கன்வார் யாத்திரை: மின்சாரம் தாக்கி 9 பக்தர்கள் பலி

வடமாநிலங்களில் புகழ் பெற்றது கன்வார் யாத்திரை.3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர்.
கன்வார் யாத்திரை: மின்சாரம் தாக்கி 9 பக்தர்கள் பலி
Published on

வடமாநிலங்களில் புகழ் பெற்ற கன்வார் யாத்திரை நடந்து வருகிறது. நேற்று கன்வார் பக்தர்கள் பீகாரில் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில் ஜலஅபிஷேகம் செய்வதற்காக கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

வைசாலி மாவட்டத்தில் அந்த யாத்திரை சென்று கொண்டிருந்த போது சுல்தான்பூர் என்ற கிராமத்தில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. மின்சார வயர் ஒரு காரின் மீது விழுந்ததில் அந்த காரில் இருந்த 9 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து வைசாலி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com