search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடுரோட்டில் பெண்கள் உட்பட 4 பேரை கொடூரமாக தாக்கிய வாலிபர் - வைரலாகும் வீடியோ
    X

    நடுரோட்டில் பெண்கள் உட்பட 4 பேரை கொடூரமாக தாக்கிய வாலிபர் - வைரலாகும் வீடியோ

    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரில் பூ வியாபாரத்தில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் உட்பட 4 பேரை வாலிபர் கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. #Ujjain
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளேஷ்வர் கோவில் உள்ளது. இந்த கோவில் வாசலில் இரண்டு வாலிபர்கள் பூ வியாபாரம் செய்தனர். வியாபாரத்தில் இருவருக்கும் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில், நேற்று ஏற்பட்ட மோதலில் இருவரும் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் கோபமடைந்த வாலிபர் பெண்கள் என்று கூட பாராமல் கட்டையை கொண்டு தாக்கினார். யார் வந்து தடுத்தாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சண்டையிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Ujjain
    Next Story
    ×