search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanwar Yatra"

    • லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்களை முழங்கியபடி கங்கை நதியில் புனித நீர் சேகரிக்க நடந்து சென்று வருகின்றனர்.
    • போலீசார் கல்வீசிய கும்பல் மீது தடியடி நடத்தினார்கள்.

    போபால்:

    வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் கன்வர் யாத்திரை மேற்கொண்டு உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பாடல்களை முழங்கியபடி கங்கை நதியில் புனித நீர் சேகரிக்க நடந்து சென்று வருகின்றனர்.

    மத்தியபிரதேச மாநிலம் கந்த்வா பகுதியில் உள்ள கோவிலுக்கு நேற்று இரவு கன்வர் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது சிலர் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் தாசில்தார் வாகனத்தையும் அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் கல்வீசிய கும்பல் மீது தடியடி நடத்தினார்கள். இந்த கல்வீச்சில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • கன்வார் யாத்திரையானது வட இந்தியாவில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் மிக பிரபலமான யாத்திரையாகும்.
    • யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு.

    உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கன்வார் யாத்திரை பக்தர்கள் 5 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

    ஹரித்வாரில் இருந்து புனித கங்கை நீரை எடுத்துகொண்டு புறப்பட்ட பக்தர்கள் நேற்று இரவு மீரட் மாவட்டம் ராலி சவுகான் கிராமத்தில் வந்தபோது அவர்களின் வாகனம் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த மின்தாக்குதலுக்கு ஆளானதும் வாகனம் தாறுமாறாக ஓடி பக்தர்கள் மீதும் மோதியது. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலல் ஈடுபட்டனர். கன்வார் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    கன்வார் யாத்ரா:

    கன்வார் யாத்திரையானது வட இந்தியாவில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் மிகப்பெரிய யாத்திரையாகும். உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சிவ பக்தர்கள் இதில் பங்கேற்கிறார்கள். கன்வாரியாக்கள் என்று அழைக்கப்படும் இந்த யாத்ரீகர்கள், காவடி ஏந்தி ஹரித்துவார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை சேமித்து, அதனை தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிசேகம் செய்வார்கள்.

    • கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
    • கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    வட மாநிலங்களில் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு இறுதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கன்வார் யாத்திரை கடந்த 4-ந்தேதி தொடங்கி உள்ளது. இந்த யாத்திரையின் போது சிவ பக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு சமர்ப்பிப்பதே முக்கிய நிகழ்வாகும்.

    இதற்காக சிவ பக்தர்கள் காவி உடை அணிந்து தோள்களில் மூங்கிலால் ஆன கம்புடன் புனித நீரை கூடத்தில் கட்டி தொங்க விட்டு பாதயாத்திரையாக நடந்தே புனித தலங்களுக்கு சென்று சிவ பெருமானுக்கு நீரை அர்ப்பணிப்பார்கள்.

    இந்நிலையில் ஹரித்துவாரில் கன்வார் யாத்திரையின் போது ஒரு இளைஞர் தனது தாயை தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 11 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டதில் இருந்து 42 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1800-க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ×