என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் கஞ்சா செடி பயிரிட்டு விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் கஞ்சா செடி பயிரிட்டு விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து சில சமூக விரோத கும்பல்கள் அதிக அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் அருகே அக்கரைக்காடு பகுதியில் கஞ்சா விவசாயம் மேற்கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில், போலீசார் ராமராஜன், காசி, சரவணன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    அப்போது அக்கரைக்காடு பகுதியில் ராஜா, மகேந்திரன், பெனாசீர் ஆகியோரிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா செடிகள் எங்கெங்கு பயிரிட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா செடி வளர்த்த இடம் வனத்துறைக்கு கட்டுப்பட்டதா அல்லது வருவாய் துறைக்கு கட்டுப்பட்டதா என்றும் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×