என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1050 கிலோ குட்கா பறிமுதல்"

    • கண்டமனூர் பகுதியில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படு வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாகன தணிக்கையின் போது 1050 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பகுதியில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படு வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவ தாக வந்த தகவலையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர்.

    அப்போது உசிலம்பட்டி நோக்கி சென்ற வேனை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் 1050 கிலோ குட்கா கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அல்லி நகரத்தை சேர்ந்த ஆனந்த் (26), அமச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்(26), விஜயபிரபாகர்(29) ஆகிய 3 பேரை கைது செய்து 1050 கிலோ குட்காவையும் பறி முதல் செய்தனர். மேலும் அவர்கள் யாரிடமிருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்தார்கள், எங்கு கொண்டு சென்றார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×