம் வகை நீரழிவு நோய் ஒரு குறுகிய காலத்திற்குள் கண்ட றியட்டிருந்தால், இது பெரும்பாலான நோயாளிக ளுக்கு இருக்கும். 6 ஆண்டுகளுக் கும் குறைவாக நீரிழிவு நோய் மருந்துகள் உண்ணும் நோயாளி கள், இரண்டாம் வகை நீரழிவு நோய் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தால், நிரந்தர தீர்வு நிலையை அடைவது கடினமாகும்.

    நீண்ட கால நீரிழிவு நோயின் பாதிப்புகளான இதய நோய், சிறுநீரக நோய், நரம்பு பாதிப்பு, பார்வைக் கோளாறுகள், மன நலப் பிரச்சினைகள் போன்ற நோய்வாய்ப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை உடைய நீரிழிவு நோயாளிகள் நிரந்தர தீர்வு காண்பது கடினம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் நிலையை திறம்பட நிர்வகிக்க நீரிழிவு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். சிகிச்சையளிக் கும் நீரிழிவு மருத்துவரிடம் நிரந்தர தீர்வு அடைவதற்கான சாத்தியக்கூறுகளை அறிய இது உதவும்.

    மேற்கண்ட தகவலை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு ராஜாஜி மருத்து வமனை அகச்சுரப்பியல் மற் றும் நீரிழிவு நோய் உயர் சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
    • சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற சாதார ணக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் முன்னிலை வகித்தனர்.

    இளநிலை எழுத்தர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    பாலமுருகன்(சுயே) மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாதபோது, தேர்வடக்கு வீதியில் புதிய மழைநீர் வடிகால் அவசிய மின்றி கட்டப்படுகிறது. ஈசானியத்தெருவில் கழிவுநீர் முழுவதும் வந்து தேங்கிநிற்கிறது.

    இதனால் கொசுதொல்லை அதிகமாக உள்ளது.கொசுமருந்து அடிப்பதில்லை என்றார்.

    நித்தியாதேவி(சுயே) : எனது வார்டில் அனைத்து சாலைகளும் பழுதாகியுள்ளது.சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நாகரத்தினம்(அதிமுக): எனது வார்டில் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    தேவதாஸ்(திமுக): எனது வார்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பலமாதங்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.இதனை சரிசெய்யவேண்டும்.

    சூரியபிரபா : எனது வார்டில் உள்ள இரண்டு நகர்களில் சாலை அமைக்கும் பணி துவங்கி பல மாதம் ஆகியும் முழுமை பெறவில்லை. குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீர் வீனாகி வருகிறது இதனை சரிசெய்யவேண்டும்.

    ராமு(திமுக) மீன்மார்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவேண்டும். கொள்ளிடமுக்கூட்டில் எரியாமல் உள்ள மின்விளக்கு களை சரிசெய்யவேண்டும் என்றார்.

    முபாரக்அலி(திமுக) பழையபேருந்துநிலையம் அருகேயுள்ள குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகிறது.இதற்கு பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டவேண்டும்.

    ராஜசேகர் :(தேமுதிக)எனது வார்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை யோரம்தேங்கி நிற்கிறது இதனை சீரமைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை விரைவில் சீரமைக்க விட்டால் கழிவு நீரில் இறங்கி போராட்டம் நடத்துவேன் என்றார்.

    ஜெயந்திபாபு(சுயே.) எனது வார்டில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி பலமாதங்க ளாக நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுதொல்லை அதிகரித்துள்ளது.சாலை களில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

    உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சாமிநாதன்(திமுக) : பழையபேருந்துநிலைய கட்டண கழிப்பறை கழிவுநீர் இரட்டை காளியம்மன் தெருவில் உள்ள கால்வாயில் விடப்படுகிறது.

    இதனால் அதிகளவு கொசுஉற்பத்தியாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இவ்வாறு கூட்டம் நடை பெற்றது.

    • இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது.
    • பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ,பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வட்டாரங்களில் பாலின வள மையம் ,வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்தியேகமான அமைப்பாக உருவாக்கப்பட்டு ள்ளது.

    இந்த மையம் தஞ்சாவூர் வட்டாரத்தில் வட்டார சேவை மையத்திலும், பட்டுக்கோட்டை வட்டா ரத்தில் ஆலடிக்கு முலை கிராம மையத்திலும் செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பாலின சேவை மையத்தி னை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் வட்டார பாலின சேவை மையத்தை 8754990178 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டார சேவை மையத்தை 6369849825 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×