search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perfume"

    • வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை சுத்தம் செய்ய வேண்டும்.
    • தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

    நம்முடைய வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது நமக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.

    ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தை இல்லத்தரசிகள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆர்வம் இருப்பவர்கள் இதை சுயதொழிலாகவும் செய்யலாம். தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பதற்கு பெரிய அளவு முதலீடோ, அதிக பணியாளர்களோ தேவை இல்லை. இதற்கான மூலப்பொருட்கள் ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மினரல் வாட்டர்- 4 லிட்டர்

    பேக்கிங் சோடா - 100 கிராம்

    சிட்ரிக் அமிலம் - 50 கிராம்

    வினிகர் - 250 மி.லி.

    சோடியம் ஹைப்போ குளோரைடு - 500 மிலி,

    சோடியம் லாரில் ஈதர் சல்பேட்- 100 .46.

    லெமன் கிராஸ் அரோமா எண்ணெய்- 25 மிலி

    செய்முறை

    பிளாஸ்டிக் வாளியில் மினரல் வாட்டரை ஊற்றவும். பேக்கிங் சோடாவை சிறிது சிறிதாக அதில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் சோடியம் லாரில் ஈதர் சல்பேட் திரவத்தை ஊற்றி கலக்க வேண்டும். இது தண்ணீர் நுரைப்பதற்கும், தரையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கும் உதவும். அடுத்ததாக, சிட்ரிக் அமிலத்தை சிறிது சிறிதாக இந்த கரைசலில் ஊற்றி கலக்க வேண்டும். இப்போது கரைசல் நுரைத்து பொங்கத் தொடங்கும். எனவே நிதானமாகவும், கவனமாகவும் கலக்க வேண்டும்.

    நுரை அடங்கியவுடன் வினிகர், சோடியம் ஹைப்போ குளோரைடு, லெமன் கிராஸ் அரோமா எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கரைசலில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நன்றாக முடி 24 மணி நேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். பின்னர் மூடியைத் திறந்து திரவத்தை வடிகட்டி சுத்தமான, ஈரமில்லாத பாட்டில்களில் ஊற்றி வைக்கலாம்.

    தரை துடைக்கும்போது ஒரு வாளி நீருக்கு சில சொட்டுகள் வீதம் இந்த திரவத்தை ஊற்றி கலக்கினால் போதுமானது. தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரை செலவாகும். இது குறைந்த செலவில் தரமாக இருப்பதோடு, சுயதொழிலாக மேற்கொண்டால் லாபம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வாசனை மற்றும் நிறத்துக்கு பல்வேறு பொருட்களை கலந்து கொள்ளலாம்.

    • வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு.
    • வாசனை எண்ணெய்கள் இயற்கையான வாசனையை வழங்குகின்றன.

    இன்றைய காலகட்டத்தில் வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. தண்ணீர். எண்ணெய் மற்றும் ஆல்கஹால் என அதில் கலக்கப்படும் மூலப்பொருட்களின் அடிப்படையில் வாசனை திரவியங்களை வகைப்படுத்தலாம்.

    இந்த கலவைகளின் செறிவைப் பொறுத்து நறுமணம் உடலில் நீடிக்கும் நேரத்தைக் கணக்கிடலாம். ஒவ்வொரு வாசனை திரவிய வகைகளும், அதில் சேர்க்கப்படுகின்ற 'எசன்ஷியல் ஆயில்' என்று சொல்லப்படும் எண்ணெய்யின் செறிவைப் பொறுத்து மாறுபடும். அதைப்பற்றிய தகவல்கள் இங்கே...

    பெர்ஃபியூம்:

    இந்த நறுமணக் கலவையில் 20 முதல் 30 சதவீதம் வரை, அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு கலந்திருக்கும். இது அதிக செறிவு கொண்டது. எண்ணெய்களின் அதிக செறிவு காரணமாக மற்ற எல்லா வகைகளை காட்டிலும் இது விலை உயர்ந்தது. இதன் நறுமணம் 24 மணி நேரம் வரை நீடிக்கும். பெர்பியூமில் குறைந்த அளவு ஆல்கஹால் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

    ஈவ் டி பொபியூம்:

    15 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனை சாறு கலந்திருக்கும் நறுமணக் கலவை இதுவாகும். இந்த கலவையில் சற்றே அதிக ஆல்கஹால் மற்றும் நீர் கலந்திருக்கும். இது 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும். ஆல்கஹால் கலப்பு சற்று அதிகமாக இருந்தாலும், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற நறுமணக்கலவை இதுவாகும்.

    ஈவ் டி டாய்லெட்:

    இந்த வாசனை திரவிய வகையானது 5 முதல் 20 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது நறுமணச்சாறு கொண்டது. இதன் வாசம் 2 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும். இது உடலையும், கூந்தலையும் நறுமணப்படுத்த பயன்படுகிறது.

    ஈவ் டி கொலோன்:

    ஆண்களுக்கான வாசனை திரவியமாக கருதப்படும் இதில், 2 முதல் 4 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய்கள் அல்லது வாசனைச்சாறு நிறைந்திருக்கும். இது 2 மணி நேரம் வரை நீடிக்கும். விலையும் மலிவானது.

    ஈவ் பிரைஸ்:

    இந்த வகை வாசனை திரவியமானது. 1 முதல் 3 சதவீதம் வரை அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனைச் சாறு கொண்டது. தண்ணீர்தான் இதன் முக்கிய மூலப்பொருள். இது ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். இதில் குறைந்த அளவு ஆல்கஹால் கலக்கப்படும்.

    வாசனை எண்ணெய்கள்:

    உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்க உதவுபவையே வாசனை எண்ணெய்கள், ஆல்கஹால் அடிப்படையிலான வாசனை திரவியங்களை விட இவை அதிக சக்தி வாய்ந்த, இயற்கையான வாசனையை வழங்குகின்றன.

    12 ஆண்டுகள் வரை இதிலிருந்து பூக்கள் பறிக்கலாம்.

    உடுமலை:

    வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான ரோஜா உள்ளிட்ட மலர்கள் அதிகளவு உத்தரகாண்ட் மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அங்கு உள்ளதை போலவே கேரளா மாநிலம், மறையூர் அருகிலுள்ள காந்தலூர், கொழுந்த மலை பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் வாசனை திரவியம் உற்பத்திக்காக ரோஜா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு பிங்க், மெரூன், ஸ்பானிஷ் யெல்லோ, ரூபி போன்ற வகையான ரோஜா செடிகள், உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து வாங்கி வரப்படுகிறது. அதே குளிர் சீதோஷ்ணம் நிலவும் காந்தலூர் மலைப்பகுதியில் சாகுபடி செய்து தினமும் 500 கிலோ ரோஜா பூக்கள் அறுவடை செய்து பெங்களூரு, வாசனை திரவிய உற்பத்தி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    வாசனை திரவியங்களுக்கான மலர் சாகுபடி முதல் முறையாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயி ஜான் பிரிட்டோ கூறியதாவது: -

    பெரும்பாலும்வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்களுக்கு தேவையான மலர் வகைகள், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அங்கு சென்று இதற்கான பயிற்சி பெற்று வந்தேன். அங்கிருந்து வாசனை அதிகம் உள்ள நான்கு வகையான ரோஜா செடிகள், 30 ஆயிரம் வாங்கி வந்து நடவு செய்யப்பட்டுள்ளது. நடவு செய்த 3 மாதத்தில் பலன் கொடுக்க துவங்கியுள்ளது.

    12 ஆண்டுகள் வரை இதிலிருந்து பூக்கள் பறிக்கலாம். தினமும் சராசரியாக 500 கிலோ மலர்கள் கிடைக்கின்றன. பறித்தவுடன் பெங்களூரு நிறுவனத்தின் பிரீஷர் வாகனத்தில் வந்து கிலோ 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொள்கின்றனர். 80 கிலோ பூவிலிருந்து ஒரு லிட்டர் வாசனை திரவியம் அங்கு உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு லிட்டர் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது சென்ட், அழகு சாதன பொருட்கள், ஆயுர்வேத மருந்துகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கேரளா மாநிலத்தில் முதல் முறையாக வாசனை திரவியத்திற்காக, மலர் சாகுபடி முதலில், இப்பகுதியில் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஜான் பிரிட்டோ தெரிவித்தார்.

    தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    வாசனைத் திரவியங்கள் ஒருவித வசீகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்காலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும்.

    சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக இருக்கும். அதன் வாசத்தின் தூரம் மிகவும் நீண்டதாக இருக்கும். பலருக்கு அதீத வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலைவலி போன்றவை வரும். அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத்தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தால் அனைவருக்கும் நல்லது.

    வாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.



    * கடைக்கு வெளியே வாசனையை பரிசோதிக்க மறக்கவேண்டாம், கடையின் ஏசி மற்றும் வாசனையின் தன்மை இருக்காது. இது உண்மையான மணத்தை சொல்லிவிடும்.

    * கோடையில் கலப்படமற்ற வாசனை திரவியத்தை தேர்வு செய்வது அவசியம். அது நீண்ட நேரம் வியர்வையையும் தாண்டி நிற்கும்.

    * இலகுவான வாசனையை விரும்பினால், பூக்களின் நறுமணத்தை எடுத்துக்கொள்ளலாம். புதினா அல்லது 'சிட்ரஸ்' நறுமணங்களை தேர்வு செய்யலாம். இது புத்துணர்ச்சியூட்டும்.. அதிக நறுமண தொனியை விரும்பினால், சாண்ட்லவுட் (சந்தனம்) போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

    * வெப்பத்தினால் தடிப்புகள் மற்றும் எரிச்சலுக்கு நம்மை மிகவும் எளிதில் ஆளாக்கிவிடும். எனவே பெர்பியூமின் உள்ளடக்கங்களை சருமத்திற்கு தீங்கு இல்லாதவையா என்று சரிபார்ப்பது முக்கியம்.

    * உங்களுக்காக சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் வெவ்வேறு விதமான வாசனை திரவியங்களை ஒப்பிட்டுப் பார்த்தீர்களா என்பதை உறுதிப்படுத்தவும். 
    ×