search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ujjain"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெட்ரா மகாகாளி கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக உஜ்ஜைன் மாநகராட்சி மேயர் முகேஷ் தட்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், தங்களின் கடைகளின் முன் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். உத்தரவைப் பின்பற்ற தவறும் பட்சத்தில் முதல் முறை 2000 ரூபாயும் 2 வது முறை 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து வருடம் முழுவதும் மகாகாளேஸ்வர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர் என்பது கவனிக்கத்தக்கது.

     

    இந்த உத்தரவு பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தொடங்கிவைத்துள்ள இந்த புதிய சர்ச்சை மக்கள் அதிகம் வருகை தரும் நகரங்களில் இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ற விமர்சனக்குரல்கள் எழுந்துள்ளன.

     

    • வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவில். அப்பகுதியில் மிகவம் பிரபலமான இந்த கோவிலில் ரீல்ஸ் எடுப்பதை தடுத்த காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவத்தன்று மகாகாலேஸ்வரர் கோவிலில் தடை செய்யப்ட்ட பகுதியில் பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதனை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமைடந்த பெண்கள் இருவரும் அங்கிருந்த வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    பாலக் மற்றும் பாரி என இரு பெண்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பெண் காவலர்கள் காயமுற்றனர். கோவிலில் பெண் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மஹாகல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

    • சிறுமி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
    • குற்றவாளி சார்பில் வாதாட வேண்டாம் என பார் கவுன்சில் வேண்டுகோள் வைத்துள்ளது

    சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை பரிதாபமாக தட்டியும் அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

    அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அந்நகர மக்கள் அவளுக்கு உதவ மறுப்பதும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதியாக, அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார்.

    காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    "நூற்றுக்கணக்கான பேரை விசாரணை செய்து, 700க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பரத் சோனி எனும் ஆட்டோ ஓட்டுனர் இந்த குற்றத்தை செய்திருப்பதை கண்டு பிடித்தோம். சுமார் 35 அதிகாரிகள் இந்த சைபர் விசாரணையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக தூக்கம் இல்லாமல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. குற்றவாளியை நெருங்கும் போது அவன் தப்பி ஓட முயன்றான். காவல்துறையினர் அவனை துரத்தி பிடித்தனர். அச்சிறுமிக்கு உதவ மறுத்தவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தனது மகனின் இந்த குற்றச்செயல் குறித்து, "என் மகன் தண்டிக்கப்பட வேண்டியவன். அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இது ஒரு வெட்கக்கேடான செயல். அவனை காணவோ, அவனை காப்பாற்றவோ நான் காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல போவதில்லை" என பரத் சோனியின் தந்தை ராஜு சோனி கூறினார்.

    "கோவில் நகரமான உஜ்ஜைன் நகரின் பெயரையே இச்சம்பவம் நாசப்படுத்தி விட்டது. நீதிமன்ற பார் கவுன்சிலை சேர்ந்த எந்த வழக்கறிஞரும் குற்றவாளி சார்பாக வாதாட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்," என உஜ்ஜைன் பார் கவுன்சில் தலைவர் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • ராகுல் சர்மா எனும் பண்டிட் இச்சிறுமியை காப்பாற்றி உதவி செய்தார்
    • வெற்று கோஷங்களில் அலறல்களை அடக்கி விடுகின்றனர் என்றார் ராகுல்

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன், ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் பரிதாபமாக உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை தட்டியும், அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

    அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அது மறுக்கப்படுவதும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது கருத்துக்களை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு எதிரான கொடூரமான குற்றம், அன்னை இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல; மாநில பா.ஜ.க. அரசாங்கமும் குற்றவாளிதான். நாட்டின் மகள்களை பாதுகாக்க இயலாத அரசாங்கம் நடைபெறுகிறது. மாநிலத்தில் நீதி இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை, உரிமைகள் இல்லை. இன்று மத்திய பிரதேசத்தின் மகள்களின் நிலை குறித்து முழு நாடும் வெட்கப்படுகிறது. ஆனால், மாநில தலைவருக்கும் நாட்டின் பிரதமருக்கும் இவை அவமானமாகவே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் உரைகள், வெற்று வாக்குறுதிகள் மற்றும் தவறான கோஷங்களுக்கிடையே நாட்டின் மகள்களின் அலறல்களை பா.ஜ.க.வினர் அடக்கிவிடுவார்கள்.

    இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

    • அறைகுறை ஆடையுடன் வீடு வீடாக உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை
    • பேச்சிலிருந்து அச்சிறுமி உ.பி.யை சேர்ந்தவளாக இருக்கலாம் என காவல் அதிகாரி தெரிவித்தார்

    இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள பெரிய மாநிலம், மத்திய பிரதேசம். இதன் தலைநகரம் போபால்.

    அம்மாநிலத்தின் ஷிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள பண்டைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகரம் உஜ்ஜைன். இந்நகரில் உள்ளது புகழ் பெற்ற தண்டி ஆசிரமம்.

    அந்த ஆசிரமத்தை அடுத்துள்ள பகுதியில் ஒரு 12 வயது சிறுமியை சிலர் கற்பழித்தனர். பின்பு அவளை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர். இதில் அச்சிறுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்பட்டது. குறைந்த அளவே ஆடைகள் உள்ள நிலையில் அவள் நிராதரவாக விடப்பட்டு, தானாக எழுந்து நகருக்குள் வீடுகள் உள்ள பகுதியில் வீடு வீடாக உதவி கேட்டாள். ஆனால் யாருமே குறைந்த ஆடைகளுடனும் ரத்த போக்குடன் அவளை கண்டாலும் உதவி செய்ய முன் வரவில்லை; மாறாக அவளை விரட்டி விட்டனர்.

    பிறகு வேறு சிலர் அவளின் பரிதாப நிலையை கண்டு அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக அம்மாநிலத்தின் இந்தோர் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

    "அச்சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டு பிடிக்க ஒரு சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. அச்சிறுமியின் பேச்சிலிருந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்தவள் போல் தெரிகிறது." என இது குறித்து காவல்துறை உயரதிகாரி சச்சின் ஷர்மா தெரிவித்தார்.

    அச்சிறுமி யார் என்பதும், என்ன நடந்தது என்பதும் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சிறார் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ம.பி. காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே அந்த சிறுமி தாக்குதலுக்கு உள்ளான பிறகு பரிதாபமாக வீடு வீடாக உதவி கேட்டு சென்றதும் அவளுக்கு உதவ மறுத்து குடியிருப்புவாசிகள் விரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரில் பூ வியாபாரத்தில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் உட்பட 4 பேரை வாலிபர் கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. #Ujjain
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளேஷ்வர் கோவில் உள்ளது. இந்த கோவில் வாசலில் இரண்டு வாலிபர்கள் பூ வியாபாரம் செய்தனர். வியாபாரத்தில் இருவருக்கும் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில், நேற்று ஏற்பட்ட மோதலில் இருவரும் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் கோபமடைந்த வாலிபர் பெண்கள் என்று கூட பாராமல் கட்டையை கொண்டு தாக்கினார். யார் வந்து தடுத்தாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சண்டையிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Ujjain
    ×