search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு
    X

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

    தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு

    • சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 100 குற்றவியல் வழக்குகளும், 164 காசோலை மோசடி வழக்குகளும், 185 வங்கிக் கடன் வழக்குகளும், 112 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 86 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 405 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 991 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2,043 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

    இதில் 1060 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 270 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்கு களில் 850 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டது. இதில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.78 லட்சத்து 14 ஆயிரத்து 850 வரை வங்கிகளுக்கு வரவானது.

    இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள்

    செய்திருந்தனர்.

    Next Story
    ×