search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people arrested"

    • கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஜெய தீபன் என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.
    • 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு கஞ்சா எனும் போதை பொருளை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சதீஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

    இதேபோல் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் ஜெய தீபன் (28) என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓட்டலில் 3 பேர் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.
    • புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் காசிபாண்டியன்(61). இவர் அதேபகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு விக்னேஷ்(21), வாஞ்சிநாதன்(22), ரவீந்திரன்(25) ஆகிய 3 பேரும் அடிக்கடி வந்து செல்வார்கள்.

    தீபாவளி பண்டிகையின்போது பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டியுள்ளனர். மேலும் சம்பவத்தன்று 3 பேரும் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

    நாங்கள் அடிக்கடி வருவோம். எங்களுக்கு உணவு தரவேண்டும். பணம் கேட்ககூடாது என்றனர். மேலும் காசிபாண்டியனிடம் மதுகுடிக்க ரூ.1000 கேட்டனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • வேடசந்தூர் வந்ததும் கண்டக்டர் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.
    • அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்டக்டர் மீது மோதுவது போல வந்தனர்.

    வேடசந்தூர்:

    ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை ஆயக்குடியைச் சேர்ந்த கதிரேசன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக சாமியார் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (29) என்பவர் இருந்தார். வேடசந்தூர் வந்ததும் கண்டக்டர் செல்வராஜ் பஸ்சில் இருந்து இறங்கி அங்கிருந்த டீக்கடைக்கு நடந்து சென்றார்.அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் செல்வராஜ் மீது மோதுவது போல வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர் சுதாரித்து நகர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதனால் ஆட்டோ டிரைவருக்கும், செல்வராஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அந்த கும்பல் செல்வராஜை கடுமையாக தாக்கி விட்டு சென்றனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதனையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஒரு கும்பல் அந்த தனியார் பஸ்சை வழி மறித்து தாக்கினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழ இறங்கினார். இந்த தாக்குதலில் பஸ்சின் பக்க வாட்டு கண்ணாடிகள் உடைந்த நிலையில் 3 பேர் காயமடைந்தனர்.

    இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காளனம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவீன்பாரதி (20), வேடசந்தூரைச் சேர்ந்த விக்ரம் (21). டி.அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கருணாகரன் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • கைலாசபட்டி பகுதியில் தென்கரை போலீசார் ேராந்து சென்றனர்.
    • கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் தென்கரை போலீசார் ேராந்து சென்றனர்.

    அப்போது 3 பேர் பைக்குடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது கஞ்சா விற்பனை செய்வதற்காக பைக்கில் வந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சிவதேசிங்கு (வயது25) மற்றும் கொடைக்கானலை சேர்ந்த பாபு (25), சிவசண்முகம் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
    • கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவபிரகாஷ் (வயது31) மற்றும் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் ஜெயச்சந்திரன் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆண்டிபட்டி போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்ட போது ராஜகோபாலன்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் நாகராஜ் (21) பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமை யில்,சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுபாண்டி, பாலசுப்பிர மணியன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் வினோத் கண்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன், ரவி ச்சந்திரன், ஜெய ச்சந்திரன், செந்தில், சிவபெருமாள் ஆகியோர் கொண்ட போலீ சார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சோலைக்காடு பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்தனர்.போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர்.போலீசார் தப்பி ஓடிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் காலாடிபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 31),முருகன் (43),வீரக்கல் குரும்ப பட்டியைச் சேர்ந்த பிரபு (34) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்த தும் தெரியவந்தது.

    இதை யடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்து (58), ராதா(38) ஆகிய 2 பெண்களை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலிக்குண்டு விளையாடும் போது தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டது.
    • தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் தெற்கு தெருவை சேர்ந்த பவித்ரன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோலிக்குண்டு விளையாடும் போது தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று பவித்ரன் மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்து, வசந்த், ரிஷிக்கேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கணேசனை கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

    படுகாயம் அடைந்த கணேசன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ரன், வசந்த், ரிஷிக்கேஸ்வரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெவ்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றபோது 3 பேரை பிடிபட்டனர்.
    • அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி போலீசார் காட்டுபத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கம்பம் வடக்குப்பட்டியை சேர்ந்த யோக்கியன் (58) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை போலீசார் பண்ணைபுரம்-பல்லவராயன்பட்டி சாலை யில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டி ல்களை பறிமுதல் செய்த னர். வருசநாடு போலீசார் முறுக்கோடை பகுதியில் ரோந்து சென்றபோது மதுவிற்ற பாண்டி என்ப வரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.
    • இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சில்லமரத்து ப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது52). இவரது தோட்டத்தில் இரும்பு கம்பிகள் வைத்தி ருந்தார்.

    அதனை ஜீவா காலனியை சேர்ந்த பூபதி (23), பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேஸ் (22), மதுரை வீரன் தெருவை சேர்ந்த பாண்டிமுருகன் (23) ஆகியோர் திருடிச் சென்றனர்.

    இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். சம்பவத்தன்று தனியார் பண்ணைக்கு அருகே மறைந்திருந்த அவர்கள் 3 பேரையும் பிடித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் ஒப்படைத்தார். போலீசார்அவர்களை கைது செய்து இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர்.

    • வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 2 அழகிகளை மீட்டனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் திரு.வி.க. நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விபசார புரோக்கர்கள் மகாலட்சுமி (51), பிரகாஷ் (47), சங்கர் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 அழகிகளை மீட்டனர். தலைமறைவான கவிதா என்கிற மல்லிகா என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் வீடு வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் விபசாரம் செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலத்தில் விபசாரம் தொடர்பாக போலீசார் 16 பேரை கைது செய்து உள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறும்போது, கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வீடு வாடகைக்கு யாராவது கேட்டால் முழுமையாக விசாரணை நடத்தி வீடுகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.

    • வாகனத்தை வழிமறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்ற 3 வாலிபர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • இது குறித்து தாடி க்கொம்பு போலீசார் அவர்களை கைது செய்து வாலிபர்கள் மீது வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 45). இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு செட்டி நாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் திடீரென இவரை மறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இந்த தாக்குதல் குறித்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சப்-இன்ஸ்பெ க்டர் பிரபாகரன், தனிப்பி ரிவு ஏட்டு பழனிச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வழி ப்பறியில் ஈடுபட்டது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் சேர்ந்த சரண்குமார் (21), முருகபவனம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் செல்வராஜ் (21), சூர்யபிரகாஷ் (19) ஆகியோர் என தெரிய வரவே அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்ய ப்பட்ட பணம் மற்றும் டூவீ லரை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து தாடி க்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச லம் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, ஒரு நாட்டு துப்பாக்கி, 4 ஏர்கன் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடமானை வேட்டை யாடி இறைச்சியை வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

    பெரும்பாறை:

    பெரும்பாறை, புல்லா வெளி பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பா ளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது பெரும்பாறை அருகே உள்ள நேர்மலை என்ற பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

    இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது சிலர் விளக்கை கட்டி கொண்டு சுற்றித்திரிந்தனர். இதை த்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது 3 பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடி னர். இதையடுத்து பிடிபட்ட வர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வெள்ளரி க்கரையை சேர்ந்த ஜோதி லிங்கம் (வயது 31), மஞ் சள்பரப்பை சேர்ந்த ரஞ்சித் (33), மதன்குமார் (19 ) என்பதும், கடமானை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, ஒரு நாட்டு துப்பாக்கி, 4 ஏர்கன் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் கைதானவர்க ளிடம் மேல் விசாரணை நடத்தியதில், நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த பாரதிராஜா தனது வாகனத்தில் ஒரு நாட்டு துப்பாக்கியுடன் நத்தம் செந்துறையை சேர்ந்த ராசு என்பவரும் சேர்ந்து வந்த னர். கடமானை வேட்டை யாடி இறைச்சியை வாகன த்தில் கடத்திச் சென்றனர். நாங்கள் வேட்டை யாடிய வன விலங்குகளை பட்டி வீரன்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு விற்பனை செய்வோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து வனத்துறை யினர் வழக்குப்பதிவு செய்து மஞ்சள்பரப்பை சேர்ந்த அய்யப்பன், கட்டக்காட்டை சேர்ந்த பால்பாண்டி, ராசு, பாரதிராஜா சுரேஷ் மற்றும் கடமான் இறைச்சியை கடத்திய வாகனம், ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் தப்பி ஓடிய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    ×