search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபசாரம்"

    • விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம்.
    • தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான்களின் உச்ச தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை. அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றார்.

    • ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்தது
    • தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடும் பணி தீவிரம்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு புகார் வந்தது. அதன்பேரில் அவர் மாவட்ட த்தில் உள்ள அனை த்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோத னை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோத னை நடத்தப்பட்டது.

    அப்போது ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மசாஜ் சென்டர் மேலாளரான ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 41) என்பவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மசாஜ் சென்டரில் இருந்து வெளி மாநிலங்களை சேர்ந்த 4 பெண்கள், திருப்பூர் மாவ ட்டத்தை சேர்ந்த ஒரு பெண், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் என 20 வயது முதல் 26 வயதுடைய 6 இளம்பெ ண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    மசாஜ் சென்டரின் உரிமையாளர் கோவையைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர் போல் சென்ற ஒரு வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தி 6 பெண்களை மீட்டுள்ளனர். இதைப்போல் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் மசாஜ் சென்டர்களிலும் இனி வரும் காலங்களில் தீவிர சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    முதலில் போதை கும்பலை ஒழிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்ய ப்பட்டனர். அதைத்தொடர்ந்து கள்ளச்சாரையும் விற்பவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதி மற்றும் போலீசார் அதே பகுதி எஸ்.பி.ஐ காலனியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் இருவரை மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், பகுதியில் விபசாரம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதி மற்றும் போலீசார் அதே பகுதி எஸ்.பி.ஐ காலனியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் "டிப்டாப்" உடையில் நின்று கொண்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதியிடம் சென்று "சார் யாருக்காகவோ காத்து நிற்பதாக தெரிகிறது" என்றபடி நைசாக பேச்சுக் கொடுத்தார். மேலும் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் 2பேர் தங்கி உள்ளனர். அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கட்டணம் என்று கூறினார். உடனடியாக ஒ.கே என்று கூறிய சப்-இன்ஸ்பெக்டர் அழகிகளை நேரில் பார்த்த பின்னர் கட்டண தொகையை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

    இதையடுத்து வாடிக்கையாளர் கிடைத்து விட்டார் என்று நினைத்த வாலிபர் உடன் வருவது போலீஸ் என்று தெரியாமல் சப்- இன்ஸ்பெக்டர் இளம் வழுதியை அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்து சென்றார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த மற்ற போலீசார் வாலிபரை மடக்கி பிடித்தனர். அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வருவது சரவணன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் இருவரையும் மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    • போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், விபசாரம் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • தலைமறைவாகி விட்ட ஸ்பா உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள ஒரு 'ஸ்பா'வில், பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவதாக, ஓசூர் அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று மாலை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், விபசாரம் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பா மேலாளர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்ஷாத் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட ஸ்பா உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே ஜனார்த்தனன் (வயது 25) என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். அங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த மசாஜ் சென்டரை கண்காணித்து வந்தனர். இதில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர் ஜனார்த்தனனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 5 இளம்பெண்களை போலீசார் மீட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திவ்யா உள்பட 2 பேரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல அதிர்ச்ச தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக விபசாரம் அதிக அளவில் கொடி கட்டி பறப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரபரப்பு புகார்கள் சென்றது .

    இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் போலீசார் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதையடுத்து அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் விபசாரம் நடப்பதாக கூறப்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பெண்கள் 20 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதில் முக்கிய நபர்களான சேலம் மாவட்டம் பூலாவரி ஏர்வாடி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (31) மற்றும் சேலம் ஜாகீர் அம்மாபாளைம் பொன்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா (36 ) ஆகியோர் ஜாகீர் அம்மாபாளையம் மற்றும் காசக்காரனூர் பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடந்த 20-ந் தேதி திருவாக்கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்த சிலரிடம் நெடுஞ்சாலை நகரில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று தியாகராஜன் அழைத்து உள்ளார்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் தியாகராஜன் மற்றும் திவ்யா உள்பட சிலர் சேர்ந்து அந்த பகுதியில் 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யபபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் விபசார தொழிலில் மூலகாரணமாக செயல்பட்ட தியாகராஜன் மற்றும் திவ்யா ஆகியோர் அப்பாவி பெண்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறி சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள 2 பேரிடமும் அதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

    இதற்கிடையே போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு-

    ஓமலூர் பகுதியை சேர்ந்த திவ்யா சுகாதாரத்துறையின் கீழ் அரசு ஆஸ்பத்திரிகளில் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் தற்காலிக ஆலோசாகராக பணி புரிந்து உள்ளார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அவர் பின்னர் ஓமலூருக்கு இடமாறுதலாகி சென்றார்.

    அப்போது விபசாரத்தில் ஈடுபட்டு ஆஸ்பத்திரிக்கு கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

    மேலும் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அதற்கு தேவையான மருந்து மாத்திரைகளை ரத்தத்தை பரிசோதனை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும் எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம் என்பதால் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இந்த மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

    அதன்படி கவுன்சிலிங்குக்கு வந்த ஏராளமான பெண்களின்அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அப்போது அவர்களிடம் இனிக்க இனிக்க பேசும் திவ்யா நான் சொல்வதை கேட்டால் நீங்கள் ஏழ்மையில் இருந்து மீண்டு பல லட்சம் சம்பாதிக்கலாம், வசதியாக கார், பங்களா என்று வாழலாம் என்று கூறி மயக்கி உள்ளார்.

    இதனை நம்பிய பெண்களை தனது வலையில் வீழ்த்தி புரோக்கர்கள் மூலம் முக்கிய நபர்களுக்கு அனுப்பி உள்ளார். அதன்படி சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி என பாலியல் தொழில் தொடர்பான கவுன்சிலிங்கிற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களை 6 மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது.

    மேலும் வறுமையில் வாடிய கர்ப்பிணி பெண்களின் போட்டோக்களை தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட வசதி படைத்தவர்களுக்கு ஆன்லைனில் அனுப்பி தங்களது வலையில் வீழ்த்தி தொழிலை விரிவு படுத்தி உள்ளார். இதன் மூலம் திவ்யா மற்றும் அவரது கூட்டாளிகள் பல லட்சங்களை அள்ளியதும் இதன் மூலம் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது. இதற்கு அவரது கணவரான மாநகராட்சி ஊழியரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ஒரே நாளில் பலருக்கு ஒரு பெண்ணை அனுப்பி அதிக அளவில் பணத்தை சம்பாதித்து விட்டு ஒரு சிறிய தொகையை மட்டும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வழங்கி வந்ததும் தெரிய வந்தது. தொடர் விசாரணை மூலம் இந்த சம்பவங்கள் அறிந்த போலீசாரே திகைத்து உள்ளனர். இதையடுத்து தான் அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் திவ்யா உள்பட 2 பேரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • பெருந்துறையில் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது காரில் வேகமாக சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • இருவரும்தான் இளம்பெண்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது என தெரியவந்தது.

    பெருந்துறை:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் பெருந்துறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது குழந்தையுடன் ஈரோடு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக பெருந்துறை-குன்னத்தூர் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக காரில் வந்த 2 பேர் அந்த இளம்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளம்பெண் மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூறியுள்ளார்.

    உடனே அவர்கள் மருந்துவமனைக்கு நாங்கள் அழைத்து செல்கிறோம் என கூறி அந்த இளம்பெண்ணை காரில் ஏற்றியுள்ளனர். காரில் ஏறிய அந்த பெண்ணிடம் எங்களுக்கு நிறைய பெரிய மனிதர்களை தெரியும். அவர்களுடன் நீ சந்தோசமாக இருந்தால் உனக்கு நிறைய பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர். உடனே அந்த இளம்பெண் தப்பித்து செல்ல முயன்றார். அப்போது அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளனர். உடனே இளம்பெண் கூச்சல் போட்டதில் அவர்கள் காரில் இருந்து தப்பி ஓடினர்.

    பின்னர் இதுகுறித்து அந்த பெண் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறையில் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது காரில் வேகமாக சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் சித்தோடு பகுதியை சேர்ந்த வினோத் (35) என்பதும், பெருந்துறை அடுத்த ஜீவா செட் பகுதியை சேர்ந்த செல்லமுத்து (46) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும்தான் இளம்பெண்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது என தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
    • இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி பேஸ் 16-ல், மாருதி நகர் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து, இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    • போலீசார் பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வெங்கடாசலம் (வயது56), அவரது மனைவி ஆகிய 2 பேரும் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே அந்த பகுதியில் சோதனை செய்ததில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது56), அவரது மனைவி ஆகிய 2 பேரும் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. உடனே கணவன்-மனைவி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • 3 பெண்கள், 3 வாலிபர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர்.
    • மீட்கப்பட்ட 2 பெண்கள் கோவை பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 3 பெண்கள், 3 வாலிபர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண் மற்றும் 3 வாலிபர்கள் விபசார புரோக்கர்களாக செயல்பட்டதும், மற்ற 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து விபசார புரோக்கர்களான சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தாலுகா காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சத்யா என்கின்ற சேர்மகனி (வயது 31), ஊத்துக்குளி ஹவுஸிங் யூனிட் டாலர் சிட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்கின்ற செந்தில்குமார் (41), நாகப்பட்டினம் பிரிஞ்சி மூளை லெனின் தெரு பகுதியை சேர்ந்த அகிலன் (23), அதே பகுதியை சேர்ந்த விஸ்வந்த் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.மீட்கப்பட்ட 2 பெண்கள் கோவை பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

    • வள்ளியூர் அருகே கும்பிளம்பாடு வேம்படி தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் ஒரு பெண் இருந்தார்.
    • கோழிப்பண்ணை உரிமையாளரான செல்லப்பா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை சுபேதார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 66). இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அப்பகுதியில் உள்ளது. கடந்த 6 மாத காலமாக பல்வேறு காரணங்களால் கோழிப்பண்ணையை அவர் நடத்தவில்லை.

    இந்நிலையில் கோழிப்பண்ணை கட்டிடத்தில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக சாம்பவர் வடகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது அங்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கும்பிளம்பாடு வேம்படி தெருவை சேர்ந்த செந்தில்குமார்(32) என்பவருடன் ஒரு பெண் இருந்தார். உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் கோழிப்பண்ணை உரிமையாளரான செல்லப்பா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • 2 பேர் கைது
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாச்சல் பகுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

    விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண் கள் உள்பட 5 பேரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநி லத்தை சேர்ந்த 43 வயது பெண், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், ஆம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண் என தெரிய வந்தது.

    இவர்களை வைத்து விபசார தொழில் செய்தது ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் தீபக் (வயது 20) மற்றும் சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி மேனகா (29), ராதிகா, ராகுல் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீபக் மற்றும் மேனகா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராதிகா, ராகுல் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்களை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை காப்பகத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×