search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minor assault"

    • அறைகுறை ஆடையுடன் வீடு வீடாக உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை
    • பேச்சிலிருந்து அச்சிறுமி உ.பி.யை சேர்ந்தவளாக இருக்கலாம் என காவல் அதிகாரி தெரிவித்தார்

    இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள பெரிய மாநிலம், மத்திய பிரதேசம். இதன் தலைநகரம் போபால்.

    அம்மாநிலத்தின் ஷிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள பண்டைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகரம் உஜ்ஜைன். இந்நகரில் உள்ளது புகழ் பெற்ற தண்டி ஆசிரமம்.

    அந்த ஆசிரமத்தை அடுத்துள்ள பகுதியில் ஒரு 12 வயது சிறுமியை சிலர் கற்பழித்தனர். பின்பு அவளை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர். இதில் அச்சிறுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்பட்டது. குறைந்த அளவே ஆடைகள் உள்ள நிலையில் அவள் நிராதரவாக விடப்பட்டு, தானாக எழுந்து நகருக்குள் வீடுகள் உள்ள பகுதியில் வீடு வீடாக உதவி கேட்டாள். ஆனால் யாருமே குறைந்த ஆடைகளுடனும் ரத்த போக்குடன் அவளை கண்டாலும் உதவி செய்ய முன் வரவில்லை; மாறாக அவளை விரட்டி விட்டனர்.

    பிறகு வேறு சிலர் அவளின் பரிதாப நிலையை கண்டு அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக அம்மாநிலத்தின் இந்தோர் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

    "அச்சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டு பிடிக்க ஒரு சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. அச்சிறுமியின் பேச்சிலிருந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்தவள் போல் தெரிகிறது." என இது குறித்து காவல்துறை உயரதிகாரி சச்சின் ஷர்மா தெரிவித்தார்.

    அச்சிறுமி யார் என்பதும், என்ன நடந்தது என்பதும் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சிறார் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ம.பி. காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே அந்த சிறுமி தாக்குதலுக்கு உள்ளான பிறகு பரிதாபமாக வீடு வீடாக உதவி கேட்டு சென்றதும் அவளுக்கு உதவ மறுத்து குடியிருப்புவாசிகள் விரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    ×